Skip to main content

பாமக அரசியல் வன்னியர்கள் மத்தியில் எடுபடாது என்னும் அச்சத்தில்... : மு. ஞானமூர்த்தி 

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அங்கு திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தியை தொடர்பு கொண்டோம்.

 

m.gnanamoorthy


 

விக்கிரவாண்டியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 

பிரகாசமாக உள்ளது. 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் கே. ராதாமணி 63757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர். வேலு 56845 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். திமுகவுக்கு 6912 வாக்குகள் கூடுதல். இப்போது தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கும் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு, இட ஒக்கீட்டு போராளிகளுக்கு நினைவு மண்டபம், ஏ. ஜி. அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்திருப்பது வாக்காளர்களின் கூடுதல் ஆதரவை திமுக பெற்றுள்ளது. 


 

 

ஸ்டாலினுக்கு திடீரென்று வன்னியர்கள் மீது பாசம் வந்துவிட்டது. ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் ஸ்டாலினின் அறிவிப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வெளியிட்ட அறிவிப்பு. தேர்தல் முடிந்தவுடன் அதை அவர் மறந்துவிடுவார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாரே?
 

அன்புமணிக்குதான் அனிமேஷன் ஆம்னீஷியா வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததும் பொங்கி எழுந்த ராமதாஸும் அன்புமணியும் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக உள்ஒதுக்கீடு தருவதாக அறிவித்திருக்கிறார்களே, நீங்கள் வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு தருவோம் என அறிவியுங்கள் என்று கேட்டிருக்கலாமே? எடப்பாடியை நிருபர்கள் இது சம்பந்தமாக கேட்டபோது அவர் மழுப்பலாக நழுவி விட்டாரே, இது தெரியாதா அன்புமணிக்கு? இன்றுவரை ஏன் எடப்பாடியை ராமதாஸ், அன்புமணி கேட்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதி மக்களை பொறுத்தவரை வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு திமுக தரும் என முக. ஸ்டாலின் அறிவித்ததும் அதை பெரும்பான்மை வன்னியர்கள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளார்கள். திமுக இடஒதுக்கீடு கொடுத்துவிட்டால் பாமக அரசியல் வன்னியர்கள் மத்தியில் எடுபடாது என்னும் அச்சத்தில் அப்பாவும், மகனும் லாபி செய்கிறார்கள். 
 

விக்கிரவாண்டியில் ஏற்கனவே தி.மு.க. வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்திருப்பதால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே...
 

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் வைத்த தவறான கூட்டணியை மக்கள்  எப்படி நிராகரித்தார்களோ அதே எதிர்ப்பலை இப்போதும் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ளது.  மேலும் வன்னியர் சங்கம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் அ.தி.மு.க. நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 21 குடும்பங்களுக்கு பா.ம.க. எதுவும் செய்யவில்லை என்கிற கோபம் இங்குள்ள வன்னியர்களிடம் தெரிகிறது. மேலும் மத்திய அரசின் தமிழகம் பாதிக்கும் திட்டங்களுக்கு துணை போகும் அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் புறக்கணிக்க முன்வந்துள்ளனர். 


 

 

15க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பணியாற்றி வருகிறார்களே..

 

அமைச்சர்கள் செல்லும் இடத்திலெல்லாம் மக்கள் எதிர்க்கிறார்கள். குடிநீர் இல்லை, 100 நாள் வேலையை குறைத்து விட்டீர்கள், முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிட்டீர்கள் என பல குற்றச்சாட்டுகள் அமைச்சர்கள் மீது சுமத்துகிறார்கள். அண்மையில் சி.வி. சண்முகம் மக்களின் எதிர்ப்புக்கு பதில் சொல்ல முடியாமல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு திரும்பியுள்ளார். நீட் தேர்வுக்கு துணைபோவது, தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைகளில் வடநாட்டவரை நியமித்தது, தமிழ் நாட்டில் இந்தியை கொண்டுவர முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு துணைபோவது, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துதல் என பல்வேறு எதிர்ப்பலைகள் அமைச்சர்கள் மீது ஏற்ப்பட்டுள்ளது. 

 

m.gnanamoorthy



நா.புகழேந்தி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

நா. புகழேந்தி 1996ம் ஆண்டிலும் அவரது மருமகள் 2006ம் ஆண்டிலும் கோலியனூர் ஒன்றியப் பெருந்தலைவர்களாக தேர்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளனர். மக்களிடம் நன்கு பழகும் எளிமையான மனிதர். நடைபெறும் இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.