Skip to main content

''எங்களை எங்களது போக்கில் விட்டால்...'' - பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்! 

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

dddd

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இப்பொழுது கைது செய்யப்பட்ட அருளானந்தம், ஹெரான்பால், பாபு ஆகியோரை கைது செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. முடிவெடுத்துவிட்டது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து கைதானதும் கட்டம் கட்டப்பட்டிருப்பவர்.

 
மூவருக்கும் எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ பல மாதங்களுக்கு முன்பே திரட்டிய நிலையில், "அ.தி.மு.க. நிர்வாகி மீது இப்பொழுது கை வைக்க வேண்டாம், தேர்தல் நேரத்தில் அதற்கான உத்தரவு வரும் என மத்திய உள்துறை தெரிவித்துவிட்டதால், இத்தனை மாதங்கள் காத்திருந்து ஜனவரி முதல் வாரத்தில் இந்தக் கைது நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது'' என்கிறார்கள் இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

"இந்த விவரம் முதல்வர் எடப்பாடிக்கும் தெரியும். இது தொடர்பாக பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யைக் கூப்பிட்டு, எடப்பாடி விசாரித்துள்ளார். அப்பொழுது, "நான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வேன்'' என எடப்பாடியிடம், அவர் மிரட்டியிருக்கிறார். அதனால் "அந்த பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யை பொள்ளாச்சி கட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்க வைக்கக்கூடாது என அவரை திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளராக இடம் மாற்றினார் எடப்பாடி" என்கிறார்கள் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க.வினர்.

 

dddd

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரிகள், சில அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறினார்கள். "கைது செய்யப்பட்ட அருளானந்தம், பொள்ளாச்சி நகரில் உள்ள மூன்று மதுக்கடைகளில் பார் நடத்தி வருகிறார். பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மனைவியின் மகன், மற்றும் ஏற்கனவே பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸாரால் விடுவிக்கப்பட்ட பார் நாகராஜ் மற்றும் பாபு, ஹெரான்பால் ஆகியோர் ஒரு டீமாகவே கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சுற்றித் திரிந்து பெண்களை வேட்டையாடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

 

இந்த அணியின் மொத்த எண்ணிக்கை 20. இதுவரை இவர்களோடு சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பார் நாகராஜ்தான் முக்கியமானவன். இந்த பார் நாகராஜும் பார் அருளானந்தமும் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். வேலுமணி, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. இருவரும் கேட்டுக்கொண்டதால்தான் பார் நாகராஜின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி வருகைதந்தார்.

 

பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு மிக நெருக்கமான முன்னாள் பொள்ளாச்சி நகராட்சித் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க. நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரான ஜேம்ஸ்ராஜா, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் உதவியாளரும் அவரது இரண்டாவது மனைவிக்கு நெருக்கமானவருமான வீராசாமி ஆகியோருடன் இணைந்து இந்த வேட்டையை பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் மகன் நடத்தியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஓடும் காரில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்தப் பெண் காரிலிருந்து தலைகீழாகக் குதித்து விபத்துக்குள்ளானார். அதில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி., தனது இரண்டாவது மகனை காப்பாற்றினார்.
 

dddd


அதேபோல் வீராசாமி மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழவே… அவரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு ஓ.பி.எஸ். ஆதரவுடன் ஜெயலலிதாவை ஏமாற்றி கும்பலோடு கும்பலாக அ.தி.மு.க.வில் இணையவைத்தார் அந்த பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. இந்த வீராசாமி, கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா ஆகியோர் சி.பி.ஐ. யின் விசாரணைப் பட்டியலில் இருக்கிறார்கள்.

 

பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. மீது பல பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்தது. அதையெல்லாம் சமாளிக்க உறுதுணையாக இருந்தவர் இந்த வீராசாமி. இவரை சி.பி.ஐ. கைதுசெய்து கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தயாராகி வருகிறது'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

‘இந்த வழக்கில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு நெருக்கமானவர்களும் அவரது இரண்டாவது மகன் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யும் முதல் குற்றவாளியாக சிக்குகிறார்’ என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

cnc

 

ஆக… சி.பி.ஐ. இப்பொழுதுதான் பாயத் தொடங்கியிருக்கிறது. "எங்களை எங்களது போக்கில் விட்டால் உண்மையில் பொள்ளாச்சி காமக்கொடூர விவகாரத்தில் என்ன நடந்தது என நாங்கள் வெளியே கொண்டுவருவோம்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.


 
இதற்கிடையே அருளானந்தம் கைது, அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. போன்றவர்களை கைது செய்தால் அது பெரும் பின்னடைவாக அமையும்" என அ.தி.மு.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சி.பி.ஐ. தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவதாக இல்லை.

 

இதுநாள் வரை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பயந்திருந்த பல இளம் பெண்கள் இப்பொழுது சி.பி.ஐ. வசம் சாட்சியங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். "இந்த வழக்கு நேர்மையாக நடந்தால் பலர் சிக்குவார்கள். பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மகன் தலைமையில் இயங்கிய இந்த காமக்கொடூரக் கும்பலில் இன்னும் 12 பேர் கைதாகவிருக்கிறார்கள். இதுதவிர கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா, வீராசாமி, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி., பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மகன் மற்றும் அமைச்சர் வேலுமணி என நடவடிக்கை பாயும்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

 


 

 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார்.