Skip to main content

எழுச்சியா? நடிப்பா? - திரைக்குப் பின்னே அரசியல்!

Published on 06/01/2021 | Edited on 07/01/2021

 

POLITICS

 

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, ‘தமிழகம் மீட்போம்’, ‘100 நாட்கள் தேர்தல் பரப்புரை’, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’, ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என பல தலைப்புகளில், மக்களைச் சந்தித்து வருகிறது திமுக.

 

பெண்களிடம் பெரிய மாற்றம்!

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் செல்லுமிடமெல்லாம் கூட்டமோ கூட்டம். இதனை மக்களின் எழுச்சியாகவே பார்க்கிறது அக்கட்சி. மக்கள் கிராம சபைக் கூட்டமொன்றில் மு.க.ஸ்டாலினும்கூட “திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்குப் பெண்கள் அதிகமாக வருகின்றீர்கள். பெண்களிடம் பெரிய மாற்றத்தைக் காணமுடிகிறது. அதனால், இதைக் கூட்டம் என்று சொல்வதைவிட, கிராமப் பெண்கள் மாநாடு என்றே கூறவேண்டும்” என்று பெருமிதப்பட்டுள்ளார்.

 

எல்லாமே செட்டப்!

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவோ, “தலைக்கு ரூ.200-லிருந்து ரூ.300 வரை பணம் கொடுத்து கிராம சபைக் கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்து வருகிறார்கள். பணத்தை இறைத்து கூட்டத்தைக் கூட்டி அதிமுக ஆட்சி குறித்து குறை பேசுகிறார்கள். இதுபோன்ற ‘செட்டப்’ கூட்டங்களைப் பார்த்துப் பயப்படுவோமா?” என்று கேலி பேசியிருக்கிறார்.

 

உட்கார்வதே வேலை!

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

திமுக தொண்டரணி ரவிச்சந்திரனோ, “அமைச்சருக்கு விவரம் பத்தாது. இப்பக்கூட, முதலமைச்சர் எடப்பாடி வர்றப்ப கூட்டம் சேர்க்கிறதுக்கு ஆளுக்கு 200 ரூபாய் தரலியா? ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வரும்போதும் கூலி கொடுத்துத்தான் கூட்டத்துக்கு ஆள் சேர்த்தாங்க. தானா கூட்டம் சேர்ந்ததெல்லாம் கலைஞர், எம்.ஜி.ஆர். பீரியட்லதான்” என்றார் நேர்மையுடன்.

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

கட்சி பேதமின்றி கூட்டங்களில் கலந்துகொள்ளும் ராக்காயி, “நூறு நாள் வேலைல வேலை பார்க்கிற மாதிரி சும்மா போயிட்டு வர்றோம்ல. அதுமாதிரிதான் இதுவும். ஒருநாள் வேலை.  வாங்க.. வந்து உட்கார்ந்துட்டு போம்பாங்க. என்னென்னமோ பேசுவாங்க. எதுவும் புரியாது. தூக்கம் தூக்கமா வரும். பக்கத்துல இருக்கிற பொம்பளைங்க.. கட்சி ஆளுங்க சொல்லிக் கொடுத்த மாதிரி கை தட்டி, வர்ற தூக்கத்தையும் கெடுத்திருவாங்க” என்று சலித்துக்கொண்டார்.

 

பார்க்கப் பிடிக்காத முகங்கள்!

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றிய முதியவர் ஏழுமலை, “அப்பல்லாம் எம்.ஜி.ஆர். வர்றாருன்னா.. முன்னகூட்டியே போயி ரோடே கதின்னு கிடப்போம். நாங்க போறது சாயங்காலம்னா.. விடியக் காலைலதான் எம்.ஜி.ஆர். வருவாரு. சோறு தண்ணி வேணாம்ங்க.. வாத்தியாரு முகத்த பார்த்தாலே போதும்னு கிறுக்குப் பிடிச்சுப் போயி இருப்போம். இப்ப எந்த மூஞ்சியவும் பார்க்கப் பிடிக்கல” என்று நிகழ்கால அரசியலில் இருந்து விலகிப் பேசினார்.

 

உப்புச்சப்பில்லாத பேச்சு படுபோர்!

