Skip to main content

காஷ்மீர் பூமி  இனிமேல் எப்படி கார்ப்பரேட் பூமியாக  ஆகப்போகிறது?

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 

நேற்று வரை காஷ்மீர் என்றால் பனிசூழ் உலகம். இன்றோ அது அனல் பூமியாய் தகிக்கிறது.

 

காஷ்மீர் மீது தற்போது மத்திய அரசால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சரியா? தவறா? என்ற விவாதம், நாடு முழுக்க சூறாவளி எழுப்பிக்கொண்டிருக்க... நாம் அந்த விவகாரத்தை நாம் கவலையோடு கவனிக்கவேண்டியிருக்கிறது. 

 

குளிர் பிரதேசமான  காஷ்மீரை, அன்பும் அக்கறையும் காட்டி, அதன் மனதைக் குளிரவைக்க வேண்டிய மோடி அரசு, எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல், அதனிடம் இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சட்ட பிரிவு 370-ஐயும், அம்மாநில நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்ட பிரிவு 35ஏ-வையும் அதிரடியாக நீக்கியிருக்கிறது.  இது மிகப்பெரிய அபத்தமான செயல். இதை  இந்திய அரசியலின் ஓர் வரலாற்று பிழையாகவே நாளைய தலைமுறை குறித்துவைக்கும்.

 

k


இந்த செயலைக் கண்டித்தும் ஆதரித்தும் பலவிதக் குரல்கள் எழுந்தபடியே இருக்கின்றன. 
ஆனால் காஷ்மீர் மீது கண் வைக்கும் அணு ஆயுத நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும்  அதன் மீது கவனத்தையும் ஆசையையும் குவிப்பது கவலைக்குரிய ஒன்று. 

 

இந்த சங்கடங்களுக்கு எல்லாம் முக்கிய காரணம், காஷ்மீரின் புவி அரசியலும் (Geo-Political)  புவி நுட்ப அடையாளமும்தான்( Geo-Strategic Significance).
காஷ்மீர் என்ற அந்த அழகிய சின்ன  நிலபரப்பிற்காக, இந்தியாவும் பாகிஸ்தானும் பல முறை மோதலில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த சின்ன நிலப்பரப்பு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.


பாகிஸ்தான் குடிமக்களில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் விவசாயிகளே. அவர்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது காஷ்மீர்தான்.  திபெத்தில் தொடங்கும் சிந்து நதி, காஷ்மீர் வழியாக பல நீர் பிடிப்புகளுக்கு உயிர் கொடுத்துவிட்டு, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலை அடைகிறது. அந்த வகையில் சிந்து நதி காஷ்மீரைச்சிக்கல் இல்லாமல் கடந்து பாகிஸ்தான் வந்தால்தான் அங்கே பசுமை தழைக்கும் என்ற நிலை இருக்கிறது. 

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய துணை கண்டத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்த பிறகு, 1948 ஏபரல் 1-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வழியாகச் செல்லும் அனைத்து கால்வாய்களையும் அடைத்தது. இந்த பிரச்சனை பூதாகரம் அடைந்த பிறகுதான் காஷ்மீர்  விவகாரம் சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்குப் போனது.

இதற்கிடையில் காலிஃபர் ( Collier) என்கிற பிரபல பத்திரிகை , இந்தியா, பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பிறகான நிலைமையைக் கண்டறிந்து வெளிப்படுத்த நினைத்தது.  இதற்காக அது, அமெரிக்க வழக்கறிஞரும், ஐக்கிய அமெரிக்க அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டேவிட் லிலிந்தையாலை  (David Lilenthial) 1951 பிப்ரவரியில் அனுப்பியது. அவர் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானையும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் அவர் சந்தித்தார்.


1951 ஆகஸ்ட்டில் வெளிவந்த காலிஃபர் பத்திரிகையில் "வெடிகுண்டுகள் மற்றும் ஷெல்பைர் கொண்ட எந்த ராணுவமும் ஒரு நிலத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது. ஆனால் இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை அப்பேரழிவிற்கு உட்படுத்த முடியும். இந்தியாவின்  எந்தெந்த நீர்நிலைகள் பாகிஸ்தான் மக்களையும், அந்த நிலத்தையும் உயிரோடு வைத்திருக்கிறதோ அதை மூடுவதன் மூலம், இந்தியா நினைத்தால் அப்பேரழிவை ஏற்படுத்திவிடலாம்" என்று டேவிட் எழுதியிருந்தார்.


