Skip to main content

சத்குரு ****தான்   ஆனால், அவர்கிட்ட போறவங்க எல்லாம்... -பியுஷ் மனுஷ்

Published on 30/10/2018 | Edited on 30/10/2018


 

இயற்கை வழிபாடுதான் உண்மையான இந்து மதத்தின் வழிபாடு. ஆன்மீகவாதிகளும் இயற்கை வழிபாட்டைதான் கடைபிடித்து நடந்தார்கள். ஆனால் இன்று யார், யார் இயற்கையை அழிக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆன்மீகவாதிகள் ஆகிவிட்டார்கள். சபரிமலையை பொறுத்துவரை ஐய்யப்பன் காட்டோடு ஒன்றாகிவிட்டார். காட்டை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு வேண்டியவர்கள்தான். நான் உண்மையான ஐயப்பன் பக்தர். இந்த நெய் அபிஷேகம் செய்வது இதெல்லாம் ஒன்றும் இல்லை. 1902 வரைக்குமே அங்கு பழங்குடியினர்தான், அவர்கள் வழிபாடுதான். அதற்குபின்புதான் பார்ப்பனியம் வந்தது. அதற்கு தெளிவான வரலாற்று ஆதாரங்களும் உள்ளது.    
 


இன்றைக்கு நிலைமை இதுதான், தெருவுக்கு, தெரு யாரு கோவில் கட்டிட்டு இருக்காங்க. கட்சி கவுன்சிலர், அதற்கு வீட்டுக்கு, வீடு வரி கட்டிட்டு இருக்காங்க தமிழ்நாட்டுல, 5000, 10,000 கட்டிட்டு இருக்காங்க கும்பாபிஷேகத்திற்கு. அது ரொம்ப பூதாகராமாக ஆகிவிட்டது. சத்குரு ****தான், ஆனால் அவர்கிட்ட போறவங்க எல்லாம் திருடர்கள் கிடையாது. உண்மையான குருகிட்ட போறோம்னு நினைத்துக்கொண்டுதான் போறாங்க. நித்தியானந்தாகிட்ட உண்மையான குருகிட்ட போறோம்னு நினைத்துக்கொண்டுதான் போறாங்க. அவுங்க திருடர்களாக இருக்கிறதுக்கு இவுங்க எப்படி பொறுப்பாவாங்க. கவுன்சிலர் யாருங்க அந்தந்த ஊர்ல கோவில் கட்டுவதற்கு, அரசியல்வாதிங்க கட்டிட்டு இருக்காங்க பாக்கவே ரொம்ப இதா இருக்கு, தாங்கவே முடியலை. மசூதி ஏன் கட்டுறிங்க, சர்ச் ஏன் கட்டுறிங்க, புத்த மடாலயங்கள் ஏன் கட்டுறிங்க அப்படினு எல்லாத்தையும்தான் கேக்கணும். மகாவீரர் கடவுளே இல்லைனு சொன்னவரு, ஆனால் அவருக்கே சிலை வைத்து அவருக்கே கோவில் கட்டுறாங்க. அதுவும் பெரிய, பெரிய கோவிலா கட்டுறாங்க, இந்து கோவில்களைவிட அது பெரியதாக இருக்கு. ரொம்ப கேவலமா இருக்கு. கடவுளுடைய வீட்லதான் நாம வாழுறோம். இந்த பூமி கடவுளுடைய வீடு, அதில்தான் நாம வசிக்கிறோம். கடவுளுக்கு வீடு கட்டிக்கொடுக்க மனிதனுக்கு தகுதி கிடையாது. நான் ஒரு வீடு கட்டுவேன், அதில்வந்து கடவுள் வாழ்வார் என்றால் அதைவிட அகந்தை வேற எதுவும் கிடையாது... 

 

 

முழுஉரையையும் காண வீடியோவை க்ளிக் செய்யவும்...

 

 

 

 

 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.