Skip to main content

மன உளைச்சலுக்கு ஆளான ப.சிதம்பரம்! திகார் என்றதும் டென்ஷனான ப.சிதம்பரம்!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

அமலாக்கத்துறையும் தன்னை கைது செய்யக்கூடும் என நினைத்த சிதம்பரம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை நீதியரசர்கள் பானுமதி, போபண்ணா ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணையில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், "முன்ஜாமீன் கேட்பது அடிப்படை உரிமை. அந்த உரிமை சிதம்பரத்திற்கு மறுக்கப்படுகிறது. அவர் எங்கும் தப்பித்துச் செல்லமாட்டார்' என வாதிட்டார்.

 

p.chidambaram



அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘"சிதம்பரம் தப்பிச்செல்வாரா? மாட்டாரா என்பதை விசாரணை அமைப்புதான் முடிவு செய்யும். சிதம்பரம் செய்திருக்கும் குற்றம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றவர்களின் வழக்குகள் பாதிக்கும்' என்றார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதியரசர்கள், "செப்டம்பர் 5-ந்தேதி இம்மனு மீது முடிவெடுக்கப்படும்' என்றும் "அதுவரை சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது' எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

 

congress



இதனையடுத்து, செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பளித்த நீதியரசர்கள், "முன்ஜாமீன் என்பதை அடிப்படை உரிமையாக கருத முடியாது. சரியான பாதையில் இந்த வழக்கு பயணிப்பதாக நாங்கள் கருதுகிறோம். விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும்' என கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், "ஜாமீன் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு செய்யலாம்' எனவும் தெரிவித்தனர் நீதியரசர்கள்.


சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதால் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு எந்த தடையும் இல்லை. இதனால், உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட சி.பி.ஐ. காவல் முடிந்ததால் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., "சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பி நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்' என வாதிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபில், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஏற்கனவே ஜாமீன் தரப்பட்டிருக்கிறது. அதனால் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதுதான் இயற்கை நீதி' என்றார் அழுத்தமாக. இதனை கடுமையாக மறுத்த சி.பி.ஐ. வழக்கறிஞர்கள், "சிதம்பரம் வெளியே இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. சிறைக்கு அனுப்புங்கள்' என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபில், "அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கு செல்லவும் சிதம்பரம் தயாராக இருக்கிறார். அதனால் சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து ஜாமீன் வழங்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்தார். நீதிபதி அஜய்குமார், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்து அவரை 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சிதம்பரத்திற்கு எதிரான விவகாரங்கள் குறித்து டெல்லியில் விசாரித்த போது, ""ஐ.என். எக்ஸ். மீடியா வழக்கில் 15 நாட்கள் சி.பி.ஐ. கஸ்டடி யில் இருந்த சிதம்பரம், மன ரீதியாக மிகவும் பலகீன மடைந்திருக்கிறார். சி.பி.ஐ. கேட்ட பல கேள்விகள் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கஸ்டடி முடிந்ததும் திகார் சிறைக்கு அனுப்பி வைப்பதற்கு வசதியாக ஜாமீன் கிடைக்காமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. முன்கூட்டியே செய்து முடித்துவிட்டது. பொரு ளாதார குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கென்றே திகாரில் தனி ப்ளாக் உள்ளது. அங்கிருக்கும் 7 ஆம் எண் கொண்ட அறை சிதம்பரத்திற்காக தயார் செய்யப்பட்டிருக் கிறது. "சி.பி.ஐ. கஸ்டடி முடிந்ததும், அமலாக்கத் துறை உடனடியாக கைது செய்யவேண்டாம். அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறையிலேயே அமலாக்கத்துறை அவரை கைது செய்யட்டும். சிறையில் சில நாட்கள் இருக்கும்படி அவரை விட்டுப்பிடித்து அதன்பிறகு அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்தால் போதும்' என அட்வைஸ் செய்திருக்கிறது உள்துறை. இந்த அட்வைஸை அமித்ஷாவின் கட்டளையாகவே எடுத்துக்கொண் டனர் சி.பி.ஐ. அதிகாரிகள். கோர்ட் உத்தரவுப்படி இசட் பிரிவு பாதுகாப்புடன் கட்டில், மெத்தை, போர்வை என வசதிகள் செய்யப்பட்டாலும் திகார் என்றதும் திகிலாகிவிட்டார் ப.சி.

சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் மூன்று மாதம் சிறையில் இருந்து அமித்ஷா அனுபவித்த வேதனைகளை ஓரிரு நாட்களிலேயே சிதம்பரம் உணர வேண்டும் என்கிற மேலிடத்தின் விருப்பத்திற்கேற்பவே சிதம்பரம் விசயத்தில் நடந்து வருகின்றன'' என்கிறார்கள்.
 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Congress struggles against the central government

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (30.03.2024) நாடு தழுவிய போராட்டம் நடத்த, அனைத்து மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமையகங்களில் அனைத்து காங்கிரஸ் பிரிவுகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Congress struggles against the central government

இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஜனநாயகத்தை முறியடிக்கும் முறையான செயல்பாட்டினை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது. நேற்று (28.03.2024) ரூ. 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (30.03.2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் பொது ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.