Skip to main content

திரைப்படமாகிறதா முருகனின் கதை! டைரக்டர்களுடன் விவாதிக்கும் தயாரிப்பாளர்கள்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

 

நகைக்கடை ஒன்றில் முகமூடி அணிந்து ஒற்றை ஆளாக நுழைந்து நகையை திருடுவதும், அதற்கு அடுத்து இன்னொரு முகமூடி போட்ட நபர் வரும் சிசிடிவி காட்சியை பார்த்து ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, அண்டை மாநில பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது எந்த நகைக்கடை? கொள்ளையர்கள் சிக்கினார்களா? என தொடர்ந்து அந்த செய்திகளை கவனிக்க தொடங்கினர் மக்கள். திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவம்தான் அது. 

 

LalithaaJewelleryRobberyTrichy



கொள்ளைச் சம்பவம் நடந்தது பற்றி செய்தி வெளியானது, அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சி வெளியானது, தனிப்படை அமைக்கப்பட்டது, திருவாரூரில் மணிகண்டன் என்பவன் கைது செய்யப்பட்டது, அவனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது, மணிகண்டனை பிடிக்கும்போது மற்றொரு நபர் தப்பியோடியது,


 

மேலும் சுரேஷ் என்பவன் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். அதனைத் தொடர்ந்து கொள்ளையன் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை சம்பவத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தான் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

முருகன் யார்? அவன் எப்படி இருப்பான் என அவனது புகைப்படத்தை பார்க்கவும் பொதுமக்கள் இணையதள செய்திகளையும், தொலைக்காட்சியையும் பார்க்க தொடங்கினர். இந்தநிலையில் பெங்களூரு போலீசார் முருகனை அழைத்துக்கொண்டு திருச்சி அருகே அவன் புதைத்து வைத்திருந்த நகைகளை எடுக்க வந்தனர் என்ற செய்தியும், முருகனையும் பெங்களூரு போலீசாரையும் வாகனத்தில் பின்தொடர்ந்து தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியது என எல்லா சம்பவங்களும் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இருந்தது. 

 

LalithaaJewelleryRobberyTrichy

லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகன் சரண் அடைந்தது லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் அல்ல, வேறொரு பெங்களூரு நகைக்கொள்ளை வழக்கில் எனவும், ஏற்கனவே பல நகைக்கொள்ளையில் அவன் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 
 

நகைக்கொள்ளையில் ஈடுபட்ட முருகன், தனது சமூகத்து மக்களுக்கு உதவி செய்து வருவது, சாலை போடும் வேலைகளை செய்யும் தனது உறவினர்களை காப்பாற்றியுள்ளதும், அந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஜே.சி.பி., ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் போன்றவைகளை வாங்கிக்கொடுத்துள்ளதும் தெரிய வந்தது. 


 

முருகனைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வரத்தொடங்கியதும், பொதுமக்களும் இந்த செய்திகளை ஆர்வமாக பார்க்க தொடங்கினர். செய்திச் சேனல்களிலும் மற்றும் இணையதள செய்திகளிலும் இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகின. படத்தில் வரும் கதையைப்போல இருக்கிறதே என்று திரைப்பட தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் முருகன் பற்றி செய்திகளை படிக்கவும், கேட்கவும் தொடங்கியிருக்கிறார்கள். 

 

LalithaaJewelleryRobberyTrichy


 

இந்த நிலையில்தான் முருகன் தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுத்து வெளியாகாமல் இருந்ததும், மற்றொரு படம் பாதியில் நிற்பதும் தெரிய வந்தது. மேலும் பெங்களூருவில் பங்களா இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களில் அவனுக்கு வீடுகள் இருப்பதாகவும், பினாமிகள் பெயரில் சொத்துக்கள் இருப்பதாகவும், கொள்ளையடிக்கும்போது தன்னுடன் வருபவர்களுக்கு பேசியப்படி எடைப்போட்டு பங்கு கொடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 
 

இதில் சினிமா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் வியப்புடன் பார்த்தது என்னவென்றால், முருகனுக்கு பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததுதான். மேலும் எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்ட முருகன் இனி அடங்குவான் என்று போலீசார் நினைத்திருந்த நிலையில், மீண்டும் ஒட்டுமொத்த காவல்துறையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தயாரிப்பாளர்களையும், டைரக்டர்களையும் வியக்க வைத்துள்ளது. 

ஏன் இதனை படமாக எடுக்கக்கூடாது? முருகனின் முழுக் கதைகளையும் சேகரித்து, அவனையும் சந்தித்து இதுதொடர்பாக எடுத்துச் சொல்லி அவனின் சம்மதத்துடன் திரைப்படமாக எடுத்தால் என்ன என்று தயாரிப்பாளர்கள் சிலர், தங்களுக்கு நெருக்கமான, நம்பிக்கையான டைரக்டர்களிடம் விவாதித்து வருகின்றனர். 

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.    

Next Story

“படம் பிடிக்கலைன்னா காலனியால் கூட அடிங்க” - இயக்குநர் பகிர் 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
hotspot director vignesh karthick viral statement

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலனியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலனியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு ஃபீல் பண்ண மாட்டீங்க. அப்படி ஃபீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலனியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும். 

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது” என்றார்.