Skip to main content

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் சிறை மாற்றம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

இந்தச் சம்பவத்துக்குப் பின்னால நெறைய அரசியல் புள்ளிகள் இருக்கறாங்க. அவங்க யார்னு என் உயிரே போனாலும் பரவாயில்லை... வெளியே சொல்லுவேன்'' பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு போலீசிடம் சிக்குவதற்கு முன் வெளியிட்ட ஆடியோவில் சொன்ன வார்த்தைகள் இவை. கோவை மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு , ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கடந்த வெள்ளிக்கிழமையன்று சேலம் மத்திய சிறைக்கு சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறார்கள் போலீசார்.

 

pollachi issues



"எதற்காக இந்த சிறை மாற்றம்..?' என நாம் போலீஸ் சோர்ஸ் ஒருவரிடம் பேசினோம். இவங்களுக்காக பொள்ளாச்சி, கோவை வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரல. கோர்ட்டிற்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்போது பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் தாக்குதல்கள் நடத்தவும் தயாராக இருக்கின்றனர். அதனால் வழக்கின் நீதிபதியான நாகராஜிடம்... வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் நான்கு பேரும் வாக்கு மூலம் அளித்து வந்தனர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு ரவிக்குமார் என்பவரை நீதிபதியாக போட்டுட்டாங்க. அதே சமயத்துல... என்.ஐ.ஏ. ரெய்டால் கைதான முஸ்லிம் நபர்களை கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறோம். இரண்டுமே சென்சிட்டிவ் விவகாரம்.

  pollachi issues



சிறைக்குள் இருக்கும் சில கட்சிக்கார நபர்களால்கூட இந்த பாலியல் வழக்கு குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது... அதனால் நாங்கள் சேலம் சிறைக்கு மாற்றுகிறோம்' என எங்கள் ஆட்கள் 5-வது குற்றவாளியாய் சேர்க்கப் பட்ட மணிவண்ணனையும் கொண்டு போய் விட்டார்கள். பாலியல் வழக்கை தற்போது விசாரிக்கும் சி.பி.ஐ. முழுமையான சார்ஜ்ஸீட் சப்மிட் செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும். அப்போது குற்றவாளிகளை ஆஜர்படுத்த சேலம் சிறையில் இருந்து கோவைக்கு கொண்டுவர வேண்டும். அப்படி விடியற்காலை 4 மணிக்கெல்லாம் சேலத்திலிருந்து குற்றவாளிகளை ரெடியாகச் சொல்லி அழைத்துக் கொண்டு வரும் போது "வழியில் திருநாவுக்கரசு எங்களை பலமாகத் தாக்கி தப்பிச் செல்ல நினைத்தான். பாதுகாப்புக்காக அவனை துப்பாக்கியால் சுட நேர்ந்தது' என எங்கள் ஆட்கள் வாக்குமூலம் கொடுக்கத் தயாராகி விட்டார்கள். நீதிமன்றம் அருகே உள்ள கோவை சிறையில் இருந்து திருநாவுக்கரசைக் கூட்டிக்கொண்டு வந்தால் இந்த என்கவுன்ட்டர் ஸ்கிரீன்ப்ளே ஒர்க்அவுட் ஆகாதே...

 

pollachi issues



திருநாவுக்கரசு உயிரை உடலில் இருந்து புல்லட்டுகளால் எடுத்துவிட்டால்... இந்த பாலியல் வழக்குல நாம சிக்காம இருந்துவிடலாம் என சில அரசியல் புள்ளிகள் கணக்குப் போடுகிறார்கள். அதற்கு எங்கள் டிபார்ட்மென்ட்டும் துணை போகிறது'' என அதிர வைத்தார். இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாய் சேர்க்கப்பட்ட மணிவண்ணன், "நான் எந்தவித தப்பும் செய்யலை. அடிதடி வழக்குல சரண்டர் ஆன என் மீது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நிஷா பார்த்திபன் என்னை இந்த பாலியல் வழக்குல சேர்த்து விட்டுட்டாரு. எந்த ஆதாரத்தின் அடிப் படையில இந்த வழக்குல சேர்க்கப்பட்டேன்னு இதுவரை எனக்கு சொல்லவில்லை. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதால் எனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டுகிறேன்' என புதிய நீதிபதி ரவிக்குமாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மணிவண்ணன் வேண்டியிருக்கிறான். அதே நாளில் புதிய அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த "பார்' நாகராஜ், ஜாமீன் வாங்கி வெளியே வந்தான். சிறையில் மணிவண்ணனை சந்தித்து பேசினானாம் "பார்' நாகராஜ்.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.