Skip to main content

விண்வெளியில் புதிய வரலாறு படைத்த தனியார் நிறுவனத்தின் ராக்கெட்

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

பூமியின் மேற்பரப்பில் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ருவு டிராகன் எனும் ராக்கெட் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைந்துள்ளது. 

 

spacex

 

சர்வதேச வரலாற்றில் முதல் முறையாக ஒரு தனியார் ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைவது இதுவே முதல்முறை. அமெரிக்காவைச் சேர்ந்த எலன் மஸ்க் என்பவரால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. வெகுநாட்களாகவே இந்நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டே இந்நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு ஸ்பேஸ்-எக்ஸ் மூலம் மனிதர்கள் பயணிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அனுப்பியிருக்கும் க்ருவ் டிராகன் அதற்கான முன்னோட்டோமே என்பது குறிப்பிடத்தக்கது. 

 

க்ருவ் டிராகன் ராக்கெட்டில் ஒரு மனித உருவ பொம்மையும், லிட்டில் எர்த் எனும் குட்டி பொம்மையும் பயணித்தன. இந்த ராக்கெட், சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் ஐந்து நாட்கள் இருக்கும் பின் பூமிக்கு திரும்புகிறது. 

 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், 1998-ல் நிறுவப்பட்டது. புவி பரப்பில் இருந்து 400 கி.மீ உயரத்தில் இது அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த 4 விண்வெளி வீரர்கள்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

4 astronauts reach the International Space Station

 

விண்வெளி வீரர்கள் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்ததாக நாசா அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது.

 

இந்தப் பயணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகியோர் அடங்கிய 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இவர்கள் ஒரு வருட காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

அரசியல், சினிமா, விளையாட்டு யாரும் விதிவிலக்கல்ல; பாரபட்சமின்றி எலான் மஸ்க் நடவடிக்கை

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Politics, cinema, sports are no exception; Elon Musk Action Without Discrimination

 

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையைக் கொண்டு வந்தார்.

 

மேலும் மாத சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில சினிமா பிரபலங்களுக்கு ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதன்படி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் போன்றோரின் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

 

அரசியல் தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ராகுல் காந்தி போன்றோரின் தனிப்பட்ட கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரபலங்கள் சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரின் ப்ளூ டிக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இனி மாத சந்தாவாக ரூ.900 கட்டினால் மட்டுமே பிரபலங்களின் கணக்கு அதிகாரப்பூர்வமானது என்பதற்கான ப்ளூ டிக் வழங்கப்படும்.