அதே கட்டுரையில் "இது மதம்சார்ந்த பிரச்னையோ அரசியல் சார்ந்த பிரச்சனையோ இல்லை. இது ஒரு தேசத்தின் பிழைப்பு சார்ந்த பிரச்சனை" என்றார். உண்மைதான் காஷ்மீரை இந்தியா கையில் வைத்திருப்பது என்பது, பாக்கிஸ்தானைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க,  ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் வைத்திருப்பதற்கு சமம். இந்தியா நினைத்தால் பாகிஸ்தானில் ஒரு மிகப்பெரிய பேரழிவையே உருவாக்கலாம். 


இந்த பிரச்சனைக்குப் பிறகு உலக வங்கி தலையிட்டுதன் பேரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மனம் ஒப்பி "சிந்து நதி ஒப்பந்தம்" போட்டுக்கொண்டார்கள். அதில் பியஸ், சட்லெஜ், ராவி போன்ற ஆறுகளைப் பயன்படுத்தும் முழு உரிமை இந்தியாவிற்கும், சிந்து, ஜீலம்,செனாப் ஆறுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை பாகிஸ்தானிற்கும் என்று அந்த ஒப்பந்தம் சொன்னது.  மேலும் இந்தியா மட்டும் மூல நதியினை சுரண்டாமல் பயன்படுத்தலாம் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருந்தது.


இந்த ஒப்பந்தம், உலகிலேயே இரு நாடுகளிடையே போடப்பட்ட வெற்றிகரமான நீர் நிலை ஒப்பந்தம் என்று போற்றப்பட்டாலும், இதிலும் நிறைய சிக்கல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள யூரி (uri)  என்ற நகரத்தில் இருந்த இந்திய ராணுவப் மீது நடப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகள் கூடி விவாதித்தனர்.  அப்போது, நாம் நம் நீர் வளத்தை பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தலாமா? என்று ஆலோசித்துப் பிறகு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

 

சமீபத்தில் நடந்த மக்களவைத்  தேர்தலுக்குச் சற்று முன்னர் நடந்த புல்வமா தாக்குதல் சமயத்தில் ,  மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் "பாகிஸ்தானுக்கு பகிர்ந்து வரும் நீரை இந்தியா நிறுத்தும் " என்று பதிவிட்டிருந்தார். அதாவது சிந்து நதி மூலமாக இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த ரவி மற்றும் பியஸ் ஆறுகள்  ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இடையேயான  மோதல் காரணமாக இந்தியா அதிகம் பயன்படுத்தப்படவில்லை. இது பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்திருந்தது. அதை நிறுத்தி அணைகள் கட்ட  நம் இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. 


ஏற்கனவே காஷ்மீர் நீர் நிலைகளில் நீர் மின்சார திட்டங்கள் பல தீட்டப்பட்டு, அதை செயல்படுத்தத் தொடங்கிய் நிலையில், இந்தியா, சிந்து நீர் ஒப்பந்தத்தை மீறுகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பாக்கிற்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது கிஷங் கங்கா நீர்மின் நிலையத் திட்டம். 2007ல் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட ஜீலம் ஆற்றில் இதை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.அப்போது பாகிஸ்தான், இது எங்களின் வறட்சிக் காலம் என்றெல்லாம் கதறினாலும் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவிற்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது.


அந்த நீர்மின் நிலைய தொடக்க விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நம் கைவசம் இன்னும் பல திட்டங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, காஷ்மீரின் நீர் நிலைகளில் அமைக்கப்படும் நீர்மின் நிலையங்கள் மூலம், நாம் இந்தியா முழுக்க மின்சாரம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இது கொஞ்சம் மிகைக்கூற்றாகவே இருந்தாலும், காஷ்மீர் நீர் நிலைகள் மொத்தம் 20,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் தயாரிக்கும் தகுதியுடையது என்று நம்பப்படுகிறது.ஆனால் தற்போது ஏறக்குறைய 2500 மெகா வாட்ஸ் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அதிலும் அதிக பட்சமாக இந்தியாவின் தேசிய நீர் மின்சார வாரியமே இதைத் தயாரிக்கிறது.  இதற்கு ராயல்டியாக்ல 12% மட்டுமே காஷ்மீர் அரசுக்கு வழங்குகிறது. காமன் வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி ( Common Wealth Human Rights Initiative [CHRI] ) என்ற சர்வதேச அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த வெங்கடேஷ்நாயக், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்தார். அதன்படி, பதிலளித்த தேசிய நீர் மின்சார வாரியம் ஜம்மு காஷ்மீரில் இயக்கப்படும் நீர் மின்நிலையம் மூலம் ஈடுபடும் மின்சாரத்தை 2001 முதல் 2015 வரை வெவ்வேறு மாநிலங்களின் பயன்பாட்டிற்கு விற்று ரூ.19,442 கோடி ஈட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.


