Skip to main content

மீண்டும் மீண்டும் பொள்ளாச்சியில் பயங்கரம் !

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

"ஐயோ... தன்யாவைக் காணோம்' என கோவை திப்பனூரில் ஒலித்த குரலும் அதைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தின் தாக்கமும்  இன்னும் அடங்கவில்லை. அதற்குள் "ஐயோ பிரகதியை காணோம்' என கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தார் பிரகதியின் அப்பாவான வெள்ளைச்சாமி. "20 வயது ஆன என் பொண்ணு இங்கே ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில் பி.எஸ்.சி. படிச்சுட்டு இருக்கா. அவளுக்கு நாட்டுதுரைங்கற பையனோட வர்ற ஜூன் மாசம் 13-ந் தேதி கல்யாணம் நடக்கவிருந்துச்சு. கடந்த வெள்ளிக்கிழமை 1:45 மணிக்கு என் மனைவி ராணிக்கு போன் செஞ்சா. "அம்மா, திண்டுக்கல்லுக்கு வர்றதுக்காக பஸ் ஏற நிக்கறேன்'ன்னு சொன்னா. அதுக்கப்புறம்  நிச்சயம்பண்ணின நாட்டுதுரை, என்  பொண்ணுக்கு போன்பண்ணி "எங்கே இருக்கே'ன்னு கேட்டதுக்கு "பல்லடத்துகிட்ட வந்துட்டு இருக்கேன்'னு சொல்லியிருக்கா. ஆனா, என் பொண்ணு பிரகதி இப்ப வரைக்கும் வீடு வரலைங்க'' என கண்ணீரோடு புகார் கொடுக்க... ரகசியமாய் விசாரிக்க ஆரம்பித்தது போலீஸ்.

 

pollachi



அடுத்தநாள் மாலை பொள்ளாச்சி பூசாரிப்பட்டியில் பிரகதி அரை நிர்வாணமாய் அலங்கோல நிலையில் கிடந்தாள். உடனே பூசாரிப்பட்டி லிமிட், கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், காட்டூர் போலீசுக்கு தகவல் கொடுக்க... பரபரப்பாகிவிட்டது  கோவை. பிரகதியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், கோவை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்ய உடலைக் கொடுத்தனர்.

அங்கே நம்மிடம் பேசிய பிரகதியின் அண்ணன் அரவிந்த்குமார், "சார், எங்களுக்கு டவுட் மாமா முறையில இருக்கற சதீஸ் குமார்தான். ஏன்னா அவன் தான் என் தங்கச்சியை லவ் பண்ணினான். நாலு வருசத்துக்கு முன்னால அவன் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்து நின்னான். ஆனா எங்க அப்பா, "என் பொண்ணை நல்லா படிக்க வைக்கணும் தம்பி... நீ  வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்க'ன்னு சொல்லிட்டாரு. கோபமா அப்ப போனவன் கேரளாவுல ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிட்டான். ஆனா இப்பவும்  என் தங்கச்சி பின்னால சுத்திக்கிட்டு தான் இருக்கறான்னு கேள்விப்பட்டோம்.

 

pollachi issues



என் தங்கச்சியை கல்யாணம் பண்ணவிருந்த நாட்டுதுரை போன் பண்ணினப்போ... "பல்லடத்துல இருக்கறேன்'னு என் தங்கச்சி பொய் சொல்லியிருக்கா. "நாட்டுதுரை போன் பண்ணும் போது "கேரளா பார்டர்ல தான் அவ போன் டவர் காட்டி இருக்கு'ன்னு போலீஸார் சொன்னாங்க. அப்பவே நாங்க முடிவு பண்ணிட்டோம். சதீஷ்குமார்தான் கொலை பண்ணியிருக்கான்னு. ஆனா அவன் மட்டும் பண்ண வாய்ப்பில்லை. கூட எவனோ அ.தி.மு.க. கட்சிக்காரன் இருக்கான். ஆனா அவனை போலீஸ் மறைக்கிறாங்க. இன்னும் நாங்க சொன்ன அந்த சதீஷை ஏன் போலீஸ் கைது பண்ணாம  இருக்காங்கன்னு தெரியலை'' எனச்சொல்ல இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டான் சதீஷ்குமார்.

