Skip to main content

"இப்போது பாஜகவின் ஒரே திட்டம் இதுதான்" - முனைவர். ராமசுப்பிரமணியன் விளக்கம்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Ramasubramanian Interview

 

மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.

 

INDIA கூட்டணியின் பெயரை I.N.D.I.A என்று பாஜகவும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் எழுதியும் பேசியும் வருகின்றன. இந்தக் கூட்டணி கலகலத்துப் போக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் ஒன்றுசேர்வார்களா என்கிற ஐயம் பாஜகவுக்கு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் சிறப்பான மூன்று சந்திப்புகள் இதுவரை நடைபெற்றுள்ளன. கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோர் வருவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர்களும் வந்துள்ளனர். 

 

தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி போல் பல்வேறு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று பாஜக நினைத்தது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இப்போது சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளனர். அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதே யாருக்கும் தெரியாது. பாஜக என்ன செய்யும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது நாட்டுக்கு நல்லதும் அல்ல. குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் சார்புடையவர் அல்ல. இந்த நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கான ஆய்வு கமிட்டியில் போட்டிருக்கிறார்கள். 

 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமா? சமீபத்தில் நடந்த தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை இவர்கள் கலைத்துவிடுவார்களா? இது ஜனநாயக விரோதம். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே இப்போது பாஜகவின் திட்டம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து அதிமுக எடுத்த முடிவு மிகவும் தவறானது. ஐந்து மாநில தேர்தல் வரவிருப்பதால் சிலிண்டர் விலையை இப்போது குறைத்துள்ளனர். கடந்த தேர்தல்களில் இதுதான் அவர்களை மிகவும் பாதித்தது. 

 

இந்தியா கூட்டணியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே பாஜக பல்வேறு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தையும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எந்த மதத்தின் சட்டத்தை எடுத்து இவர்கள் பொதுவாக வைக்கப்போகிறார்கள்? இதுபோன்ற பல்வேறு அஸ்திரங்களை அவர்கள் கையில் வைத்துள்ளனர். இந்தியா கூட்டணியின் கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் இதுபோன்ற விஷயங்களை அவர்கள் செய்வார்கள்.
 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.