Skip to main content

'விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை நினைக்கிறார்கள்' நூரி அம்மாள் கோபம்!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

இளம் வயதில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு இன்று அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து வழிநடத்தும் ஆசிரியராக இருப்பவர் நூரி அம்மாள். இந்த நோய் ஏற்படுத்தும் பாதிப்புக்களை விட அவருக்கு இந்த சமூகம் தந்த தொல்லைகள் என்னென்ன? அதை எவ்வாறு கடந்தார் என்பதை அவரிடம் கேள்விகளாக முன்வைத்தோம். அவரின் பதில்கள் வருமாறு,

சின்ன வயதிலேயே நீங்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டீர்கள். எவ்வாறு அதில் இருந்து மீண்டு இந்த நிலையை அடைந்தீர்கள், அதற்காக நீங்கள் அடைந்த சிரமங்கள் என்னென்ன?

வாழ்கையை கஷ்டமாக நினைத்தால் கஷ்டம்தான். எளிமையா நினைத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். என்னை பொறுத்தவரையில் நான் அதனை நோயாக நினைக்கவில்லை. அது ஒன்றும் கேன்சர் இல்லை. வெட்ட வெட்ட வளர்வதும் இல்லை. அது ஒரு கண்ணுக்கு தெரியாத நோய் கிருமி. உடம்பில் அது எங்கேயோ உலவி வருகிறது. அதையே நினைச்சிகிட்டு இருந்தா உடம்புக்கும் கேடு, மனதுக்கும் கேடு. அதனால் நான் அதை நினைத்துக்கொண்டு என்னை முடக்கிக் கொள்வதில்லை. 80களின் இறுதியில் பெரிய பெண் டாக்டர் ஒருவரிடம் கவுன்சிலிங் சென்றேன். நீங்க எதுக்கு வருகிறீங்கன்னு கேட்டாங்க. அப்ப நான் சொன்னேன், டாக்டர் நான் சின்ன வயசிலேயே ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் வரை என்னுடன் உறவில் ஈடுபடுவார்கள். எனக்கு பால்வினை நோய்கள் கூட வந்துள்ளது. எனவே அந்த உறவின் காரணமாக எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளத்தான் வந்தேன் என்று கூறினேன். அவர்கள் பதினைந்து நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பிறகு அவர்கள் சொன்ன தேதியில் நானும் சென்றேன். அவர்கள் தயங்கியபடியே என்னிடம் பேசினார்கள். நான் அவர்களிடம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள், நான் தாங்கி கொள்வேன் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தார்கள். நான் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று கேட்டேன். ஒன்று அல்லது இரண்டு வருடம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். அப்போது நான் விதமான ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு சற்று வருத்தமாக இருந்தது. நான் சில குழந்தைகளை அப்போது தத்தெடுத்து வளர்த்து வந்தேன். அவர்களுக்காகவாது வாழ வேண்டும் என்ற வைராக்கியம் என் மனதில் பிறந்தது.

 

 

j



பிறகு சில நாட்கள் இடைவெளியில் அந்த மருத்துவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னிடம் பேசினார்கள். அடுத்து என்ன செய்வதாக இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் மீண்டும் தொழில் செய்ய விரும்பவில்லை, என்னால் யாருக்கும் இந்த நோய் பாதிப்பு வந்துவிட கூடாது என்று தெரிவித்தேன். அப்படினா சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என்று கேட்டார்கள். நான் ஏதாவது வழியை பார்க்கனும் என்று சொன்னேன். உடனே அவர்கள் எங்கள் மருத்துவமனையில் வேலை பார்க்க முடியுமா? என்றார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். அப்படியே கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ஓடியது. என்னால் முடிந்த அளவு இந்த நோய் தாக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். அவர்களுக்கு மன ரீதியான நம்பிக்கையை அளிப்பேன். இப்படியே ஆண்டுகள் ஓடி வருகிறது. தற்போது இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு கட்டடம் கட்டி வருகிறேன். அதன் காரணமாக பல குடும்பங்கள் பலம் அடையும் என்று நம்புகிறேன். 

