Skip to main content

உங்க பாச்சா இங்க பலிக்காது... பவார் காட்டிய பவர்... பவரை இழந்த அமித்ஷா, மோடி... 

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

 

குஜராத்திலிருந்து வந்த உங்களுக்கே இவ்வளவு என்றால், இந்த மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தனான எங்களுக்கு எவ்வளவு இருக்கும், இது கோவா இல்ல... எங்கள் மகாராஷ்டிரா... உங்க பாச்சா இங்க பலிக்காதுன்னு அமித்ஷாவிடம் கூறியிருக்கிறது சிவசேனா கூட்டணி.
 

மகாராஷ்டிரா அரசியலில் சரத்பவார் ஆடிய ஆட்டம் கண்டு நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் சிவசேனா கூட்டணி ஆட்சி எப்படி வந்தது என்ற பின்னணியை பார்ப்போம்.
 

சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராவதை தடுக்க ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் மோடி. இதனால் சிவசேனா கடும் கோபம் அடைந்தது. பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியது. 
 

'அப்பாவிடம் (பால் தாக்கரே) நான் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவேன் என்று அவர் இறப்பதற்கு முன் உறுதி கொடுத்துள்ளேன், எனவே உயிரே போனாலும் இந்த முறை சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்' என்று பாஜகவுக்கு எதிராக உத்தேவ் தாக்கரே கொந்தளித்தாராம். 
 

மூத்த அரசியல்வாதிகள், சட்ட வல்லுநர்களிடம் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில்  இருக்கும்போது எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது. மீறி கோரினால் அதை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கவர்னருக்கு கிடையாது. மோடி நினைத்தால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியை எடுக்க முடியும். அதனால் ஜனாதிபதி ஆட்சியை விலக்க வைக்க என்ன செய்வது? என்று பாருங்கள், அதனைப் பற்றி ஆலோசனை நடத்துங்கள் என்றும், சரத்பவாரிடம் சில விஷயங்களை பேசுங்கள் என சில ஐடியாக்களையும் கூறியுள்ளனர்.
 

modi


 

இதையடுத்து உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளார். பாஜகவுக்கு மிகப்பெரிய அடி கொடுக்கணும். அது உங்களால்தான் முடியும் என்று கூறியுள்ளார். நாங்கள் சொல்வதை நீங்கள் செயல்படுத்துங்கள். உங்களுக்கான இமேஜ் மகாராஷ்டிரா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயரும். அதற்கு முன்பு எங்கள் கட்சி எம்எல்ஏக்களை நாங்கள் பத்திரப்படுத்தியுள்ளோம். அதேபோல் உங்கள் கட்சி எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பத்திரப்படுத்துங்கள். எந்த வகையிலும் ஒரு எம்எல்ஏ கூட எதிரணிக்கு போகக்கூடாது என்று கூறியுள்ளார். 
 

மேலும் சரத்பவாரிடம் பேசிய உத்தவ் தாக்கரே, எங்களை வேண்டாம் என்று பாஜக எப்போது முடிவு எடுத்ததோ, அதிலிருந்து உங்களிடம் பாஜக பேசிக்கொண்டிருக்கிறது. அஜித்பவாரிடம் பாஜக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த வேண்டும். நீங்க மோடியை சந்திக்கிற வாய்ப்பு இருந்தால், அஜித்பவாரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் என்று சரத்பவாரிடம் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அதன்படி செய்தார் சரத்பவார். 
 

அஜித்பவாரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சரத்பவார் சொன்னதை உண்மை என்று நம்பிய பாஜக, அஜித்பவாரை வைத்து ஆட்டம் ஆடியது. தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு என அஜித்பவார் கொடுத்த கடிதத்தை வாங்கிய பாஜக, அதனை ஆளுநரிடம் கொடுத்தது. இதையடுத்து ஜனாதிபதி ரூல் விலக்கப்பட்டு, முதலமைச்சரானார் தேவேந்திர பட்னாவிஸ். துணை முதலமைச்சரானார் அஜித்பவார். அதோடு மட்டுமல்ல அஜித்பவார் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. நவம்பர் 30ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிருபிக்க சொன்னார் ஆளுநர். 

 

maharashtra


 

சரத்பவார் சொல்லித்தான் அஜித்பவார் பாஜகவுடன் சென்று பதவியேற்றுள்ளார் என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில், அதனை மறுத்தார் சரத்பவார். அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 53 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். விரைவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்றார் சரத்பவார். 
 

இதையடுத்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.என் பின்னால் எந்த எம்எல்ஏவும் இல்லை என்று அஜித்பவார் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். 


 

 

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்று யாரோ ஒருவர் சொல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார். அவர் சொல்லும்போது நிராகரிக்க முடியுமா? நம்பித்தானே ஆக வேண்டும். அவர் சொன்னதை நம்பிதான் பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தது என்றார் தேவேந்திர பட்னாவிஸ். 
 

பட்னாவிஸ் பதவி விலகியதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

நவம்பர் 28ஆம் தேதி மாலை 6.40-மணிக்கு சிவாஜி பார்க்கில் நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்ரே பதவியேற்க உள்ளார்.  பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பார்க்கில்தான் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேயின் நினைவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தாக்ரே குடும்பத்தில் இருந்து முதல் மந்திரியாக பதவியேற்கும் முதல் நபர் உத்தவ் தாக்ரேதான்.


 

 

 முதல்வராக தேர்வு செய்யப்பட்ட உத்தவ்தாக்கரே, நான் இந்த தருணத்தில் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 30 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் 30 ஆண்டுகளாக யாருக்கு எதிராக போராடினோமோ அவர்கள் என்னை நம்புகிறார்கள். நான் பதவியேற்ற பின்னர் முதலமைச்சராக பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றார்.  
 

எல்லாக் கட்சியினரும் சந்தர்ப்பவாத அரசியல்தான் செய்கின்றன. ஆனால் அமித்ஷாவின் அரசியல் வித்தியாசமானது. தங்களது சந்தர்ப்பாத அரசியலுக்காக அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா விதமான சித்து விளையாட்டுக்களையும் செய்கிறார். குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதற்காக பெரும்பான்மை இல்லாத கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிருபிக்க 15 நாள் அவகாசம் அளிப்பது, அதனை நீதிமன்றம் தலையிட்டு திருத்தி எழுவது போன்றவை தொடர்கதையாகி வந்தாலும் அமித்ஷா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. 
 

மூன்று கட்சிகளில் இருந்து எப்படியும் அதிருப்தி எம்எல்ஏக்கள் முளைப்பார்கள். அவர்கள் எப்படியும் விவசாயிகள் நலன் என்ற பெயரில் மோடி, அமித்சாவை சந்திப்பார்கள். அவர்களுக்காக அந்த மாநிலத்தில் சொகுசு விடுதிகள் தயாராக இருக்கும். பின்னர் அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்து சட்டமன்றத்தை முடக்குவார்கள். ஏதோ ஒரு விதத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது. 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.