Skip to main content

உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவுநீர் கலப்பு; உத்தரவிட்ட முதல்வர், கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கேள்வி கேட்கும் நீதிமன்றம்! 

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

Sewage mix in Uyyakkondan river; Chief Minister ordered, the district administration to find out! Court of Question!

 

 

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு.

 

விவசாயிகளுக்கான கொடையாக திகழ்ந்த இந்த கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ள காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான 'உய்யக்கொண்டான்' எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.

 

பேட்டைவாய்த் தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.

 

திருச்சி மாநகரில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து திருச்சி காங்கிரஸ் சார்பில் திருச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் 28. 8 .2017 அன்று 05 /78 9 /2017 வழக்கு தொடரப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதற்கு அதிகாரிகள் யாரும் செவி சாய்க்கவில்லை.

 

மேலும் உய்யக்கொண்டான் வாய்க்காலை  இதனால்வரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் இருப்பதற்கு பணியை காரணம் காட்டி கொண்டிருக்கின்றார்கள் அதிகாரிகள்.

 

1.9. 2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றில் நீதி அரசர், திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் எந்தெந்த இடத்தில் கழிவு நீர் கலக்கிறது என்ற விளக்கத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த 28. 8. 2017  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சார்லஸ் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதற்கு பதில் அளிக்க இந்த அரசு கட்டமைப்பு முன்வரவில்லை.

 

Sewage mix in Uyyakkondan river; Chief Minister ordered, the district administration to find out! Court of Question!
சார்லஸ்


ஏன் இவ்வளவு மெத்தனம் என்று தெரியவில்லை அரசும் அதிகாரிகளும் நீதிமன்றத்திற்கு உடனடியாக உண்மையை தெரியப்படுத்த வேண்டும். மேலும் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்ற தகவல்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொன்மலை கோட்டம் நீதிமன்றம் பாலம் அருகே உள்ள உய்யக்கொண்டன் வாய்க்காலில் 11 அடுக்குமாடி கட்டிடத்தின் கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதாக தெரிவித்து உரிய நடவடிக்கை தொடருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இதன்பேரில் சுகாதார அலுவலரின் அறிக்கையின்படி கோர்ட் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால், ரயில்வே ஜங்ஷன், திரையரங்கு ரோடு, DCTC டிப்போ, வருமானவரி அலுவலக பின்புறம், அலெக்சாண்ட்ரியா ரோடு, இராணுவத்தினர் குடியிருப்பு , ஐயப்பன் கோவில் வழியாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. அதில் அப்பகுதியில் வரும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் வாய்க்காலில் கலக்கிறது என்ற விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை எனக்கு பதில் அளித்துள்ளது. என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட, மாவட்ட பொது செயலாளர் சார்லஸ் கூறுகிறார்.

 

‘நடந்தாய் வாழி காவேரி’ என்று காவிரியின் பெருமை பேசும் திருச்சி காவிரியில் ஒரு பிரிவாக உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில்  கழிவுகள் கலந்து  நீரை மாசு கலந்து  கொண்டிருப்பதை தடுக்க எப்பொழுது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கப் போகிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு உய்யக்கொண்டான் வாய்க்காலையும்  காவேரியையும் காப்பதாகவும் தண்ணீர் நிலம் மாசடைவதை தடுப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

மேலும் இது குறித்து வழக்கு 28 .8 .2017 அன்று 05/789/2017 என்ற வழக்கும், தொடர்ந்து உய்யக்கொண்டானை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம் 30 .4. 2018 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

 

உய்யக்கொண்டான் சென்னை கூவம் போல் மாறி வருகிறது. கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கழிவு நீர் கலக்கிறது என்றும் அது தடுக்கப்படும் என்றார். ஆனால் தற்போதுவரை அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே தற்போது உள்ள நிலை.

 

 

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.