Skip to main content

சிவசங்கரின் ஆதிகால லீலைகள்! மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021
ddd

 

"சிவசங்கர் பாபா மீதான வழக்கு மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது' என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

 

கடந்த வாரம் சென்னை மாநகரக் குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சிவசங்கரன்மேல் புகார் சொன்ன ஒரு மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியின் வாக்குமூலத்தைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

 

அந்த வாக்குமூலத்தில், "அப்போது எனக்கு அதிகமாக வியர்க்கும். தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுஷ்மிதாதான், பாபாவின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். சாதாரணமாக அவர் கட்டிப்பிடித்து தலையில் தொட்டு என்னை ஆசிர்வதிப்பார் என்றுதான் போனேன். உள்ளே போகும்போதே சுஷ்மிதா, 'பாபா கடவுளின் அவதாரம். அவர் உண்மையான கிருஷ்ண கடவுள். அவர் உன்னை ஆலிங்கனம் செய்வார்' என்பார். 'ஆலிங்கனம் என்றால் என்னவென' கேட்டேன். 'அவர் உன்னை கட்டிப் பிடிப்பார்' என்றார். 'அவ்வளவுதானே' என நான் போனேன்.

 

போனவுடன் என் உடையைக் கழட்டி உடலை சுத்தம் செய்யச் சொன்னார். அவர் வசிக்கும் தனிப்பட்ட அறை பிரம்மாண்டமாக இருந்தது. அதில் இடதுபுறம் பாத்ரூம் இருக்கும் என சுஷ்மிதா சொல்லியிருந்தார். நான் அங்கு சென்று உடலைக் கழுவினேன். உடலைத் துடைக்க துண்டை பாபாவே கொண்டுவந்து தந்தார். அதன்பிறகு பள்ளிச் சீருடையையே நான் அணிந்து நின்றேன். சிவசங்கர் பாபா அருகே வந்ததோடு, மிகமிக அழுத்தமான முத்தம் தந்தார். அது எனது வாயையும் மூக்கையும் அடைந்து... மூச்சுத் திணறலை உருவாக்கியது. நான் அழுது ஓவென கத்தினேன். 'ஏன் கத்தினாய்?' என எனது கதறலைக் கேட்ட பாபா விடுவித்தார்.

 

நான் அந்தளவுக்கு கதறியும் எனது கதறலைக் கேட்டு யாரும் உதவிக்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து என்னை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொட்டார். அங்கெல்லாம் எனக்கு வலித்தது. காயங்கள் உருவானது. ரத்தம் வழியும் காயங்களுடன் கண்ணீரோடு நான் கத்தக் கத்த... சிவசங்கரன் ஆக்ரோஷமாக, அவன் செய்ய நினைத்ததைச் செய்தான். என் கதறலை யாரும் கேட்கவில்லை அரைமணி நேரம் கழித்து என்னை விடுவித்தான்.

 

'இங்கு நடந்ததை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னால் தொலைச்சிடுவேன்' என சொல்லிவிட்டு, 'இதை சாப்பிடு' என மது கலந்த கூல்டிரிங்ஸைக் கொடுத்தான். அதைச் சாப்பிட்டவுடன் எனக்கு மயக்கம் வந்தது. அரைமயக்கத்தில் தள்ளாடியபடி வந்த என்னிடம் சுஷ்மிதா மிரட்ட ஆரம்பித்தார். 'நடந்ததை யார்கிட்டேயும் வெளியே சொன்னால் அவ்வளவுதான்... உன் குடும்பத்தையே தொலைச்சிடுவேன். பாபா கடவுள். அவரின் உடல் உன்மீது பட நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என என்னை கைத்தாங்கலாகவே பள்ளி விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

 

என்னை அந்த நிலையில் பார்த்த என் நண்பர்கள், கன்னத்திலும் கால்களிலும் வழிந்த ரத்தத்தைப் பார்த்து, 'என்ன ஆச்சு?' எனக் கேட்டார்கள். அதற்கு சுஷ்மிதா, 'அவர் கீழே விழுந்துவிட்டார்' என கூறி சமாளித்தார். அறையில் இரண்டு நாட்கள் நான் எழுந்திருக்கவே இல்லை. எனக்கு ஆறுதல் சொல்ல வந்த மாணவர்கள், 'இங்கே இப்படிதான் நடக்கிறது' எனச் சொல்லி... இயலாமல் அழுதார்கள்.

