Skip to main content

“அண்ணாமலை செய்யும் விஷயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது”  -  சித்திக்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 Siddique interview

 

தற்கால அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்மோடு திமுக செய்தித் தொடர்பாளர் சித்திக் பகிர்ந்துகொள்கிறார்

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கேட்டால், அதற்கு ஒப்புதல் தர ஆளுநர் மறுக்கிறார். தனக்கு அது குறித்த தகவல்களே வரவில்லை என்று பொய் சொன்னார். ஆதாரங்களைக் காட்டி நாம் உண்மையை நிரூபித்தோம். அண்ணாமலை சமீபத்தில் ஆளுநரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது அதிமுகவினரின் ஊழல் குறித்து பேசியிருப்பாரா என்கிற சந்தேகம் எழுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று இதே அண்ணாமலைதான் கூறினார்.

 

ஊழலின் மொத்த உருவமே பாஜக தான். பி எம் கேர்ஸ் மூலம் அரசுக்குப் பல கோடி ரூபாய் நிதி வந்தது. முதற்கட்டமாகவே 3500 கோடி ரூபாய் நிதி வந்தது. அந்த நிதி குறித்து கேள்வி எழுப்பியபோது, இது அரசு நிறுவனமே அல்ல என்று பதிலளித்தனர். அது அரசு நிறுவனம் இல்லையென்றால், பிரதமர் எதற்காக அதற்கு விளம்பரம் செய்தார்? கர்நாடக பாஜக ஆட்சியில் நடைபெற்ற 40% ஊழல் குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு பல எம்.எல்.ஏக்களை பாஜக பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதற்காகக் கிட்டத்தட்ட 6000 கோடி செலவு செய்தது.

 

தேர்தல் பாண்ட் மூலம் வசூலிக்கப்படும் நிதி குறித்த தகவலை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக அரசு கூறுகிறது. அண்ணாமலை செய்யும் விஷயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது. எந்த வழக்கு வந்தாலும் நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். பாஜக ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்களில் விளம்பரத்துக்கு மட்டும்தான் அதிகம் செலவு செய்கிறார்கள். மணிப்பூர் சம்பவம் இன்று இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இவ்வளவு நடந்தும் பிரதமர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். 

 

கேள்விகளுக்கு அவரால் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி பாஜகவை பயமுறுத்தியிருக்கிறது. சரியான கூட்டணி அமைத்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சிகளுக்கும் காட்டினார். அடிப்படை மனிதநேயமற்றவர் சீமான். வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றி அவர் பேசிய பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் இருக்கின்றன. பாஜகவின் கொள்கைகளை வேறு வகையில் பேசக்கூடியவர்தான் அவர். இன்று இந்தியாவில் பாஜகவை எதிர்க்கக் கூடிய வலிமை மிகுந்த தலைவர் முதல்வர் தளபதி தான். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பதில் அவர்தான் முன்வரிசையில் நிற்கிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு” - சு.வெங்கடேசன் எம்.பி.

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Modi government has staged another injustice Su Venkatesan MP

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி இருந்து. இந்த நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி இருந்தனர். மேலும் நன்னடத்தை குழுவின் இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

Modi government has staged another injustice Su Venkatesan MP

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

‘நாளை என் வீட்டிற்கு  சி.பி.ஐ வரும்; அடுத்த 6 மாதத்திற்குள் கைது செய்யப்படுவேன்’- மஹுவா மொய்த்ரா

Published on 08/12/2023 | Edited on 09/12/2023
Mahua Moitra said that the BJP government will arrest me within the next 6 months

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது. 

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து, இன்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துர்க்கை வந்துவிட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம். துணிகளை உருவ துவங்கிய இவர்கள், தற்போது மகாபாரத போரை பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் புகழ்மிக்க கவிஞரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ராம்தாரி சிங் தினகரின் வரியை மேற்கோள் காட்டி, “ஒரு மனிதன் அழியும் போது முதலில் மனசாட்சி மரணிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

பின்னர், மக்களவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

நாடாளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஹுவா மொய்த்ரா, “அதானிக்காக மட்டுமே ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது; அதானி மீதான ரூ.13,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் புகாரில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் என்ன செய்தது; அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது. எனது பதவியை பறித்து வாயை அடைப்பதன் மூலம், அதானி விவகாரத்தை மறைக்க முடியாது; சி.பி.ஐ. நாளை என் வீட்டிற்கு அனுப்பப்படும்; அடுத்த ஆறு மாதத்திற்குள் என்னை கைது செய்வார்கள்; இது நிச்சயம்; எனக்கு 49 வயதாகிறது. இன்னும் 30 வருடங்களுக்கு நான் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும், வீதிகளிலும் போராடுவேன். தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.