Skip to main content

பல அரசியல்வாதிகளின் சப்போர்ட்டில் இருக்கிறேன்... எதையும் புடுங்க முடியாது..! -மிரட்டும் பெண் அதிகாரி!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

dddd

 

தொடர்ச்சியாக நடைபெறும் அவர்களின் போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட'த்தின் கீழ் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், வத்தலகுண்டு, குஜிலியம்பாறை, சாணார்பட்டி உள்பட 15 ஊர்களில் வட்டார அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது.


திண்டுக்கல் மாநகரில் உள்ள "குழந்தைகள் வளர்ச்சித் திட்ட' அலுவலகத்தில் அதிகாரியாக பூங்கோதை செயல்பட்டு வருகிறார் இவரின் கட்டுப்பாட்டில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் (டீச்சர் மற்றும் ஆயாக்கள்) பணி புரிந்து வருகிறார்கள். இவர்களைத் தரக் குறைவாக பேசி திருட்டுப் பட்டம் சுமத்தி கிண்டல் செய்வதன் மூலம் பல பெண் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதுடன் மட்டுமல்லாமல், தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறார்கள். இப்படி சர்வாதிகாரி போக்கை கடைப் பிடித்து வரும் அதிகாரியான பூங்கோதையை கண்டித்துதான் கடந்த சில மாதங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியும்கூட மேலதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. டென்ஷன் அடைந்த சங்கத்தினர் கடந்த 16-ஆம் தேதி மாவட்ட அளவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர்

 

இது சம்பந்தமாக ஆர்ப்பாட் டத்தில் குதித்த அங்கன்வாடி ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது.... ""ஏற்கனவே இந்த சி.டி.பி.ஒ. பூங்கோதை, குஜிலியம்பாறையில் இருந்தபோதே இப்படி செயல்பட்டதால்தான், இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அதே நிலைதான். முதல்வரின் உத்தரவை மீறி கொரோனா காலத்தில் மையங்களை திறந்து உட்காரச் சொல்லுகிறார். வீடுகளில் கொடுக்கும் சத்துமாவை ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால், மாவு கொடுக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து ஆய்வு செய்யப்போகிறார் அப்போது வீட்டில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தியிருப்பார்கள் அது தெரியாமல் குறைத்துக் கொடுத்தார்களா? இதைக் கொடுத்தது பெரிய திருடியா? சின்ன திருடியா? என்று பேசி எங்கள் மீது திருட்டு பட்டம் சுமத்தி வருகிறார்.

 

அசோக்நகர் மையத்திலிருந்த டீச்சர் கண்மணி அப்பகுதியில் சத்துமாவு கொடுத்திருக்கிறார் அதை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தெரியாமல் ஆய்வு என்ற பெயரில் அந்த மாவை வாங்கி அருகே உள்ள பலசரக்குக்கடையில் வைத்து எடை போட்டிருக்கிறார். அது குறைந்திருக்கவும், அந்த இடத்திலேயே கண்மணியை வாய்க்கு வந்தபடி பேசி திட்டியதுடன் மட்டுமல்லாமல் மெமோவும் கொடுத்துவிட்டார்.

 

அனைத்து மையங்களிலும் எலி நடமாட்டம் உள்ள நிலையில், குமரன் தெரு மையத்தில் எலிப்புழுக்கை இருந்ததாக கூறி ஊழியர் நாகஜோதி உதவியாளர் ஜோதி இருவரையும் சஸ்பெண்ட் செய்து விட்டார். பேகம்பூர் மையத்தில் பணி புரிந்து வந்த பரமேஸ்வரி மையத்தை சுத்தப்படுத்துவதற்காக அங்கிருந்த மாவை எடுத்து பக்கத்து வீட்டில் வைத்து விட்டு சுத்தப்படுத்தியபோது, ஆய்வுக்கு வந்த அந்தம்மா, மாவை எடுத்து மறைத்து வைத்திருக்கிறாய் என்று கூறி வாய்க்கு வந்தபடி ரோட்டில் நின்று பேசியிருக்கிறார் அந்த அவமானம் தாங்காமல் பரமேஸ்வரி மருந்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். டீச்சர் மகாலட்சுமி இந்தம்மாவின் டார்ச்சரால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். லீவு கொடுப்பதில்லை. மையங்களில் பாத்ரூம் வசதிகளை ஏற்படுத்துவதில்லை. இதை யெல்லாம் கண்டித்து, மாவட்ட சங்கத்தோடு மாநில சங்கமும் இணைந்து போராடியும் இன்னும் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை'' என்று கூறினார்கள்

 

dddd

 

""நாங்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு அந்த அம்மா, "என்னை யாரும் மயிரை கூட புடுங்க முடியாது நான் பல அரசியல்வாதிகளின் சப்போர்ட்டில் இருக்கிறேன்' என்று வெளிப் படையாகவே ஊழியர்களிடம் கூறிவருகிறார். இதைப்பற்றி மாவட்ட திட்ட அதிகாரியான (டஞ) பூங்கொடியிடம் முறையிட்டும்கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுத்ததே இந்த பூங்கோதைதானாம். தற்போது மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம் அதோடு தமிழக முதல்வர் மற்றும் எங்க அமைச்சர், தலைமை செயலாளர், இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் வரை புகார் மனு அனுப்பியிருக்கிறோம். டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில சங்கத்தின் அனுமதியோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்து வோம்'' என்றார் அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவரான தமிழ்ச்செல்வி

 

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரியான (CDPO) பூங்கோதையிடம் கேட்ட போது..... ""அரசு எனக்கு என்ன பணிகள் சொல்லியிருக்கிறதோ? அந்தப் பணிகளைத்தான் செய்து வருகிறேன். அதனாலதான் அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடுகளில் ஆய்வு செய்தும் வருகிறேன். மற்றபடி அவர்களெல்லாம் பொய்யான குற்றச்சாட்டை என் மீது பரப்பி வருகிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.