Skip to main content

“பாஜக வேல் யாத்திரை செய்து நாம் தமிழர் கட்சியை வளர்க்கிறது” -சீமான் கிண்டல்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
jkl

 

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் பதில்கள் வருமாறு, "ஏழு பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு அழுத்தங்களை நாம் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து கொடுத்து வந்தோம். அதன் ஒரு கட்டமாக தற்போது அதற்கான கால சூழ்நிலைகள் கனிந்து வருகின்றன. ஆனால் இதிலும் மத்திய அரசு சித்து விளையாட்டை விளையாட முனைகிறது. ஆளுநர் தேவையின்றி காலம் கடத்துகிறார். உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யலாம் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது. 

 

ஆனால் ஆளுநர் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறார். தற்போது பாஜக தோவையில்லாத விளையாட்டை விடையாடி வருகிறது. அயோத்தியில் ராமரை எப்படி தொட்டு விளையாடினார்களோ, கேரளாவில் எப்படி ஐயப்பனை தொட்டி ஆட்டம் காட்டினார்களோ அதேபோல் இங்கே வேலை தொட்டு பார்க்கிறார்கள். அவர்கள் வேலை இப்போதுதான் தொடுகிறார்கள். அவர்கள் கட்சி ஆரம்பித்து எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது. ஆனால் தற்போதுதான் வேல் ஞாபகத்துக்கு வருகிறதா? நான் இவர்களுக்கு முன்பே வேலை கையில் எடுத்தவன். எனவே இவர்கள் வேல் யாத்திரை செய்வது என்பது என்னை வளர்ப்பது போலத்தான். பாஜக வேலை தூக்கிக்கொண்டு சென்று நாம் தமிழர் கட்சியை மக்கள் மனதில் விதைக்கின்றது. 

 

சினிமாவில் டூப் போடுவார்கள். நான் ஒரு கதாநாயன் என்றால், எனக்கு பதில் மற்றொருவர் டூப் போட்டு நடிப்பார்கள். அவர்கள் என்ன கஷ்டப்பட்டு நடித்தாலும் கைத்தட்டு எனக்குத்தான் கிடைக்கும். அதை போல இவர்கள் வேல் எடுத்துக்கொண்டு என்ன குட்டிகரணம் போட்டாலும் அதன் முழு பலனும் எங்களுக்குத்தான் வரும். எங்களை தான் மக்கள் மன்றத்தில் அவர்கள் நினைவுப்படுத்தி வருகிறார்கள். எனவே தேவையில்லாத ஆணியை பாஜக பிடுங்கி வருகிறது. எனவே அது மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம். நான் என்ன பேசி வந்தேனோ அதையே தற்போது பாஜகவினர் பேசி வருகிறார்கள். ஆடு மாடு வளர்க்க வேண்டும், இயற்கை விவசாயம் என்கிறார்கள்.

 

இதை நான் இன்றைக்கு நேற்றைக்கா பேசி வருகிறேன். பத்து ஆண்டுகளாக தொண்டை தண்ணி போகுமளவுக்கு தொடர்ந்து பேசி வருகிறேன். இவர்கள் இன்றைக்கு வந்துவிட்டு அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியபோது கேலி செய்து சிரித்தார்கள். தற்போது ஆட்டை தூக்கிக்கொண்டு தோளில் போட்டுக்கொண்டும் படம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லை. இந்த தமிழ்நாடு என்ற கோட்டைக்குள் அவர்கள் நுழைய பல்வேறு சித்து விளையாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆட்டு விளையாட்டை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அவரக்களுக்கு தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும்" என்றார்.

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.