 

சுஷ்மிதா, தீபா, பரத் ஆகியோர், 'அவர் தாத்தா மாதிரி. அவர் கட்டிப்பிடித்தால் என்ன தவறு' என கேட்டார்கள். 'தாத்தா என்றால் பேத்திகளை மட்டும்தான் கட்டிப் பிடிப்பாரா? பேரன்களை ஏன் கட்டிப்பிடிக்க மாட்டேன்கிறார்?' என கோபமாக திரும்பக் கேட்டேன். என்னைப் பற்றி பாபாவிடம் போய் கோள்மூட்டி விட்டார்கள். சிவசங்கரன் என்னைக் கொன்னுவிடுவேன் என மிரட்ட, நான் உடல் வலியோடு அமைதியானேன்'' என கண்ணீர் வழிய இன்னமும் அந்தப் பள்ளியின் மாணவியான அந்த இளம்பெண் சொன்னதை வார்த்தை மாறாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்த பெஞ்ச் க்ளார்க்கும், வாக்குமூலத்தைப் பதிவுசெய்த நீதிபதியும் அழுதுவிட்டார்கள் என்கிறார் அந்தப் பெண்ணை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார்.

ddd

"இந்த ஒரு வாக்குமூலம் போதும்... சிவசங்கரன்மேல் போலீசார் போட்டுள்ள வழக்குகள் சட்டபடி செல்லுபடியாகும். இதுபோல பதினைந்துக்கும் மேற்பட்ட புகார்தாரர்களின் வாக்குமூலங்களைத் தமிழ்நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் பதிவு செய்தார்கள். ஆசிரியையான கீதா மற்றும் பாரதிக்கு எதிராகவும் மாணவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். இந்த இருவரும் சிவசங்கர் பாபாவிற்கு எப்படி உடந்தையாக இருந்து மாணவிகளைச் சீரழித்தார்கள் என கோவை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

 


இப்படி வாக்குமூலத்தைப் பதிவுசெய்தால் எந்த நீதிமன்றமும் சிவசங்கரனுக்கு ஜாமீன் தராது என்பது மட்டுமல்ல சிவசங்கர் இதெல்லாம் பொய்யென சொல்லவே முடியாது. இது போலீசார் மிரட்டி வாங்கிய வாக்குமூலம் என வாதிடவும் முடியாது" என்கிறார்கள் காவல்துறை தரப்பில் உறுதியான குரலில்.

 

இதுதவிர சிவசங்கரின் ஆதிகால லீலைகளையும் தோண்ட ஆரம்பித்தனர். பிரபல திமுக பிரமுகரும் 'சித்தி' சீரியலில் நடித்தவருமான தமிழ்க்குமரன் என்பவரின் மகன் விஷ்வா. சினிமா நடிகரான இவர் வசம் சிவசங்கர் பாபா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இருந்ததென அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துவிட்டது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

 

இந்நிலையில், சிவசங்கரன் ஆதரவாளர்கள் யூடியூபில் நடத்தும் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவும் போராடும் போலீசார், பாபாவின் உடல்நிலையை நினைத்து யோசிக்கிறார்கள். "வாழ்நாளெல்லாம் அயோக்கியத்தனம் செய்துவிட்டு உடலில் வலு இருக்கும்போது மாட்டாமல், 73 வயதில் சிக்கிய சிவசங்கரனைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என தெரியவில்லை" என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருவண்ணாமலை தீப திருவிழா; பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Thiruvannamalai Dipa Festival; Attention bus passengers

 

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீப பெருவிழா நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும்,  25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்தும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்புப் பேருந்துகள் மூலம் 6947 நடைகள் (trip) பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

 

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Thiruvannamalai Dipa Festival; Attention bus passengers

 

அதன்படி வேலூர் ரோடு அண்ணா ஆர்ச் பகுதியில் (Anna Arch) அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அவரலூர்பேட்டை ரோடு SRGDS பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் ரோடு - ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

 

வேட்டவலம் ரோடு சர்வேயர் நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திருக்கோவிலூர் ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாசலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல். திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

 

Thiruvannamalai Dipa Festival; Attention bus passengers

 

மணலூர்பேட்டை ரோடு - செந்தமிழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். செங்கம் ரோடு - அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டனில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். காஞ்சி ரோடு டான் பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

 

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும் பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.