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

டீ கடைக்காரரான மாதவன் “விடுதலை உணர்வோடு இருந்த காலத்துல.. காந்தி வர்றாருன்னா.. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்லயும் கூட்டம் அலைமோதுமாம். எம்.ஜி.ஆருக்கு மட்டுமில்ல.. பெரியாருக்கும் கூட்டம் கூடிருக்கு. அந்தக் கால அரசியல் கூட்டங்கள்ல நிதி வசூலெல்லாம் நடந்திருக்கு. அண்ணா பேச்சைக் கேட்கிறதுக்காகவே பெருங்கூட்டம் கூடிருக்கு. வைகோ கூட்டம்னா.. சுத்துப்பட்டி கிராமத்துல இருந்து விழுந்தடிச்சு போவாங்க. கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்துக்கெல்லாம் காசு கொடுத்தா ஆளு சேர்க்கிறாங்க? சீமானும் அப்படித்தான். கழுத்து நரம்பு புடைக்கிற மாதிரி கத்திக்கத்திப் பேசுவாரு. அவரோட பேச்சுக்கு இளவட்ட பசங்ககிட்ட மவுசு இருக்கு.
 

cnc

 

தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பேச்செல்லாம் வேற ரகம். அந்த மாதிரி பேச்சை வெறித்தனமா ரசிச்சவங்க ரொம்பப் பேரு. கமல் கூட்டத்துக்கு யாரும் பணம் தர்றது இல்ல. அதுமாதிரிதான்.. ஜாதி, மத உணர்வைத் தூண்டுற மாதிரி பேசுறவங்க கூட்டத்துக்கு, அதுல பற்றோடு இருக்கவங்க போறாங்க. பேச்சுல ஈர்ப்பு இருந்தா பைசா கொடுக்க வேணாம்ங்க. கூட்டம் அதுவா சேர்ந்திரும். உப்புச்சப்பு இல்லாம.. பேச்சுல அரைச்ச மாவையே அரைக்கிற அரசியல் தலைவருன்னா.. உட்கார்ந்து கேட்கிறவங்களுக்கு ரொம்ப போர் அடிக்கும்ல. அப்புறம்.. பணம் கொடுத்தால்தான் ஆளுங்க வருவாங்க. கூட்டத்துக்கு வர்ற எல்லாருக்குமே பணம் தர்றாங்கன்னு ஒரேயடியா சொல்லிற முடியாது. கட்சிக்காரங்களும் வரத்தான் செய்வாங்க. முன்னால இருக்கிற நாலு வரிசைல கட்சிக்காரங்க இருப்பாங்க. கூட்டிட்டு வந்தவங்கள அவங்களுக்குப் பின்னால உட்கார வைப்பாங்க” என்று படுவிவரமாகப் பேசினார்.

 

கொள்கையில் அல்ல! கொள்ளையில் போட்டி!

 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

சமூக ஆர்வலரான வள்ளிநாயகம், “நாட்டைச் சுரண்டி சம்பாதித்த பணம் இல்லைன்னா இங்கே அரசியல் கட்சி நடத்த முடியுமா? ஓட்டுக்குத்தான் பணம்கொடுக்க முடியுமா?

 

முதலமைச்சர் பழனிசாமி ஒரு தடவை கார்ல போறப்ப கையை ஆட்டிக்கிட்டே போனாரு. அப்ப அந்த ரோட்டுல ஆளே இல்ல. உடனே, அதை போட்டோ பிடிச்சு, மக்கள் செல்வாக்கு இல்லாத எடப்பாடின்னு மீம்ஸ் போட்டாங்க. இப்ப பாருங்க.. சத்தியமங்கலத்துல எடப்பாடி பிரச்சாரம் பண்ணுற ஸ்பாட்ல இம்புட்டு கூட்டம் எப்படி வந்துச்சு? திடீர்ன்னு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகிருச்சா? இந்த ரெண்டு கட்சிக்கும் கூடுற கூட்டம் எல்லாமே முக்கால்வாசி செட்டப் கூட்டம்தாங்க. இவங்க இப்படி போலியா மாஸ் காட்டுறதுக்கு காரணம் இருக்கு. அது என்னன்னா.. என்னமோ மக்களோட அபரிமிதமான ஆதரவு இவங்க கட்சிக்கு இருக்கிற மாதிரி, பொய்யான ஒரு தோற்றத்தை மக்கள்கிட்ட உருவாக்கி, வாக்குகளை அறுவடை பண்ணுறதுதான்” என்று அடித்துச் சொன்னார், சூடமேற்றி சத்தியம் பண்ணாத குறையாக.

