Skip to main content

மோடி பதிலளித்த கேள்விகளும், பதில் சொல்லவேண்டிய கேள்விகளும்!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

மோடி இதுவரை சில தனிப்பட்ட பேட்டிகள் கொடுத்திருக்கிறார். அவற்றில் மோடியை பேட்டி கண்டவர்கள் கேட்ட கேள்விகள் மூலம் மோடியைப்பற்றி நாம் அறிந்தவை என்ன?

 

modi

 

மோடிக்கு மாம்பழம் பிடிக்கும்.

 

ஒவ்வொரு ஆண்டும் மோடி வனப்பகுதிக்கு செல்வார்.

 

அவரே அவருடைய உடைகளை துவைத்துக் கொள்வார்.

 

தினமும் யோகா செய்வார்.

 

மோடி எப்போது தூங்குவார்.

 

மோடியின் உடல்பலத்துக்கு காரணம் என்ன?

 

மோடியின் சாப்பாட்டு பழக்கம்.

 

தனது சம்பளத்தை மோடி என்ன செய்கிறார்?

 

நடிகை ட்விங்கிள் கன்னாவை ட்விட்டரில் மோடி பின் தொடரும் விஷயம்.

 

ஒபாமாவுடன் மோடிக்கு உள்ள உறவு.

 

மோடியின் ஆடை வடிவமைப்பாளர் பற்றிய விவரங்கள்.

 

இவற்றைப் பற்றியெல்லாம் பேட்டி கண்டவர் கேட்ட கேள்விகளுக்கு மோடி பதில் சொல்லியிருக்கிறார்.

 

ஆனால், பேட்டி கண்டவர் எதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டிருக்க வேண்டுமோ, மோடி எதைப்பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்திருக்க வேண்டுமோ அதையெல்லாம் கேட்கவும் இல்லை. மோடி பதில் சொல்லவும் இல்லை…

 

மோடியிடம் மக்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களைப் பார்ப்போமா?

 

1.பணமதிப்பிழப்பின் நோக்கங்கள் என்னாயிற்று?

 

2.ஐந்து ஆண்டுகளில் வேலை இழந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சம் என்கிறார்களே உண்மையா?

 

3.ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 

4.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்புப்பணம் இருப்பதாக சொன்ன மோடி, எவ்வளவு கருப்புப்பணத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டுவந்தார்?

 

5.தியாகியான ஹேமந்த் கார்கரேவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத மோடி, பயங்கரவாத குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பிரக்யாவுக்கு எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்?

 

6.கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முந்தைய அரசுகள் ஒதுக்கிய நிதியை மோடி ஏன் குறைத்தார்?

 

7.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் என்னவென்று மோடி சொல்வாரா?

 

8.புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உளவுத்துறை தவறுக்கு யார் பொறுப்பு?

 

9.தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டின் வளர்ச்சி குறித்து மோடி ஏன் பேசவே மறுக்கிறார்?

 

10.ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பான விவகாரத்தில் விமான விலையில் ஏன் ரகசியம் கடைப்பிடிக்கப்படுகிறது?

 

11.9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான பெட்ரோல் டீசல் மீதான வரி என்னாயிற்று?

 

12.பாஜகவுக்கு தேர்தல் நிதி வசூலித்ததில் ரகசியம் காக்கப்படுவது ஏன்?

 

13.அன்னிய நேரடி மூலதனத்தையும் ஆதார் விவகாரத்திலும் குஜராத் முதல்வராக இருந்தபோது எதிர்நிலையை எடுத்திருந்த மோடி, பிரதமரானதும் நிலையை மாற்றிக்கொண்டது ஏன்?

 

14.சர்வதேச எண்ணெய்விலை குறைந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருப்பது ஏன்?

 

15.டாலரின் மதிப்பை ரூபாய் மதிப்பில் 35 ரூபாய் அளவுக்கு மாற்றுவதாக சொன்னது என்னாச்சு?

 

16.விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் நாட்டைவிட்டு தப்பியது எப்படி?

 

17.பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக்காலத்தைவிட, எல்லைப் பகுதியில் எப்படி அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்?

 

18.பாஜக பதவியேற்ற இந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவில் ஏன் முந்தைய ஆட்சிகளைவிட அதிகப்படியான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது?

 

19.பாஜகவைத் தொடங்கி, வளர்த்த அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் மோடியின் உறவு எப்படி இருக்கிறது?

 

செய்தியாளர்களைச் சந்திக்க மோடி பயப்படுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பிரணாய் ராய், அக்‌ஷய் குமார் போன்ற சில தனிப்பட்ட நபர்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலைத் தயாரித்து செயற்கையாக ஒரு பேட்டியை மோடி கொடுத்தார். அந்தப் பேட்டிகளிலும்கூட மோடியின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மட்டுமே கேள்விகள் இடம்பெற்றன. மேற்படு மிக முக்கியமான 19 அரசியல் தொடர்பான கேள்விகள் இடம்பெறவே இல்லை.

 

நீங்களே சொல்லுங்கள் மேலே உள்ள 19 கேள்விகளுக்கும் மோடி பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறாரா இல்லையா? ஆம் என்றால், இந்தக் கேள்விகளுக்கு ஏன் அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்கூட விளக்கம் அளிக்க மறுக்கிறார்?
 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.