தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறை நடந்துள்ளது. ஆனால் அது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பிரதமர் மோடியோ ஒரு சிறிய வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இதை எல்லாம் பார்க்கின்ற போது வேதனையாக இருக்கின்றது. இந்த கொடுமையானவர்கள் நிறைந்துள்ள தேசத்திலா நாம் வாழ்கிறோம் என்ற அச்ச உணர்வு இயல்பாகவே நமக்கு ஏற்படுகின்றது. கரோனா வைரஸை விட கொடுமையானவர்களிடம் நாடு மாட்டிக்கொள்ளது. இப்போது புதிதாக வங்கி திவாலாகும் சீசன் ஆரம்பித்துள்ளது. பஞ்சாப் வங்கியை முடித்துவிட்டு தற்போது எஸ் பேங்கை முடித்துள்ளார்கள். வங்கிகள் ஏன் திவாலாகின்றது. எதற்காக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். பொதுச்சொத்து என்று நாட்டில் ஏதாவது ஒன்று இருக்கிறதா? பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், போக்குவரத்து, ராணுவ தடவாளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துள்ளார்கள். இதையெல்லாம் தனியாருக்கு கொடுத்துவிட்டு கோயில்களை அரசு எடுத்துக்கொள்ள விரும்புகிறது. அரசு நடத்துவதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் நடத்த வேண்டிய சூழ்நிலைகளை உண்டாக்க பார்க்கிறார்கள். உலகத்திலேயே 37 ஆயிரம் கோயில்களை கொண்ட ஊர் நம்முடைய தமிழர் நாடுதான்.
இப்போதெல்லாம் அரசியல் கட்சி பதவிகளில் கூட தலைவர் என்று சொல்கிற மாதிரியான பதவிகளை யாரும் விரும்புவதில்லை. மாவட்ட தலைவர் என்பதை விட மாவட்ட செயலாளர் என்று அழைப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். இந்த ரஜினிகாந்தை எல்லாம் தலைவர் என்று அழைப்பதனால் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிவி்ட்டார். ஏன் என்றால் அவரை யாரும் மதிப்பதில்லை. அவரெல்லாம் ட்விட்டரை விட்டு வெளியேற வேண்டிய ஆள் இல்லை. நாட்டை விட்டே வெளியேற வேண்டிய ஆட்கள் அவர்கள். மதிக்கின்ற மாதிரி அவர்கள் ஏதாவது செய்தால் மதிப்பார்கள். சிஏஏ-வை எதற்காக எதிர்க்கிறார்கள் என்று கேட்கிறார்கள், சிஏஏ தேவையில்லை, அதனால் எதிர்க்கிறேன். நான் இவ்வளவு நாட்களாக சொல்லிவந்ததை இப்போது தெலுங்கானா முதல்வர் சொல்லிவிட்டார். எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லை, என்னுடைய அப்பா, அம்மாவுக்கு நான் எப்படி தருவேன் என்று அவர் கேட்பதைத்தான் நான் பல நாட்களாக கூறிவருகிறேன்.
மாட்டுக்கறி நாம தின்னா அடிப்பார்கள். ட்ரம்ப் வந்தால் ஐந்து விதமாக சமைத்து தருவார்கள். அவரிடம் சொல்ல வேண்டியது தானே, மாட்டை நாங்கள் புனிதமாக கருதுகிறோம் என்று, ஏன் சொல்லவில்லை. ட்ரம்ப் இருக்கும் போது நம்முடைய பிரதமர், ராணுவ அமைச்சர் எல்லாம் எப்படி நின்றார்கள், பள்ளிக்கூடத்தில் பிரேயர் பாடும்போது மாணவர்கள் நிற்பதை போல்தானே நின்றார்கள். ஆசாத் காஷ்மீரை மீட்போம் என்று ஆவேசமாக பேசும் இவர்கள், சீனா ஆக்கிரமிப்பை பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள். அவர்களிடம் உண்மையான ராணுவம் இருக்கிறது. போதாக்குறைக்கு கரோனா வைரஸை வேறு வைத்திருக்கிறார்கள். இனி போர் என்றால் பயோவார் தான் நடக்கும். இந்த இடைப்பட்டகாலத்தில் தான் இத்தனை ஆட்டம்,பாட்டம், சொத்து சேர்த்தல் என அனைத்தும் நடைபெறுகிறது. நீங்கள் பணக்காரன், வசதி படைத்தவன் என்றெல்லாம் கொரோனா பார்க்காது. எனவே ஆட்டம் போடாதீர்கள்" என்றார்.
"கரோனா வைரஸை விட கொடுமையானவர்களிடம் நாடு உள்ளது.." - சீமான் பேச்சு!
Next Story
'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.
Next Story
“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்
கடலூர் நாடளுமன்ற தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்
அப்போதெல்லாம் வள்ளலாரை தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .
ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள். திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.
தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.
மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம் வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்