Skip to main content

எனக்குச் சிவப்பு பார்டர் வைத்த கருப்பு சேலைதான் எப்பொழுதும் பிடிக்கும்!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

விடுதலைக்குப் பிந்தைய தமிழகத்தில் ஊரகப் பகுதிகள் வேகமாக மின்சாரமயமாகி திரையரங்குகள் பரவின. தி.மு.க. திரைப்படங்களை அரசியல் பரப்புரை நிகழ்த்தப் பயன்படுத்திக் கொண்டு மூன்று வழிகளில் ஈடுபட்டது. எம்.ஜி.ஆர். இரண்டு வழிகளை எடுத்துக்கொண்டார்.

 

anna



1.நேரடி பரப்புரை - சர்வாதிகாரி, மந்திரிகுமாரி, மர்மயோகி, நாடோடி மன்னன், தாய்மகளுக்கு கட்டிய தாலிலி, ஆகியவற்றில் நாத்திக வாதம், வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, காமுகரான குருக்களும் சாமியார்களும், கல்லான தெய்வங்கள், கொடுமைக்கார லேவாதேவிகள், வில்லத்தன பிராமணர்கள் காட்டப்பட்டடனர். நாடோடி மன்னன் தி.மு.க.வின் மக்கள் சேவையை வெளிப்படுத்தியது என்றார் எம்.ஜி.ஆர்.

2.கட்சி அடையாளம், கட்சி வண்ணம். தலைவர்களின் பெயர்கள் ஆகியவற்றைப் படங்களில் காட்டினார். "ராஜகுமாரி'யில் கருஞ்சட்டை, நாடோடி மன்னனில் தி.மு.க. கொடியும் உதயசூரியனும்; சக்கரவர்த்தி திருமகளில் உதய சூரியன் என்ற பெயர், "புதிய பூமி'யில் கதிரவன் என்றே பெயர், "காஞ்சித் தலைவன்' என்று படத்தின் பெயர். "உதய சூரியன் வெகுசீக்கிரம் வெளிச்சம் கொண்டு வரும்.' "அண்ணா நம்புகிறேன்! ஒட்டு மொத்த நாடும் உங்களை நம்புகிறது. உங்களையே பின்பற்றவும் செய்யும்.' "எனக்குச் சிவப்பு பார்டர் வைத்த கருப்பு சேலைதான் எப்பொழுதும் பிடிக்கும்' என்று பேசினார்கள்.

 

mgr



"அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' என்று அண்ணாவைப் பாடினார்.

படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லை
சர்க்காரு ஏழைப் பக்கம் இருக்கையிலே - நாங்க
சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
என்று தி.மு.க. ஆட்சியைப் பாடினார்

(ஒளிவிளக்கு). "நம் நாடு' படத்தில் கருப்பு சிவப்பு
ஆடையும் அண்ணா உருவப்படமும், அவரைத் தென்னாட்டு காந்தி என்ற புகழ்ச்சியும், சேரிப் பகுதிகளில் தி.மு.க. கொடியும், கருப்பு சிவப்பு சுவரொட்டிகள் என்று தி.மு.க. பதிவுகள்.

சூரியன் உதிச்சதுங்க

இங்கே காரிருள் மறைஞ்சதுங்க

சரித்திரம் மாறுதுங்க இனிமே

சரியாப் போகுமுங்க

என்று "வாங்கய்யா வாத்தியார்' பாடல் முழக்கம்.

1951-இல் வந்த "மர்மயோகி' வீரதீர பராக்கிரம சாகசநாயகன். இப்படமும் தி.மு.கழகச் சார்பு படமாகக் கருதப்பட்டது, கழக ஆதரவாளர்களால். ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாலிலிபப் பெரியார் என்ற வர்ணிக்கப்பட்டார். இவர் வசனம் எழுதிய படம் "சர்வாதிகாரி'. பிரதாபனாக எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் மந்திரிசபை. ஒரு பாடலில்,

உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க

இங்கே மந்திரிகளுக்கே மக்களுன்னு ஆச்சுதே’’

என்று பாடுவார்.

தேசியக் கவிஞர் வெ.ராமலிலிங்கம் பிள்ளையின் மலைக்கள்ளனில் நடித்தார். கவிஞர் சென்னை மாநில ஆஸ்தான கவிஞர். அரசியல் கலப்பில்லாமல் மு.கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.

திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதன் கவிஞர்களும் சம்பந்தப்பட்டால் படம் வெற்றிபெறும் என்ற அந்த இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத படத் தயாரிப்பாளர்களும் நம்பிக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில்சேர்ந்துகொண்டார்.1957-இல் தி.மு.க.விற்குஉதயசூரியன் சின்னம் கிடைத்தது. இதே ஆண்டில் சக்கரவர்த்தித் திருமகன். இதில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தின் பெயர் உதயசூரியன். வெற்றிமேல் வெற்றி குவிக்கும் மாவீரன் பாத்திரம். சட்டசபை தேர்தலிலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது.

-காவ்யா சண்முகசுந்தரம்.
 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.