Skip to main content

“2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுதல்; ரிசர்வ் வங்கியின் மீதான நம்பகத்தன்மை கெடுகிறது” - கிருஷ்ணன்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

 Krishnan interview

 

2000 ரூபாய் நோட்டுகள் வரும் காலத்தில் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பல இடங்களில் இப்போதே 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்குவதில்லை. இந்த நடவடிக்கைக்கு அவர்கள் அளித்திருக்கும் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்தப் பணத்தை மாற்றுவதிலும் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை தங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தலாம். 

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய தோல்வி. சாமானிய மக்களின் மீது அரசாங்கம் தொடுத்த தாக்குதல் அது. அப்போது பல சாமானிய மக்கள் உயிரிழக்க நேரிட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் சொன்ன அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கான எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கவே இல்லை. மற்ற விஷயங்கள் அனைத்திற்கும் பல்வேறு விளம்பரங்கள் கொடுப்பவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தங்களுடைய சாதனை என்று கூறி ஒரு விளம்பரம் கொடுக்க முடியுமா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கிக்கு 30,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்றனர். இதுபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை இவர்கள் மீண்டும் மீண்டும் செய்வார்களோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

 

நம் நாட்டின் பணத்துக்கு வெளிநாட்டில் மரியாதையே இல்லாமல் போனது பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தான். ஒரு அரசாங்கம் இப்படி நடந்துகொள்ளக் கூடாது. மெதுவாகச் செய்ய வேண்டிய நடவடிக்கையை இவர்கள் இவ்வளவு விரைவாகச் செய்கின்றனர். இதனால் ரிசர்வ் வங்கியின் மீதான நம்பகத்தன்மையும் கெடுகிறது. அவர்களுடைய நம்பகத்தன்மையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இன்றே கடைசி!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Today is the last day to exchange 2000 rupee notes in banks

 

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.  

 

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில்  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும். இன்றுக்குள் வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

முன்னதாக புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையைத் திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, 1934 ஆம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் நிறைவேற்றப்பட்டது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள்; ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Rs.2 thousand notes RBI Action Notification

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதே சமயம் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்குத் திரும்ப வரவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில்  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையைத் திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, 1934 ஆம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் நிறைவேற்றப்பட்டது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்