2005-ல் இருந்து 2015 வரை காஷ்மீர், 20,000 கோடி ரூபாய்க்கு இந்தியாவிடம் மின்சாரம் வாங்கியுள்ளது. ஆக இந்தியா நினைத்தால் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படுத்தலாம், சொந்த லாபத்திற்காக ஒரு வளமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் காஷ்மீர் பகுதியில் 65% -பகுதியைத்தான் இந்தியா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதுதான் இந்தியா உட்பட காஷ்மீரைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் தலைவலியாக இருக்கிறது.


ஒருங்கிணைந்த காஷ்மீரின் எல்லைகள்  நம் இந்தியாவோடு மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், திபெத், சீனா, பாகிஸ்தான், இந்திய துணை கண்டம் என தொட்டு இருந்தது.

 

1950-ல் சீனா திபெத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய பிறகு 1951-57ல் திபெட்டிலிருந்து காஷ்மீர் வடமேற்கு நிலப்பகுதியான அக்சாய் சின் வழியாக க்ஸின்க்ஸிங் என்ற சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணத்திற்கு ஒரு நெடுஞ்சாலை அமைத்தது. அப்போது எல்லை அத்துமீறல் என்று குற்றச்சாட்டு எழ, அது 1962 இந்திய-சீனப் போரில் போய் முடிந்தது. வெற்றி பெற்ற சீனா, இந்தியா வரையறுத்த எல்லையை மறுத்து, அக்சய் சின் பகுதியை இன்றும் சொந்தம் கொண்டாடுகிறது. மேற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்  காஷ்மீர் பகுதியும், கிழக்கில் சீனா ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியும் இந்தியாவிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே சீனாவிடம் பாகிஸ்தான் உள்கட்டமைப்பு என்ற பெயரில் வாங்கிய அதிக கடனை கட்டமுடியாமல், அதிக பணத்தை முதலீடு செய்த பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிடம் இழந்து வருவதாக சர்வதேச அரசியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். 


இந்நிலையில் பாக்கின் ஆக்கிரமிப்புப் பகுதியான கில்கிட்டும், சீனா ஆக்கிரமிப்பான அக்சய்சின்னும், இந்த இரண்டில் ஏதோ ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பின் மூலம் ஓர் இடத்தில் இணைத்துவிட்டால் அது பாகிஸ்தானுக்கு நல்ல வரமாக அமையும். இதனாலேயே எல்லா வருடமும் இந்தியா வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக பட்ஜெட் ஒதுக்குகிறது. 


இப்போதைய அழகிய காஷ்மீர் பூமி  இனிமேல் எப்படி எல்லாம் கார்ப்பரேட் பூமியாக  ஆகப்போகிறது என்று இந்தக் கட்டுரை சொல்ல தேவையில்லை இன்னும் சில நாட்களில் மோடியின் அரசே அதை விளக்கும். ஒன்றை நாம் மறந்துவிட கூடாது இந்தியா எப்போதும் தானாகத் தாக்குதலை துவங்ககாத Defensive அரசு, ஆனால் பாகிஸ்தானோ Offensive அரசு.


- த . இலக்கியன்

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; இந்தியா கூட்டணியில் சிக்கல்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Trouble in India's alliance at Lok Sabha Elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த காங்கிரஸுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில், மேற்கு வங்கத்தில் 42 தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். 

அதனை தொடர்ந்து, 13 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, அம்மாநிலத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

அதில் குறிப்பாக, காஷ்மீரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்க்க வேண்டும் என்ற தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். இது மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீரில் தனித்து போட்டியிடுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

Trouble in India's alliance at Lok Sabha Elections

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளதாவது, “மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எங்கேயும் ஆதரவு இல்லை என்றும், 2019ஆம் ஆண்டு தேர்தலின் கட்சி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து மிகவும் கடுமையானது. 

மேலும், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களவைத் தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லாத சூழலை தேசிய மாநாட்டு கட்சி ஏற்படுத்திவிட்டது. எனவே, இந்த பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதியிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்களை கட்சியின் நாடாளுமன்ற குழு இறுதி செய்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார்.