 

ஊழல் முகத்துக்கு உத்தம முகமூடி!
 

 Rise? Will you act? -Behind the scenes politics!

 

“ரெண்டு கட்சியுமே  சினிமாவால வளர்ந்ததுதான். சீன் போடறது அவங்களுக்கு ஒன்னும் புதுசில்ல” என்று கூறிய ‘தோழர்’ செந்தில்வேல், “முன்னெல்லாம் ஓட்டு போடறப்ப மட்டும்தான் பணம் கொடுப்பாங்க. இப்ப.. கூட்டத்துக்கு வந்துட்டுப் போங்கன்னு.. தலைவருங்க வர்றப்பல்லாம் பணம் கொடுக்கிறாங்க. எல்லா ஊழலும் பண்ணிட்டு.. எங்கள மாதிரி யோக்கியன் எவன் இருக்கான்னு பேசுறதுக்குப் பேருதான் நடிப்பு. மக்களும் வயித்துப் பொழப்புக்காக எந்தக் கட்சி கொடுத்தாலும் வாங்கிட்டு, கூட்டத்துக்குப் போயி கைதட்டி நடிச்சா என்ன தப்பு? கோடி கோடியா கொள்ளையடிச்சு வச்சிருக்கிற அரசியல்வாதிங்க மலிந்து கிடக்கிற நம்ம நாட்டுல, வறுமையைப் பயன்படுத்தி மக்களில் சிலரையும் வேஷம்போட வைக்கிறாங்க. ஏதோ ஒரு வகையில், அரசியல்வாதிகளின் ஊழல் பணம், அன்றாடங்காய்ச்சிகளின் ஒருநாள் பசியைப் போக்க உதவுகிறது. இதைச் சரியென்று சொல்லிவிட முடியாது” என்றார் யதார்த்தமாக.

 

‘அத்தனையும் நடிப்பா?’ என யாரும் இங்கே ‘உச்’ கொட்ட வேண்டியதில்லை. உலகமே ஒரு நாடக மேடைதான்!

 

பேராசை என்ற அச்சாணியில் சுழலும் அரசியல் சக்கரம்! 


அரசியல் தலைவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற துடிப்பதற்கு வலுவான காரணங்கள் உண்டு. ஒவ்வொரு அரசியல் கட்சியும், தனது கட்டமைப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்களில் இருந்து, சார்பு அணிகள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரையும் அரவணைத்து வழிநடத்திச் செல்ல வேண்டியதிருக்கிறது. கட்சி நிர்வாகிகளில் 95 சதவீதம் பேர், அரசியலை முழுநேரத் தொழிலாகவே பார்த்து வருவதால், கட்சியின் கட்டளையை ஏற்று, கொடியேற்றுவதிலிருந்து கூட்டம் சேர்ப்பது வரை சகலத்துக்கும் செலவழிக்க நேரிடுகிறது. இந்த நிர்வாகிகள் ஒன்றும் மிட்டா, மிராசுகள் அல்ல. அதனால், பொதுவாழ்க்கைக்கும், சொந்த வாழ்க்கைக்கும் பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

 

nkn

 

இதற்கெல்லாம் எங்கே போவார்கள்? தேர்தல்களைச் சந்திப்பதற்கும், வாக்காளர்களைக் வளைப்பதற்கும், கட்சிக்கும் அபரிமிதாக பணத்தேவை உள்ளது. அந்தப் பணம், நல்ல வழியில் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆட்சிப் பொறுப்பு கையில்இருந்தால்தான், கான்ட்ராக்ட் பெர்சன்டேஜிலிருந்து, போஸ்டிங் போடுவது வரை, அத்தனை துறைகளிலும் ஊழல் செய்து, காலகாலத்துக்கும், தலைமுறை தலைமுறைக்கும், தேவைக்கு அதிகமாகவே பணம்சேர்க்க முடியும். தலைவர்களில் இருந்து நிர்வாகிகள் வரை, அரசியல் போர்வையில் பணத்தைக் குவிக்கும் பேராசை என்ற அச்சாணியில் சுழல்கின்ற சக்கரமாகவே உள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.