Skip to main content

கவிஞர் பிறைசூடனுக்கு  நினைவஞ்சலி!  பிறை மறையும் வளரும்!

Published on 08/10/2021 | Edited on 09/10/2021

 

 

 

Obituary to poet piraisoodan

 

திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது 65. பிறைசூடன் இயற்பெயர் சந்திரசேகர்.அவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர்.அவருக்குப் பத்து பிள்ளைகள்.

 

ஆம், பிறைசூடனின், உடன்பிறந்தோர் ஏழு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் .பிரபல ஒளிப்பதிவாளர் மதி பிறைசூடனின் தம்பி. மதி தமிழில் சில படங்கள் பணியாற்றிவிட்டு இப்போது தெலுங்கில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

 

தனது சொந்த ஊரான நன்னிலத்துக்கு இயக்குநர் சிகரம் கே .பாலச்சந்தர் வந்தபோது, அவரை, பிறைசூடன் போய்ச் சந்தித்திருக்கிறார். பிறைசூடன் தமிழில் மட்டுமல்ல ஜோதிடக் கலையிலும் ஆர்வம் உள்ளவர், ஜோதிடம் பற்றி பாலசந்தரிடம் பேசியபோது பாலச்சந்தரின் மனம் கவர்ந்து விட்டார். பிறைசூடனின் தமிழ் ஆர்வத்தையும் கவியார் வித்தையும் கண்ட பாலச்சந்தர் திரைப்படத்துறைக்கு வரலாமே என்று அழைத்திருக்கிறார்.

 

Obituary to poet piraisoodan

 

அவர் சென்னைக்கு போவது என்று முடிவெடுத்தபோது கிராம நிர்வாக அலுவலர் என்ற அரசுப் பணி வந்து இருக்கிறது. நான் கவிஞராகவே வாழ்க்கை அமைத்துக் கொள்வேன் என்று அப்படி அரசு வேலையை உதறிவிட்டுச் சென்னை வந்தவர்தான் பிறைசூடன்.

 

1985ஆம் ஆண்டு வெளியான 'சிறை' திரைப்படத்தில் ராசாத்தி ரோசா பூவே என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு   இதயம், பணக்காரன், அமரன் ,கேப்டன் பிரபாகரன் ,ராசாவின் மனசிலே ,அரண்மனைக்கிளி தாயகம் போன்று சுமார் 400 படங்களுக்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். அது மட்டுமல்ல ஏராளமான பக்திப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

 

தொலைக்காட்சி தொடர்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர் .ரகுமான், தேனிசைத் தென்றல் தேவா உள்ளிட்ட மூத்த இளைய இசையமைப்பாளர்கள் பலருடனும் பணியாற்றியவர். என் ராசாவின் மனசிலே, தாயகம் படங்களுக்காக தமிழக அரசின் விருதையும் பெற்றவர் .தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருதையும் பெற்றுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இவருக்குக் கவிஞானி என்ற பட்டம் வழங்கினார்.  தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.

 

இனிய வரும் பழகுவதற்கு எளியவருமான பிறைசூடன்,சிறையில் ராசாத்தி ரோசாப்பூ என்று எழுதத் தொடங்கியவர்,
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின்  உயிரின் உயிரே ,
 

' கேளடி கண்மணி ' படத்தின் தென்றல் தான் திங்கள் தான், ' சிறையில் பூத்த சின்ன மலரில் ' எத்தனை பேர் உன்னை நம்பி,

 

'அரங்கேற்ற வேளை ' யில் ,
குண்டு ஒன்னு வச்சிருக்கேன், 'பணக்காரன் ' காதல் செய்யும் நேரம் இது,

 

'மாப்பிள்ளை ' யில்
வேறு வேலை உனக்கு இல்லையே,

 

'ராஜாதி  ராஜா 'வில்
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா,

 

'என் ராசாவின் மனசிலே ' யில் சோலைப் பசுங்கிளியே
'அரண்மனைக்கிளி'  யில் நட்டு வச்ச ரோசாச் செடி ,'செம்பருத்தி '  யில் நடந்தால் இரண்டடி, 

 

'மை டியர் மார்த்தாண்டன்' படத்தில் ஆ அழகு நிலவு, என எத்தனையோ படங்களுக்குப் புகழ்பெற்ற  பாடல்கள் எழுதினாலும் அவர் எப்போதும் எளிமையானவராக இருந்தார். 

 

Obituary to poet piraisoodan

 

அவரது எளிமையான தோற்றமே திரை உலகின் தட்ப வெட்ப நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரை மேலே கொண்டு செல்லாமல் தடுத்தது என்று சிலர் கூறுவார்கள். தன்னை வெளிப்படுத்திய அளவிற்கு வியாபாரம் செய்யத் தெரியாதவர் அவர் என்பார்கள் .வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இல்லாதவர். எளிமையான கவிஞராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

 

பிறைசூடன் பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் எதுவுமே இருந்ததில்லை அப்படி ஒரு நேர்நிலை வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவ்வகையில் இவ்வுலகியல் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 
அவர் வாழ்க்கை கூறுவது இந்த சமூக நல்லிணக்கத்தைத்தான். 

 

பிறைசூடன் மறைவுக்கு சாதாரண திரைக் கலைஞர் முதல் தமிழக முதல்வர் வரை இரங்கல் செய்தியுடன் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.இதுவே அவரது வாழ்க்கையின் பயன் என்று கூறலாம். பிறைசூடன் திரைப்படக் கவிஞர் என்று அறியப்பட்டாலும் ஏராளமான பக்தி பாடல்களும் எழுதியுள்ளார். ஏராளமாக ஆன்மீக சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். 

 

சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு உண்டு.சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். ஆன்மீகம் தத்துவம் பற்றிய புரிதல் இருந்ததால் சினிமாவில் அவர் பணத்தைத் துரத்தும் வேலையைச் செய்யவில்லை. மனிதர்களால் ஆனதுதான் வாழ்வு பணத்தால் ஆனதல்ல என்பதே அவர் வாழ்க்கை கூறும் செய்தியாகும்.

 

                                                                                                                            - அபூர்வன்

 

 

 

 

 

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.