Skip to main content

எங்களுக்கும் போலீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க... காசிக்கு ஸ்கெட்ச் போடும் முக்கியப் புள்ளிகள்... விசாரணையில் வெளிவந்த தகவல்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

suji

 

இந்த விசயத்தில் என் கூட இருந்திட்டு இப்பம் என்னையே அழிக்க நினைக்கும் அவர்களையும் காட்டி கொடுப்பேன்னு சிறைக்குள்ளேயிருந்து உறவினர்களிடம் கூறிய காசியின் ஆவேசத்தால் அவனின் வி.ஐ.பி. கூட்டாளிகளுக்கு கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

ஏற்கனவே காசி விசயத்தில் லோக்கல் போலீசின் விசாரணையில் இருந்து தப்பித்த அவனின் நெருங்கிய வி.ஐ.பி. கூட்டாளிகள் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. கைக்குச் சென்றதும் இதில் அந்தக் கூட்டாளிகள் சிக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில்தான் காசியை அடுத்து கைது செய்யப்பட்ட அவனின் நண்பன் டைசன் ஜினோவையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பாளையங்கோட்டை சிறையில் இருந்து கடந்த 15-ஆம் தேதி 5 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.

 

இந்த விசாரணையில் காசியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அவனின் கூட்டாளிகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லையென்றும் மேலும் அவனை 18-ஆம் தேதி இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே லோக்கல் போலீசார் கைப்பற்றாத, நாகர்கோவில் வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காசிக்கு வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை கைப்பற்றினார்கள். இதைத் தவிர காசியின் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

காசியை சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்ட சதி நடப்பதாக அவனது உறவினர்களிடம் பதட்டம் தெரிகிறது. காசியின் தந்தை தங்க பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருக்கிறார். கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தனது மகன் மீது பொய்ப் புகாரில் குண்டாஸ் போட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

suji

 

காசியின் உறவினர்கள் சிலரிடம் நாம் பேசிய போது... "காவல் துறையும் சி.பி.சி.ஐ.டி.-யும் காசிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதைவிட அவனோடு சேர்ந்து எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் அக்கறை எடுத்துள்ளது. இதில் அவனுங்கள காசி காட்டி கொடுத்தாலும் போலீஸ் காட்டி கொடுக்காது. பெரிய இடத்து ஆட்களின் மானம் போயிடும்.

 

எங்களுக்கும் போலீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்க அரசல் புரசலாக ஒரு தகவலைச் சொல்லுறாங்க குண்டாஸ்னால குறைஞ்சது 10 மாசமாவது ஜெயில்ல இருக்கணும் அந்த நேரத்துல ரவுடிகளை வச்சி உள்ளேயே அவன தீர்த்துக் கட்டவும் வாய்ப்பு இருக்கு. அதனால குண்டாஸை உடைச்சி அவன வெளியே கொண்டு வாங்கனு சொல்லுறாங்க என்கிறார்கள் அதிர்ச்சி விலகாமல்.

 

இந்தச் சம்பவம் பற்றி உளவுத்துறை நண்பர் ஒருவரிடம் பேசினோம். “காசியின் உறவினர்கள் சந்தேகப்படுறது உண்மைதான். காசியின் கூட்டாளிகளில் முக்கியமான ஒன்றிரண்டு பேரை காப்பாற்றுவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்ட ஒன்றிரண்டு விஐபி குடும்பப் பெண்களையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதால் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

 

மேலும் காசி யாரை காட்டிக்கொடுப்பான் என நினைக்கிறானோ அவனுங்க பிரபல ரவுடிகளின் நட்பில் இருப்பவர்கள். நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து ரவுடி லிங்கத்தை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததை யாரும் மறக்க முடியாது. அதனால் பயமா இருக்கு. என்கவுண்ட்டர் வரைக்கும் போகலாம். குண்டாஸ் குற்றவாளிகளை நாகர்கோவில் சிறையில் அடைக்க முடியாது பாளையங்கோட்டையில்தான் அடைக்க வேண்டும் ஆனால் காசியை சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்து 19-ஆம் தேதி நாகர்கோவில் சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இதுவும் அவனின் உறவினர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியிருக்கும்.

 

http://onelink.to/nknapp

 

காசியின் வழக்கை பொறுத்தவரை போலீசுக்கு எந்தவித தலைவலியையும் ஏற்படுத்தாத ரீதியில் கொண்டு செல்லணும்னு நினைக்கிறாங்க. இந்த நிலையிலதான் காசிமீது போட்ட குண்டாஸ் பொய்ப் புகார்னு அப்பன்காரரும் கோர்ட்டுக்குப் போய் இருக்கார். மேலும் பாலியல் சம்பவம்னாலே பலரும் பல ரீதியில் போலீஸ்மீது சந்தேகம் வச்சி பேசுறாங்க. புகார் கொடுத்தவங்ககூட போலீசுக்கு சரியான ஒத்துழைப்பும் கொடுக்கல. இதெல்லாம் போலீசுக்கு ஒரு விதத்தில் நெருக்கடிய கொடுக்குது" என்றார்.

 

காசியின் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசைவிட அவனின் கூட்டாளிகளும் பாதிக்கப்பட்ட வி.ஐ.பி. குடும்பத்தினரும் வேகமாக உள்ளனர்.

 

 

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார்.