கைதான சதீஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், "நான் பிரகதியை லவ் பண்ணினேன். அவளும் லவ் பண்ணினா. அவகூட நான் ஏற்கனவே உறவுகொண்டேன். அதனாலதான் அவளை கல்யாணம் பண்ண விருப்பப்பட்டேன். ஆனா வெள்ளைச்சாமி… பொண்ணை தர மாட்டேன்னு சொல்லிட்டாரு.  நான் கேரளாக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக் கிட்டு குழந்தை பெத்துட் டாலும் பிரகதிதான் எனக்கு உசிரு. அப்படி உசிரா இருக்கற என்கிட்டயே "நாட்டுதுரைங்கிறவரை கல்யாணம் பண்ணப் போறேன்'ன்னு பிரகதி சொன்னா. என்னால தாங்க முடியலை. பத்திரிகை கொடுக்கணும்னு சொன்னா. "நேரா வந்து வாங்கிக்கிறேன்'னு நான் சொன்னேன். காலேஜுக்கு வரச்சொன்னா. கார் எடுத்துக் கிட்டு அவளை பிக்-அப் பண்ணினேன்.  கேரளா பார்டர் பக்கம் கூட்டிட்டு போனேன். அங்க கார்ல வச்சு அவளை அனுபவிச்சேன். "நீ  யாரையும் கல்யாணம் பண்ணக்கூடாது'ன்னு சொன்னேன். ஆனா அவ, "இதுதான் கடைசி. நான் இனிமே உன்கூட வர மாட்டேன்'னு சொன்னா. என்னால தாங்க முடியலை. நான் சொல்றதுக்கு எல்லாம் எதிராவே பேசினா. அந்தக் கோபத்துலதான் கத்தியால அவ கழுத்தை அறுக்க போனேன். அவ தடுக்க ஆரம்பிச்சா. அவ விரலை கட்  பண்ணிட்டுதான்  அவ கழுத்தை அறுக்க முடிஞ்சது. என்ன பண்றது... ஏது பண்றதுன்னு தெரியாம  அவ உடம்பை ஒரு நைட்டு முழுக்க கார்ல வச்சு சுத்திட்டேயிருந்தேன். அதுக்கப்புறந்தான் பூசாரிப்பட்டியில பிரகதியை தூக்கி வீசினேன்'' என அவன் வாக்குமூலம் கொடுத்தான்.

கோமங்கலம் இன்ஸ்பெக்டர் வைரமை  தொடர்பு கொண்டோம். "சார், இப்போ எதையும் சொல்ல நேரமில்லை'' என கட் செய்துவிட்டார். ஒட்டுமொத்தமான போலீஸார் தரப்பிலோ, "பிரகதி வழக்குல இந்த சதீஷ்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கான்' எனச் சொல்கிறார்கள். "இந்த ராமநாயக்கன் புதூர்ல இருக்கற மயானத்துல தான் என் தங்கச்சி பிரகதியை புதைச்சுட்டு இருக்கறோம். அவளை ஒருத்தன் தான் கொன்னான்னு போலீஸ் சொல்றதை நாங்க நம்பவேயில்லை. எஸ்.பி.யா இருந்த பாண்டியராஜன்தான் பொய் சொன்னாருன்னா இப்ப போட்ருக்கற போலீஸாரும் பொய் சொல்றாங்க.  நாங்க போராடுவோம்'' என்கிறார்கள் பிரகதியின் அண்ணனான அரவிந்தும், அவன் நண்பர்களும்.  பொள்ளாச்சி நிறைய உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது.  

 

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.