Skip to main content

"நேருவால் மட்டுமல்ல... ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது.." - எல்.முருகன் தடாலடி

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 

ரகத

 

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இன்று இந்தியா 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி  முடிந்துள்ளது. விரைவில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அடைய வேண்டிய வளர்ச்சி தொடர்பாக நாம் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். இதன்படியே இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 

 


இதில் நாம் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை, நாட்டு மக்களின் நலம் சார்ந்த கொள்கைகளை, கோட்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக பாஜகவின் இந்த எட்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். சுகாதாரத் திட்டங்களுக்கு நாம் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இன்றைக்கு நாட்டில் யார் வீட்டிலும் கழிவறை இல்லாமல் இல்லை என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதற்காகக் கடுமையான கஷ்டங்களை இந்த அரசு எதிர்கொண்டது. மக்களுக்காக எந்த ஒரு கடினமான நிலையைக் கூட நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு காந்தியடிகள் பிறந்தநாள். அவரின் எண்ணத்தின்படியே இந்த ஆட்சி நல்லாட்சியாகச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கர்ம வீரர் காமராஜரின் எண்ணப்படியே எங்களின் நற்பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளோம். அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைய வளர்ச்சி திட்டங்களுக்கு காமராஜர் அன்றே முன்னெடுப்புக்களைச் செய்திருந்தார். பெருவாரியான அணைகளைக் கட்டி விவசாயம் செழிக்க அவர் பாடுபட்டார். இதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதற்காகவே நாம் அவரை கொண்டாடி வருகிறோம். 

 

இன்று வந்தவுடனேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்பாகவும், அந்த அமைப்பு நடத்தவுள்ள பேரணி தொடர்பாகவும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது நேற்று முளைத்த அமைப்பு அல்ல. 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கின்ற ஒரு அமைப்பு. இந்த பெருமைக்கு காரணமான ஒரு உன்னதமான அமைப்பு ஆர்எஸ்எஸ். அதன் பெருமைகளை யார் நினைத்தாலும் குலைக்க முடியாது. எத்தனையோ முறை இந்த அமைப்பை சிதைக்க முனைத்திருக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் மீண்டு வந்து, மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக நேருவே அதனை தடை செய்ய முயன்றார், ஆனால் அதிலிருந்து மீண்ட இயக்கம்தான் இந்த அமைப்பு. எனவே யாராலும் இந்த அமைப்பை எதுவும் செய்துவிட முடியாது. நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள். எனவே சட்டம் என்ன உரிமையைக் கொடுத்துள்ளதோ அதன்படியே எங்களின் செயல்பாடுகள் இருக்கும்" என்றார். 


 

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.