Skip to main content

“எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா மறைந்த தினம் நல்ல நாள்தானே” - கே.சி. பழனிசாமி பொளேர் பேட்டி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

,m


சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜெயலலிதா மறைந்த நன்னாளில் என்று உறுதி எடுத்துக்கொண்ட சம்பவம் தொலைக்காட்சிகளில் வைரலானது. யாருமே கவனிக்காமல் எப்படி இந்த உறுதிமொழி படிவம் தயாரிக்கப்பட்டுப் படிக்கப்பட்டது என்ற கேள்வியை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் எம்பி. கே.சி.பழனிசாமியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு," நிச்சயமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த நாள் நன்னாள் தானே, அவர் மறைந்த காரணத்தால் தானே இவர் நான்கு ஆண்டுகள் அவரால் முதல்வராக இருந்த முடிந்தது.

 

இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்து நான் கருத்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவுக்குக் கருத்து தெரிவித்த அதிமுக தொண்டர் ஒருவர், அண்ணா எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் உண்மையாகவே அந்த நாள் தான் அவர்கள் வாழ்க்கையில் பெரிய நன்னாள். இல்லை என்றால் ஒருநாளும் அமைச்சர் பதவியைத் தாண்டி நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அந்த வகையில் எடப்பாடி தவறுதலாக இதைப் படித்ததாக நான் கருதவில்லை, அவர் மனதில் உள்ளதை அப்படியே அவர் வெளிப்படுத்தியதாகவே நான் பார்க்கிறேன் என்றார். இவர் சொன்னது கூட உண்மைதான் போல என்று அவர் பேசியதற்குப் பிறகு நானும் நினைத்தேன். அந்த அளவுக்கு இவர்கள் பதவி வெறி பிடித்து ஆட்டம் போட்டுள்ளார்கள். 

 

கட்சி அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில், உண்மையான அதிமுக நாங்கள் என்று இவர்கள் இருவரும் சண்டை வேறு போட்டுக்கொண்டுள்ளார்கள். இதில் எடப்பாடிக்கு டெல்லியில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் நான்தான் உண்மையான அதிமுக, என்னைத்தான்  டெல்லி அங்கீகரித்துள்ளது என்ற பெருமை வேறு, மற்றொருவருக்குத் தன்னை  அழைக்கவில்லையே என்ற வருத்தம் வேறு வாட்டி வதைக்கின்றது. எப்படி இருந்த கட்சி அதிமுக., மோடியா லேடியா என்று கேட்ட அம்மா எங்கே, எனக்கு அழைப்பு வந்துள்ளது என்று சந்தோசப்படும் இவர்கள் எங்கே? இவர்கள் இருவரும் தான் அதிமுகவைக் காப்பாற்றப் போகிறவர்களா?

 

இவர்கள் இருவரும் கோழைகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களால் தமிழக மக்களுக்கோ, கட்சிக்கோ  எவ்வித நன்மையும் எப்போதும் ஏற்படப் போவதில்லை. இத்தனை ஆயிரம் தொண்டர்களை அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று இவர்கள் இருவரும் நினைத்துள்ளார்கள். ஆனால் ஒருபோதும் அது நடக்காது. இவர்களைத் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் பாஜகவை அனுசரித்துப் போவதால் அவர்களுக்கு அதிகம் என்ன கிடைக்கப்போகிறது. சிறைக்குப் போவது தள்ளிப்போகும், அதிக பட்சம் ஒரு நியமன ராஜ்ய சபா எம்பி பதவி கிடைக்கும். அதைத்தாண்டி இவர்களாலும் எதுவும் செய்ய முடியாது; அவர்களும் அவர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.

 

வரலாற்று வெற்றிகளைப் பதிவு செய்த இந்த அதிமுக என்னும் இந்த பேரியக்கத்தை தற்போது சிரச்சேதம் செய்து வைத்துள்ளார்கள். இதிலிருந்து இந்த இயக்கத்தை மீட்டு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் கட்சி தொண்டர்களிடம் உண்மையாக இல்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களின் மனசாட்சியிடமாவது உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் அதைக்கூட இவர்கள் முறையாகச் செய்வதில்லை. மாற்றி மாற்றிப் பேசி தங்களின் பதவியைக் காப்பாற்றிக்கொண்டால் போதும், கட்சி போனால் போகட்டும் என்ற மனநிலையில் இவர்கள் இருவரும் இருப்பதே அதிமுகவின் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.

 

 

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.