Skip to main content

"எவன் செத்தா நமக்கென்னன்னு கட்டை கட்டி சரக்கு வித்தது யாரு? ; இல்லீகல், மர்டர் போன்ற வார்த்தைகளை எடப்பாடி மிக அழகாக உச்சரிப்பார்..." - புகழேந்தி பேட்டி

Published on 26/11/2022 | Edited on 28/11/2022

 

பக

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு புகார்களைக் கொடுத்ததாகப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ஆனால் அமித்ஷா தொடர்பாக அவர் பேசியது டெல்லி வரைக்கும் கோபத்தை ஏற்படுத்தியதால் தன் தரப்பு விளக்கத்தை ஆளுநரிடம் அவர் தெரிவித்ததாகவும், இதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அதை எடப்பாடி அரசாங்கம் எப்படி நடைபெற்றது என்பதை ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பன்வாரி லால் புரோகித் வெளிப்படையாக பஞ்சாபில் தெரிவித்துள்ளாரே? ஒரு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு எத்தனை கோடி வரை வாங்கினார்கள் என்று பன்வாரி லால் தான் மிகத்தெளிவாகப் புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளாரே? இவர் போய் அடுத்தவர் மீது என்ன ஊழல் புகார் தெரிவிக்கப் போகிறார். இவர் செய்த ஊழல்களை எல்லாம்தான் விலாவரியாக முன்னாள் ஆளுநர் அமித்ஷாவிடமும் மோடியிடமும் எப்போதே தெரிவித்திருப்பாரே, இப்போது இவர் என்ன ஆளுநரைச் சந்தித்து புகார் கொடுக்கப் போகிறார்? இவர் மீது இவரே வேண்டுமானால் புகார் தெரிவித்துக்கொள்ளலாம். 

 

தமிழகத்தில் இல்லீகல் பார்கள் செயல்படுவதாக ஆளுநரிடம் தெரிவித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

பழனிசாமிக்கு எது தெரிகிறதோ இல்லையோ இல்லீகல், மர்டர், கொலை இது எல்லாம் நன்றாக தெரியும். அதனை அருமையாக பேசுவார். இதில் அவர் மிகுந்த அனுபவசாலி. அவரின் அனுபவத்துக்கு முன்னால் கூட யாரும் நிற்க முடியாது. சட்ட விரோத பார் தமிழகத்தில் எங்கு நடக்கிறது என்ற ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியதுதானே, பாரில் கொள்ளை அடிப்பதை அதுவும் தங்கமணியை அருகில் நிற்க வைத்துவிட்டுப் பேசுகிறார்.

 

கரோனா காலத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் வாசலில் கட்டை கட்டி வியாபாரம் செய்தவர்கள் தானே இவர்கள். எத்தனை உயிர்கள் போய்க்கொண்டிருந்த அந்தக் கொடுமையான காலகட்டத்தில் இவர்கள் சரக்கைக் கூடுதல் விலைக்கு விற்றும், மக்களின் உயிரைப்  பற்றி சிறிதும் கவலைப்படாமலும் நடந்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே?

 

எவன் செத்தா நமக்கென்னன்னு சரக்கு வித்துட்டு ஆளுநரிடம் இவர் கம்ப்ளைன்ட் கொடுப்பாராம், இதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம். இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யாரும் செய்யமாட்டார்கள். இதை எல்லாம் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அதனால்தான் மக்கள் அம்மா உருவாக்கிய கட்சியையே தோற்கடிக்கக் காரணமாக அமைந்தது.

 

இவர்களைக் கட்சியினர் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இவர்கள் தயவு செய்து ஊழலைப் பற்றி மட்டும் பேசக்கூடாது. ஒரு ஊழலின் மொத்த உருவமே எடப்பாடி குரூப்தான். எனவே எதைப் பற்றிப் பேசினால் அதற்குப் பதில் சொல்லலாம். ஆனால் அதைப்பற்றி மட்டும் அவர்கள் தயவுசெய்து பேசக்கூடாது என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். 

 

 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.