Skip to main content

கரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா..? - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

g


கரோனா வந்ததில் இருந்து ஆளாளுக்கு மணியம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நாம் நினைக்கிறோம், தமிழ்நாட்டுக்கு ஒரு இ.பி.எஸ். தான் இருக்கிறார் என்று. உண்மை அப்படி அல்ல, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு இ.பி.எஸ். இருக்கிறார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கின்றது. அது ஒரு இன்ஸ்பெக்டராக இருக்கட்டும், எஸ்.பி.யாக இருக்கட்டும், ஆட்சியராக இருக்கட்டும், அவர்கள் எடுப்பதுதான் முடிவாக இருக்கின்றது. மக்களாக இருக்கும் நாம் என்ன பாவம் செய்தோம். ஒரு பக்கம் கரோனா நம்மை கொல்கிறது. மூன்று நாட்களில் கரோனா ஒழிந்துவிடும் என்று கூறிய முதல்வர் தற்போது கடவுளிடம் பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். 

 

நம்மைவிட்டு கரோனா எப்போது போகும் என்று தெரியவில்லை. அதைவிட பெரிய கரோனா யார் என்றால் சில போலிஸ்காரர்கள். நான் அனைத்து போலிஸ்காரர்களையும் சொல்லவில்லை. சிலர் இருக்கின்றார்கள். சில போலிஸ்காரர்கள் ஆங்காங்கே கொடூரன்களாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு 2018ஆம் ஆண்டு திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜா என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். அவரிடம் ஹெல்மட் இல்லை என்ற காரணத்திற்காக அவர்களைத் துரத்திச் சென்று உதைத்ததில் அந்தக் கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மக்கள் எல்லாம் போராடுகிறார்கள், அதற்குப் பயந்து ஒரு வழக்கு போட்டார்கள். கொஞ்ச நாள் உள்ளே இருந்துவிட்டு அந்த ஆள் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு தற்போது வெளியே வந்துவிட்டார். 

 

கோவையில் இதே மாதிரி ஒரு சம்பவம் நடைபெற்றது. கடை விற்றுக் கொண்டிருந்த அம்மாவிடம் காவலர்கள் கடையை மூடு என்று சொன்னார்கள். கூட்டம் அதிகம் இருந்த அந்த நேரத்தில் அந்த அம்மாவின் மகன் காவலர்களைப் பார்த்து ஏதோ கூறியுள்ளான். இதனால் அவனை மாடு அடிப்பதைப் போல் காவலர்கள் அடித்தார்கள். அந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். காவலர்களுக்கு மனசாட்சியே இருக்காதா? அவர்களுக்கும் குடும்பம், அக்கா, தங்கைகள் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படி, என்ன அதிகாரம் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் அதனைக் காவலர்கள் தான் நடைமுறை படுத்த வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக இப்படி அராஜகம் செய்ய வேண்டுமா?

 

பொள்ளாட்சி வழக்கில் குற்றவாளிகள் மீது இவ்வளவு அக்கறையை காவலர்கள் காட்டினார்களா, லத்தியை கண்ட இடத்தில் வைத்து அடித்தார்களா, துன்புறுத்தினார்களா என்றால் அப்படி எதுவுமே இல்லை.  ஏனென்றால் அது இவர்கள் பார்வைக்குத் தவறில்லை. ஆனால் தூத்துக்குடி வியபாரிகள் பென்னீக்ஸ் மற்றும் ஜெயராஜ் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இவர்களுக்குத் தெரிகிறார்கள். என்ன குற்றம் செய்தார்கள். ஊரடங்கு நேரத்தில் 5 நிமிடம் கடையைக் கூடுதலாகத் திறந்துவிட்டார்கள். இதுதான் அவர்கள் செய்த குற்றம். வேறு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 1.30 மணி வரை அடித்துள்ளார்கள். 

 

அவர்களுடைய அம்மா காவலர்களிடம் கதறி இருக்கிறார்கள். ஆனால் அது எதையும் அவர்கள் கேட்கவில்லை. 'போலீஸ் பிரண்ட்ஸ்' என்று ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சிலர் இருப்பார்களாம். அவர்களும் சேர்ந்து இவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் சத்தம் வெளியே தெரு முழுவதும் கேட்டுள்ளது. வலியில் அவர்கள் அலறி உள்ளார்கள். ஒருத்தரும் உதவிக்கு வரவில்லையே என்று அந்த அம்மா மறுகுகிறார்கள். அடிப்பவர்கள் யாரும் அவர்களிடம் இரக்கமே காட்டவில்லை. அப்படி என்ன தப்பு செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரும்? இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் கேளுங்கள் கரோனா கொடியதா அல்லது ஊரடங்கில் போலிஸ்காரர்கள் செய்வது கொடூரமா என்று, அவர்கள் காவலர்களைக் கைகாட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இதற்கெல்லாம் அவர்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிவரும் என்பது மட்டும் உண்மை.

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.