Skip to main content

பிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்?

Published on 04/04/2020 | Edited on 06/04/2020

கரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்தினை கண்டுபிடிப்பதில் ஆங்கில மருத்துவ உலகம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை மருத்துவமான சித்தா, மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவத்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து அந்தந்த மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்களிடமும், நிபுணர்களிடமும் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இதில் பங்கேற்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியாளரும், நிபுணருமான டாக்டர் சிவராமன் நம்மிடம் அது பற்றி விளக்கினார். பிரதமரின் காணொலியில் மத்திய அரசின் ஆயுஷ் துறையைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் 12 பேர் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் 4 நிமிடங்கள் பேச வேண்டும் என பிரதமர் அலுவலகம் சொல்லியிருந்தது.

 

bjp

 


மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் கனகவல்லி, மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரியும் பேராசிரியருமான டாக்டர் பிச்சையா குமாருடன், முக்கிய சித்த மருத்துவ பயிற்சியாளர் எனும் அடிப்படையில், எனக்கும் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது கலந்துரையாடலுக்குப் பிறகு நாங்கள் முன்வைத்த விஷயங்களை சித்த மருத்துவத்தின் மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயாணன் பிரதமரிடம் எடுத்துச் சொல்லி நேரடியாக விவாதித்தார்.

பிரதமரிடம் அவர் பேசும்போது, "கரோனாவைத் தடுக்கும் மருந்துகள் சித்தாவில் உண்டு. பல்வேறு மூலிகைகளை வைத்து உருவாக்கப்படும் கபசுரக் குடிநீரை கரோனாவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா தாக்குதலை தடுக்க முடியும். அதனை மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு பரிந்துரைப்பது அவசியம். மேலும், நவீன மருத்துவத்துடன் கூட்டாக, இந்நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்' என கேட்டுக் கொண்டார். முந்தைய காலங்களில் நவீன மருத்துவத்துடன் இணைந்து நிலவேம்பைச் சிறப்பாக கையாண்டு தமிழகம் முழுவதும் டெங்குவை எதிர்கொண்டதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். பிரதமரும் அதைக் குறித்துக்கொண்டார்.

டெல்லி, கோவை, பெங்களூர், ஹரித்துவார் உள்ளிட்ட நகரங்களிலுள்ள சித்தா-ஆயுர்வேதா பேராசிரியர்கள் பலரின் கருத்துகளையும் குறிப்பெடுத்துக்கொண்ட பிரதமர், நெருக்கடியான இந்த நேரத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி துறைகளின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், ஆதாரப்பூர்வமான கண்டுப்பிடிப்பும் ஆராய்ச்சியும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக விவரித்தார் என்கிறார் டாக்டர் சிவராமன்.

 

 

doctor



இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து அவரிடம் பேசியபோது, "உலகம் முழுவதும் இதன் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நோய் பரவுதல் மற்றும் அதன் பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் பிரிவின் ஆய்வுத் துறை (சி.டி.டி.இ.பி.) பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த துறையின் வல்லுநர்கள் பல எச்சரிக்கைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளனர். அதில் மிக முக்கியமானது தற்போதிருக்கும் 21 நாள் ஊரடங்கு முக்கியமென்றாலும் அதோடு இந்த வைரஸ் நின்று விடாது'' எனச் சொல்கின்றனர்.

மக்களிடம் அலட்சியம் இருக்கக்கூடாது. ஊரடங்கு முடியும் ஏப்ரல் 14-க்கு பிறகு சில ஆபத்துகள் உருவாக வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு சொல்கிறது. சமூக பரவலின் வீரியம் அதிகமாகும்போது எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும், தீவிர மருத்துவம் தேவைப்படும். அத்தனைப் பேருக்கும் அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு கூறுகிறது. அதனால், ஏப்ரல் துவக்கத்திலிருந்து எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, நாம் வீட்டுக்குள்ளே சுய பாதுகாப்பில் இருப்பது மட்டுமே ஒரே வழி!

அதேசமயம், தட்ப வெட்பத்திற்கும் காற்றின் நீர்த்துவத்துக்கும் வைரஸ் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வின் முடிவுகள் சின்னதாக ஒரு ஆறுதலை தருகிறது. மெசஷுட்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், 6 டிகிரி முதல் 18 டிகிரி வரை தட்பவெட்பமுள்ள பகுதியிலும், காற்றில் குறை நீர்மமுள்ள பகுதியிலும்தான் கரோனா வைரஸின் உச்சக்கட்ட உக்கிர தாக்குதல் மற்றும் உயிரிழப்பு அதிகம் நிகழ்கிறது என்பதை கணக்கிட்டுள்ளனர். அதேசமயம், இந்தியாவில் நடக்கும் அனுபவத்தை வைத்துத்தான் முடிவுக்கு வர முடியும் என்கிறது ஆய்வு.

கோடையில் இத்தொற்று குறையும் என்கிற கருத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்காத நிலையில், 25 முதல் 35 டிகிரி வெப்பமுள்ள தமிழகத்தில் வைரஸின் பரவுதல் குறையக்கூடும் என்கிற நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி இருப்பினும் ஏப்ரல் 14 வரை தனித்திருப்பதும் வீட்டுக்குள் சுய பாதுகாப்புடன் இருப்பதும்தான் இப்போதைக்கு சரியான தீர்வு. பிரதமர் மோடியின் வலியுறுத்தலும் அதுவாகத்தான் இருக்கிறது. அதனால் வீதியில் நடமாடாதீர்கள், நீங்கள் போகும் பாதையில் காவலர்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால், கரோனா என்கிற காலன் இருக்கக்கூடும்'' என எச்சரிக்கிறார் டாக்டர் சிவராமன்.


 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.