Skip to main content

அமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

எல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூலமாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.

 

admk



"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம்' என ஓப்பனாகவே பொதுக்கூட்டத்தில் பேசினார் அமைச்சர் சி.வி. சண்முகம். இதேரீதியில் பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலிக்கின்றன. எல்லவாற்றுக்கும் மேலாக, ஜூன் 8-ஆம் தேதி மதுரை கிழக்கு மாவட் டச் செயலாளரும் எம்.எல். ஏ.வுமான ராஜன்செல்லப்பா அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதைத் தொடர்ந்து 12-ந் தேதி மாவட்டச் செயலாளர் கள்-எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகி கள் கூட்டத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "வாயை மூடிப் பேசுங்கப்பா' என்கிற அளவிற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.சும் கூட்டாக அறிக்கை வேறு கொடுக்க வேண்டியிருந்தது.

 

ops



இந்த நிலையில் திங்களன்று ராஜன் செல்லப்பா மதுரையில் தனியாக கூட்டத்தைக் கூட்டி, "உள்ளாட்சித் தேர்தலை புதிய தலைமையுடன் அ.தி.மு.க. சந்திக்கும்' என்று பகீர் கிளப்பி, பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜன் செல்லப்பா வாய்ஸையே குன்னம் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க. இராமச்சந்திரன் எதிரொலிக்க, என்னதான் நடக்குது அ.தி.மு.க.வில் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஏன் இந்த போர்க்குரல் என்ற கேள்வியை ராஜன் செல்லப்பாவிடம் முன்வைத்தோம்.

 

ops



நம்மிடம் பேசிய அவர், இயக்கத்தோட வளர்ச்சிக்காக பொதுக்குழுவில் வைக்கவேண்டிய சில விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன். உண்மையில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்டுப்பாடோடு செயல்பட்டிருந்தால் அ.தி.மு.க. கோட்டையான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை இழந்திருக்க மாட்டோம். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் இல்லாத நிலையில் அவர் ஆட்சிக் காலங்களைவிட பல திட்டங்களைச் செயல்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி குறித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. அ.தி.மு.க.வுக்கு ஒரு வலிமையான தலைமை தேவை. அதனை பொதுக் குழுவை கூட்டி முடிவு செய்ய வேண்டும். டி.டி.வி. தினகரன் மாயை என ஆகிவிட்ட நிலையில் இனி அ.தி.மு.க-தி.மு.க என இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும். அதனால் அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.


தேர்தல் முடிவு வந்து ஒருமாத காலமாகியும் தோல்விக்கான காரணங்கள் குறித்து இன்னும் நாங்கள் சுயபரிசோதனை செய்யவில்லை. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எனது மகனின் தேர்தல் தோல்விக்கான காரணத்தை இதுவரை தலைமை கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் மதுரையிலுள்ள உட்கட்சி பூசல்தான் தோல்விக்கு காரணம் என தலைமையிடம் சொல்லியிருப்பேன்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத்குமார் தவிர இந்த ஆட்சி நீடிக்க காரணமாக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க் கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்லாதது தொண்டர்கள் மத்தியில் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளதோடு, இவர்களுக்கு ஏன் தலைமை வழிகாட்டவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் பத்து முறையாவது மந்திரிசபையை மாற்றியமைத்து இருப்பார். ஆர்வமில்லாத அமைச்சர்களை மாற்றியிருப்பார். மற்றவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பார். இரண்டு தலைமைக்குப் பதில் அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை என்ற எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். இந்த நல்ல கருத்திற்காக என்மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். எடுத்தாலும் கவலை இல்லை'' என்றார்.

  rajan chellapa



ராஜன் செல்லப்பாவின் கருத்தை வழிமொழிந்து அதற்கு முழு ஆதரவை தெரிவித்திருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் அதிரடியாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். என் மனதில் நீண்ட காலமாக நெருடலாகவே இருந்த கருத்தான ஒற்றைத் தலைமை இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தை சொல்லாமலேயே இருந்து வந்தேன். சரியான நேரத்தில் ராஜன்செல்லப்பா தெரிவித்ததும் அதனை ஆதரித்து எனக்கென்று தனிப்பட்ட முறையில் உள்ள சில கருத்துக்களை எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வெளிப்படையாகச் சொல்கிறேன். மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இனியும் கட்சியை பலிகொடுக்க முடியாது. ஒற்றைத் தலைமையின்கீழ் கட்சி வரவேண்டும் என்பதுதான் என்னுடைய உறுதியான கருத்து'' என அடித்துச் சொன்னார்.

கட்சிக்குள் எழுந்திருக்கும் கலகக் குரல் முதல்வர் எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஓ.பி.எஸ்.ஸை மையப்படுத்தியே எதிர்ப்புகள் வருவதால், மிச்சமுள்ள இரண்டு ஆண்டுகளையும் ஆட்சியிலிருந்தபடியே காலம் தள்ளிவிட வேண்டும் எனக் கணக்குப் போட்டு செயல்படுகிறார். அ.தி.மு.க.வில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது தி.மு.க. ஏற்கனவே அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த பிரமுகர்கள் மூலம் ஆளுங்கட்சியினருக்கு வலை வீசுவதைத் தொடர்கிறது. அ.தி.மு.க.வினரின் கலகக்குரல் தனது ஆபரேஷனுக்கு சாதகமாகும் என தி.மு.க. நினைக்க, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பெங்களூரு சிறையிலிருந்து சசிகலாவும் கவனித்து வருகிறாராம்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.