Skip to main content

'சினிமா, பீடி, சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை' -மத்திய நல ஆணையர் அறிவிப்பு!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

national scholarships portal labours childrens apply online

 

'சினிமா, பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய நல ஆணையர் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மத்திய நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்புகள் முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2020- 2021 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 250 முதல் ரூபாய் 15,000 வரை கல்வி உதவித்தொகைப் பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

1. https://scholarships.gov.in/ என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.

 

2. ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கென தனியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக்கணக்கை தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளைப் பெற்றிருக்குமாறு வைத்திருத்தல் வேண்டும்.

 

3. விண்ணப்பத்தாரர்கள் தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர்.

 

4. இத்திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பத்தாரர்கள், தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

 

Ad

 

5. கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in/ என்ற, தேசியக் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை கல்வி நிறுவனங்கள் மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தக்கட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31/10/2020 ஆகும்.

 

இது தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் உதவிக்கு மின்னஞ்சல் முகவரி: scholarship201718tvl@gmail.com, தொலைபேசி எண்: 044- 29530169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். (அல்லது) சென்னை கிண்டியில் உள்ள நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு அலுவலகத்தை அணுகலாம்". இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

ஏழை சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 social activist who bought new clothes for poor childrens

 

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.

 

அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.  

 

 

Next Story

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

child issue court judgement for labourer

 

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவனை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அந்தச் சிறுவனை பலமுறை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜூலை 28 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.