Skip to main content

மருத்துவக் கல்லூரிக்காக முதல்வர் எடப்பாடியிடம் பணிகிறாரா எ.வ.வேலு? -கட்சியில் விவாதம்!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

E. V. Velu

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏக்களாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாவட்ட ஆய்வுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தார். இந்த நிகழ்வுக்கு வருகை தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தி.மு.க எம்.எல்.ஏக்களை அழைத்தனர். அன்றைய தினம், தி.மு.க. பொதுக்குழு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. ஆனால், தி.மு.கவில் கழக பொதுச்செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள் தேர்வு நடைபெற்றதால் முதல்வர் நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ளவில்லை.


இந்நிலையில், முதல்வர் வந்துசென்ற இரண்டு தினங்களுக்கு பிறகு (செப்டம்பர் 11) திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ.விடமிருந்து ஓர் அறிக்கை வெளிவந்தது. அதில், திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கிதந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி, பால்பவுடர் தொழிற்சாலை, செய்யாறு சிப்காட், ஆரணியில் பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரிகள், போக்குவரத்து மண்டலம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டம் முழுவதும் உழவர் சந்தைகள், சமத்துவபுரங்கள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.


திருவண்ணாமலை நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்ககூட நிதியில்லை. நகர் முழுவதும் ஆங்காங்கே தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு காணப்படுகிறது. சாத்தனூர் அணையில் இருந்து நகருக்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 55 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் பெண்கள் ரோட்டில் நின்ற அவலநிலையே நிலவியது. புதிய பேருந்து நிலையம் அமைக்க இன்று வரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. நிதி இல்லாத காரணத்தினால் தினியார் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு நெடுஞ்சாலைதுறையால் நிதி கோராப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சாலைகள் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பொதுப்பணித்துறையிலும் அதே நிலைதான். அரசு அலுவலகங்களோ பல இடங்களில் சரியாகவும், பாதுகாப்பாகவும் இல்லை. மாவட்ட வளர்ச்சிப் பணி கடந்த 10 ஆண்டுகளாக இந்நிலையில் உள்ளது.

 

E. V. Velu


தற்போது கரோனா என்ற கொடிய நோய் உலக நாடுகளில் குறிப்பாக தமிழகத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது. எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் வசதியே இல்லை, கழிவறைக்கு செல்பவர்கூட பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்லும் அவல நிலையே உள்ளது. முதல்வர் கிரிவலம் சென்றும், அ.தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்தார். ஆனால் கரோனா நோய் குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தியும், எவ்விதமான பலனும் மாவட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை, திருவண்ணாமலை மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்களும் எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சியது.

 

E. V. Velu

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார் என காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, பொதுமக்களை நடமாடவிடாமல் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதுதான் மிச்சம். கரோனா பரவலை தடுக்க விளம்பரங்கள் செய்யப்பட்டது. அ.தி.மு.க கட்சிக்காரர்கள் முதலமைச்சர் வருகிற வழியில் திட்மிட்டு லாரி, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆட்களைக் கும்பல் கும்பலாக கொண்டு வந்து வேடிக்கை பார்க்க வைத்தது தான் சமூக இடைவெளியைப் பின்பற்றும் லட்சணமா? முதலமைச்சரின் வருகை எந்த விவசாயிக்கும் பயனில்லை, பொதுமக்கள் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

E. V. Velu


இந்த அறிக்கை தான் தற்போது மாவட்ட தி.மு.கவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுப்பற்றி நம்மிடம் பேசியவர்கள், அறிக்கையோ, பேட்டியோ எதுவாக இருந்தாலும், தவறு உள்ளது எனச்சொல்லி தன்னை யாரும் எதிர்க் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக கருத்து தெரிவிப்பார் வேலு. ஆனால் இந்த அறிக்கையில் சில பிழைகளைச் செய்துள்ளார். அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்ட அதேநேரத்தில், முதல்வர் அந்தச் சாலையைக் கடந்ததும் சாதாரணமாகவே விடப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. அதேபோல் மாவட்டம் பிரிப்பு, மருத்துவக்கல்லூரி அமைப்பு என பலவற்றை இந்த மாவட்டத்துக்காக கழகம் செய்தது என சுட்டிக்காட்டிய வேலு, திராவிட முன்னேற்றக் கழகம் தான்செய்தது என்கிற வார்த்தையை அறிக்கையில் எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை. அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் வார்த்தைகளைக் கவனமாக அமைப்பார், ஒருமுறைக்கு நான்கு முறை அந்த அறிக்கையை திருத்தம் செய்வார். அறிக்கையில் கலைஞர் பற்றி, தலைவர் ஸ்டாலின் பற்றி, தி.மு.க என்கிற வார்த்தைகள் வருவதுபோல் பார்த்து அறிக்கை தருபவரிடம் இப்படியொரு அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றார்கள்.

 

Ad

 


இப்படி பிழைகளோடு வந்துள்ள இந்த அறிக்கை தான் பத்திரிகைகள் சொல்வது போல், தனது அருணை மருத்துவக் கல்லூரியின் அனுமதிக்காக முதல்வரை சந்தித்தார். அவருடன் நெருக்கமாக உள்ளார் என்பது உண்மையோ என்று தோன்றுகிறது. மேலும் தனக்கு பதவி தரவில்லையோ என கட்சி தலைமை மீதுள்ள அதிருப்தியில் இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது என்றவர்கள், செப்டம்பர் 3ஆம் தேதி எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் சேலம் குள்ளம்பட்டியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த 7 எம்.பிக்களை அழைத்துள்ளனர். இதில் சேலம் பார்த்திபன், தருமபுரி டாக்டர் செந்தில்குமார் உட்பட 6 பேரும் கலந்துகொண்டனராம். திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை வருகிறேன் எனச்சொன்னவர் அன்றைய தினம் உடல்நலம் சரியில்லை எனச்சொல்லி கலந்துகொள்ளவில்லையாம். முதல்வர் எடப்பாடியுடன் நல்ல நெருக்கத்தில் வேலு இருப்பதால் தான் அண்ணாதுரையை அனுப்பவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை நிரூபிப்பது போலவே இந்த அறிக்கையும் அமைந்துள்ளது என்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே.

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.