தற்போது திருநங்கைகளுக்கு போதுமான உரிமைகள் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

என்ன கிடைத்துள்ளது, ரேசன் கார்டு கிடைத்து இருக்கு, வோட்டர் கார்டு கொடுத்து இருக்காங்க, வேறு என்ன கிடைத்துள்ளது. எதுவும் இல்லை. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்களை அவுங்க வீட்டில் ஏத்துக்கிட்டாங்களா? அப்படி எதுவும் நடக்கவில்லையே. அரசாங்கம் பாதுகாப்பு விழிப்புணர்வுகளை அதிகம் ஏற்ப்படுத்த வேண்டும். விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை பற்றி சொல்வதாக நினைக்கிறார்கள். இந்த நோயே வரக்கூடாது. ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆண், பெண் இருக்க வேண்டும். அந்த மாதிரியான புரிதலை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் பலபேர் ஹெச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். விதவிதமான தவறுகளை செய்கிறார்கள். அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்காமல் அரவணைக்க வேண்டும்.
 

 

Next Story

எச்.ஐ.வி.யில் இருந்து மீண்ட உலகின் முதல் நபர் புற்றுநோயால் காலமானார்...

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

berlin patient passed away due to cancer

 

 

எச்.ஐ.வி. வைரஸில் இருந்து முற்றிலும் குணமடைந்த உலகின் முதல் நபர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 

 

கடந்த 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த டிமோதி ரே பிரவுன் 1995 ஆம் ஆண்டு எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து புதிய மருத்துவ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அவரின் எய்ட்ஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் மூலமாக கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணப்படுத்தப்பட்டார். இதனை குறிப்பிடும் விதமாக அவருக்கு ‘பெர்லின் நோயாளி’ என்ற பெயரும் உண்டு.

 

எச்.ஐ.வி.லிருந்து குணமாக சிகிச்சை பெற்றுவந்த சூழலில், 2006 ஆம் ஆண்டு அவருக்கு எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், அதற்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக அவரது மனைவி டிம் ஹோஃப்கென் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்! சிறுமிகளோடு ‘பழகிய’ கணேசன்! -விழி மூடிக் கிடக்கும் விருதுநகர் மாவட்டம்!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இங்கு அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்த வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்து, தற்போது அவர்கள் கம்பி எண்ணுகின்றனர்.

 

Misunderstanding of AIDS! Ganesan used little girls! Virudhunagar district in unawareness

 

உரிய மருத்துவ சோதனை மேற்கொள்ளாமல் அவசரகதியில் மேற்கண்ட ஐவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் – அந்த 5 பேரில் ஒருவரான கணேசன்,  எச்.ஐ.வி. தொற்றுள்ளவர் என்றும் அவரது மனைவி நிறைமதியும்கூட எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

2019 மார்ச் மாதமே, கணேசனுக்கும் நிறைமதிக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,  எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் மருத்துவ உதவிகளைச் செய்துள்ளது. ஆனாலும், இவ்விருவரையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அம்மையம் தவறிவிட்டது. இதைத் தனக்கு சாதமாக்கிக்கொண்ட கணேசன், சிறுமிகளை வேட்டையாடியிருக்கிறான்.

 

Misunderstanding of AIDS! Ganesan used little girls! Virudhunagar district in unawareness


கணேசனின் இக்கொடுஞ்செயலுக்கு எய்ட்ஸ் குறித்த தவறான நம்பிக்கையும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகள், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில்,  எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்கள் உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அது என்னவென்றால், கன்னித்தன்மை உள்ள இளம் பெண்களிடம், சிறுமியரிடமும் உறவு வைத்துக்கொண்டால், எய்ட்ஸ் குணமாகிவிடும் என்பதே. அதனால்தான், ‘மருந்து,  மாத்திரைகள் சரிப்பட்டு வராது.. உயிர் வாழவேண்டுமென்றால் சிறுமிகளோடு பழகவேண்டும்..’ என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறான், கணேசன்.

எய்ட்ஸ் கணேசனுக்கு மட்டும்தானா? என்று சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவனுடன் சிறையில் இருக்கும்,  சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலுள்ள திருவனும் இரணியவீரனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கணேசன், எய்ட்ஸ் குறித்த தவறான புரிதலால் அந்தப் பகுதியில், மேலும் எத்தனை சிறுவர்களிடம் நெருங்கினானோ? இது குறித்தெல்லாம் உடனே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவசியமாகும். ஏற்கனவே, எச்.ஐ.வி. ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தில், சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. தற்போது, கணேசன் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இனியாவது, விழித்துக்கொள்ளுமா விருதுநகர் மாவட்டம்?