Skip to main content

தங்கையே கவலை வேண்டாம்... உனக்கு அண்ணனாக நான் இருக்கிறேன் எனக் கூறிய ஸ்டாலின்!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

இப்போதே அரசியல் கட்சிக் கூடாரங்களிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான விறு விறுப்பு தொடங்கி விட்டது. வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் எடப்பாடி, அங்கிருந்து திரும்பியதும் தேர்தல் வேலைகளில் ஜரூராவார் என்கிறது ஆளும்கட்சித் தரப்பு. தினகரனின் அ.ம.மு.க.வில் மிச்சம் மீதி இருக்கும் பெரும்புள்ளிகளையும் அவர் ஸ்பெ ஷல் மேஜிக் மூலம் தங்கள் பக்கம் அழைத்துக்கொள்வார் என்கிறார்கள்.

 

dmk



தி.மு.க. தரப்பிலும் பரபரப்பு தொடங்கி விட்டது. இந்தமுறை சென்னை மேயருக்கு இளைஞரணி உதயநிதியைக் களமிறக்க வேண்டும் என்று அங்கே பரவலாகக் குரல் கேட்கிறது. இதையறிந்த ஆளும்தரப்பு, தி.மு.க.வுக்கு செக் வைக்க... சென்னை மேயர் பதவியையே மறு சீரமைப்பின் சாக்கில் தலித்துக்கான பதவியாக மாற்றிவிட யோசிப்பது பற்றி நக்கீரனில் எழுதியிருந்தோம்.


இதற்கிடையே பெண்களுக்கான திருச்சி மாநகர மேயர் பதவியை ஆண்களுக்கான பதவியாக மாற்றவும் ஆளும் தரப்பு பரபரக்கிறது. இதையறிந்த மாஜி மந்திரியான தி.மு.க. நேரு, அப்படி திருச்சி மேயர் தொகுதி ஆண் தொகுதியாக மாற்றப்பட்டால், ந.செ.அன்பழகனை நிறுத்த வியூகம் வகுக்கிறாராம். இது குறித்து அன்பழகனை வைத்துக்கொண்டே கட்சிப் பிரமுகர்களிடம் பேசிய நேரு, "மேயர் சீட்டுக்கு "10 ’சி'’தேவைப்படும். ஆளும்கட்சி ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தால், நாம் 500-ஆவது கொடுக்கவேண்டும்''’என்றவர், அன்பழகனைப் பார்த்து, ""அதுக்கு நீ தயாராகு'' என்றாராம். அதேபோல், பகுதிச்செயலாளரான மண்டி சேகரைப் பார்த்து, ’’நீதானே கோட்டத் தலைவர். உன்னை சுத்தியிருக்கிற 5 வார்டுக்கும் நீதான் செலவு பண்ணணும்''’என்று சொன்னதோடு, ஏரியாப் பிரமுகர்களான முத்துசெல்வம், அலெக்ஸ் ராஜா ஆகியோரை தேர்தலில் நிற்க ரெடியாகும்படி சொல்லியிருக்கிறார். எனவே அவர்களும் பரபரப்பாக களமிறங்கத் தொடங்கிவிட்டனர்.
 

 

dmk



ஒருவேளை திருச்சி மேயர் பதவி, இப்போது இருப்பதுபோல் பெண்ணுக்கான பதவியாகவே நீடிக்குமானால், அதற்கு புதுமுகமான கவிஞர் செல்வராணி நிறுத்தப்படலாம் என்கிறார்கள். காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றிய செல்வராணி, கலைஞர் மறைந்தபோது இரங்கல் கவிதை எழுதினார் என்பதற்காக, அவரை சஸ்பெண்ட் செய்து விட்டனர். இதனால் கொதிப் படைந்த அவர், "நான் அப்பா போல் மதிக்கும் ஒரு தலைவருக்கு இரங்கல் தெரிவிப்பது கூட குற்றமா? எனக்கு இந்த போலீஸ் வேலையே வேண்டாம்'' என்று வெளியேறிவிட்டார். இதையறிந்த ஸ்டாலின், திருச்சி விசிட்டின் போது அவர் வீட்டிற்கே சென்று, ’தங்கையே, கவலை வேண்டாம். உனக்கு அண்ணனான நான் இருக்கிறேன்''’என்று சொல்லி விட்டு வந்தார். எனவே செல்வராணிக்கு மேயர் சீட் தரப்படலாம் என்கிறார்கள் அழுத்தமாய். இதேபோல் தமிழகம் முழுக்கத் தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்துவிட்டது.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.