Skip to main content

எங்களுக்கும் போலீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க... காசிக்கு ஸ்கெட்ச் போடும் முக்கியப் புள்ளிகள்... விசாரணையில் வெளிவந்த தகவல்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

suji

 

இந்த விசயத்தில் என் கூட இருந்திட்டு இப்பம் என்னையே அழிக்க நினைக்கும் அவர்களையும் காட்டி கொடுப்பேன்னு சிறைக்குள்ளேயிருந்து உறவினர்களிடம் கூறிய காசியின் ஆவேசத்தால் அவனின் வி.ஐ.பி. கூட்டாளிகளுக்கு கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

ஏற்கனவே காசி விசயத்தில் லோக்கல் போலீசின் விசாரணையில் இருந்து தப்பித்த அவனின் நெருங்கிய வி.ஐ.பி. கூட்டாளிகள் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. கைக்குச் சென்றதும் இதில் அந்தக் கூட்டாளிகள் சிக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில்தான் காசியை அடுத்து கைது செய்யப்பட்ட அவனின் நண்பன் டைசன் ஜினோவையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பாளையங்கோட்டை சிறையில் இருந்து கடந்த 15-ஆம் தேதி 5 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.

 

இந்த விசாரணையில் காசியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அவனின் கூட்டாளிகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லையென்றும் மேலும் அவனை 18-ஆம் தேதி இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே லோக்கல் போலீசார் கைப்பற்றாத, நாகர்கோவில் வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காசிக்கு வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை கைப்பற்றினார்கள். இதைத் தவிர காசியின் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

காசியை சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்ட சதி நடப்பதாக அவனது உறவினர்களிடம் பதட்டம் தெரிகிறது. காசியின் தந்தை தங்க பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருக்கிறார். கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தனது மகன் மீது பொய்ப் புகாரில் குண்டாஸ் போட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

suji

 

காசியின் உறவினர்கள் சிலரிடம் நாம் பேசிய போது... "காவல் துறையும் சி.பி.சி.ஐ.டி.-யும் காசிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதைவிட அவனோடு சேர்ந்து எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் அக்கறை எடுத்துள்ளது. இதில் அவனுங்கள காசி காட்டி கொடுத்தாலும் போலீஸ் காட்டி கொடுக்காது. பெரிய இடத்து ஆட்களின் மானம் போயிடும்.

 

எங்களுக்கும் போலீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்க அரசல் புரசலாக ஒரு தகவலைச் சொல்லுறாங்க குண்டாஸ்னால குறைஞ்சது 10 மாசமாவது ஜெயில்ல இருக்கணும் அந்த நேரத்துல ரவுடிகளை வச்சி உள்ளேயே அவன தீர்த்துக் கட்டவும் வாய்ப்பு இருக்கு. அதனால குண்டாஸை உடைச்சி அவன வெளியே கொண்டு வாங்கனு சொல்லுறாங்க என்கிறார்கள் அதிர்ச்சி விலகாமல்.

 

இந்தச் சம்பவம் பற்றி உளவுத்துறை நண்பர் ஒருவரிடம் பேசினோம். “காசியின் உறவினர்கள் சந்தேகப்படுறது உண்மைதான். காசியின் கூட்டாளிகளில் முக்கியமான ஒன்றிரண்டு பேரை காப்பாற்றுவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்ட ஒன்றிரண்டு விஐபி குடும்பப் பெண்களையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதால் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

 

மேலும் காசி யாரை காட்டிக்கொடுப்பான் என நினைக்கிறானோ அவனுங்க பிரபல ரவுடிகளின் நட்பில் இருப்பவர்கள். நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து ரவுடி லிங்கத்தை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததை யாரும் மறக்க முடியாது. அதனால் பயமா இருக்கு. என்கவுண்ட்டர் வரைக்கும் போகலாம். குண்டாஸ் குற்றவாளிகளை நாகர்கோவில் சிறையில் அடைக்க முடியாது பாளையங்கோட்டையில்தான் அடைக்க வேண்டும் ஆனால் காசியை சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்து 19-ஆம் தேதி நாகர்கோவில் சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இதுவும் அவனின் உறவினர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியிருக்கும்.

 

http://onelink.to/nknapp

 

காசியின் வழக்கை பொறுத்தவரை போலீசுக்கு எந்தவித தலைவலியையும் ஏற்படுத்தாத ரீதியில் கொண்டு செல்லணும்னு நினைக்கிறாங்க. இந்த நிலையிலதான் காசிமீது போட்ட குண்டாஸ் பொய்ப் புகார்னு அப்பன்காரரும் கோர்ட்டுக்குப் போய் இருக்கார். மேலும் பாலியல் சம்பவம்னாலே பலரும் பல ரீதியில் போலீஸ்மீது சந்தேகம் வச்சி பேசுறாங்க. புகார் கொடுத்தவங்ககூட போலீசுக்கு சரியான ஒத்துழைப்பும் கொடுக்கல. இதெல்லாம் போலீசுக்கு ஒரு விதத்தில் நெருக்கடிய கொடுக்குது" என்றார்.

 

காசியின் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசைவிட அவனின் கூட்டாளிகளும் பாதிக்கப்பட்ட வி.ஐ.பி. குடும்பத்தினரும் வேகமாக உள்ளனர்.

 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.