Skip to main content

"25 வருசமா நெறய கத்துக்கிட்டேன்... உங்க பாதம் தொட்டு வணங்குறேன்!" - அருண் விஜய் உருக்கம்!

Published on 18/02/2020 | Edited on 19/02/2020

மாஃபியா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் அருண் விஜய், படம் சம்பந்தமான சுவாரசியமான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பேசினார். விழாவில் அவர் பேசியதாவது, " திரைத்துறையில் இந்த வருடம் நான் 25-வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். இத்தனை ஆண்டில் நிறைய கற்றுக்கொண்டேன். இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. இங்கே இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களும் அதற்கு மிக முக்கிய காரணம். என்னுடைய குறை நிறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்து என்னை அடுத்த கட்டம் செல்வதற்கு எப்போது உத்வேகமாக அவர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன். இந்த மகிழ்ச்சியான சமயத்தில் மாஃபியா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. தடம் படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து இந்த படம் வெளிவர இருக்கிறது. கார்த்திக் மாதிரியான இளம் இயக்குநர்களிடம் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவருடைய பார்வை புதிதாக இருந்தது. அவர் கதை சொல்லிய போதே அதுகுறித்த ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டது. நம்முடைய கதாப்பாத்திரத்தை எப்படி காட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எனக்கே அதிகம் எழுந்தது. இந்த படம் எப்படி இவ்வளவு சீக்கிரம் பண்ண முடிந்தது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்ததுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமே இயக்குநர் கார்த்திக்கின் வேலைதான்.
 

jk



படத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை அவ்வளவு நேர்த்தியாக முன் கூட்டியே செய்ததால் தான் படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்க முடிந்தது. எனக்கே அவர் படத்தை தற்போதுதான் காண்பித்தார். அவ்வளவு வேலைகளையும் முடித்துவிட்டு தற்போது அதை 100 சதவீதம் நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அதனுடைய முழு சுவாரசியத்தையும் அறிய முடியும். அந்த மாதிரியான கதைக்களத்தையும், சவுண்ட் சிஸ்டமும் இந்தப் படத்தில் இருக்கும். சில நாட்கள் எல்லாம் இரவு பகல் பாராமல் சூட்டிங் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் எங்களுக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை. எனென்றால் கார்த்தியோட எனர்ஜி லெவல் அந்த மாதிரி இருந்தது. அதனால் எங்களுக்கு இந்த சிரமும் எந்த காட்சியிலும் இல்லாமல் முழு படத்திலும் நடிக்க முடிந்தது. இரவு 2 மணிக்கு சூட்டிங் நடைபெற்றாலும் அப்போது அதே எனர்ஜி லெவலுடனே காட்சிகளை இயக்குநர் எடுத்தார். அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். லைட் மேன் வரைக்கு அனைவரிடமும் முழு ஒத்துழைப்பு இருந்தது. அவங்களுக்கு எல்லாம் அது தேவையே இல்லை. இருந்தாலும் அனைவரும் அவர்களுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால்தான் நாங்கள் எந்த இடத்திலும் சோர்வடையாமல் வேலை செய்ய உறுதுணையாக இருந்தது" என்றார். 

 


 

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.