Skip to main content

அடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்! 

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்த தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தௌபீக் இருவரையும், தமிழக மற்றும் கேரள காவல்துறையினர் கடந்த 8-ந் தேதி முதல் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இதாஸ் என்பவனை கர்நாடக போலீசார் கைதுசெய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், திருவனந்தபுரத்தில் இருந்து குஜராத் செல்லும் வேரவல் எக்ஸ்பிரஸ் ரயிலில், அப்துல் சமீமும், தௌபீக்கும் வருவது தெரியவந்தது.
 

incident



இந்தத் தகவலை கர்நாடக ரயில்வே போலீசாருக்கு தெரியப்படுத்தி, இருவரையும் உடுப்பியில் வைத்து கைதுசெய்தனர். கைதுசெய்தபோது தௌபீக் தனது தலைமுடியையும், அப்துல்சமீம் தாடியையும் ட்ரிம் செய்து அடையாளத்தை மாற்றி இருந்தனர். அவர்கள் இருவரிடமுமே செல்போன் இல்லை. தனது ஏழு மாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டுதான் தௌபீக் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். அவர்களை க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், 16-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தனர். அங்குவந்த சில நிமிடங்களிலேயே, "இந்த இடம் பாதுகாப்பான தல்ல. தீவிரவாதிகளை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்'’என்று எச்சரிக்கை மெசேஜ் வந்தது.

 

wilson



இதன்பிறகே, தக்கலை காவல்நிலையத்திற்கு தீவிரவாதிகள் இருவரையும் கூட்டிச் சென்றனர். அடுத்த 24 மணிநேரத்துக்குள் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவப் பரிசோதனை, அறிக்கை தயார்செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்'' என போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால், வில்சன் கொலை செய்யப்பட்ட தினத்தன்றே இந்த இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்து விட்டதாக உளவுப்பிரிவினர் தெரிவிக்கின்றனர். மேலும் கூறியபோது, "செக் போஸ்ட்டில் நேரடியாக தாக்கு மளவுக்கு துணிச்சல் இருக்கிறதென்றால், பெரிய நெட்வொர்க்காக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு, வேவுபார்த்துக் கொடுத்த சையது அலி உள்ளிட்ட 15 பேரின் விவரங்கள் அதில் கிடைத்தது. அதைவைத்து, இதுவரை 13 பேரைக் கைதுசெய்துள்ளனர். சையது அலி மற்றும் இன்னொரு நபர் தலை மறைவாக உள்ளனர். கூடியவிரைவில் அவர்களையும் கைதுசெய்து விடுவார்கள்'' என்றனர்.

 

incident



இதுதொடர்பாக மேலும் விசாரித்தபோது, "2013-ஆம் ஆண்டு பா.ஜ.க. பிரமுகர் எம்.ஆர்.காந்தியை நாகர்கோவிலில் வைத்து கொலைசெய்ய முயற்சித்த வழக்கில், அப்துல்சமீம் கைதுசெய்யப்பட்டான். ஆனால், நீதிமன்றம் அவனை நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுவித்தது. சிறையில் இருந்தபோது, காவல்துறையினரால் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளானான். அதுபோக, அப்துல் சமீம் மீது மேலும் ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தங்களது அமைப்பான இந்தியன் நேஷனல் லீக்கைச் சேர்ந்தவர்கள் மற்றும் அப்பாவி இஸ்லாமிய மக்களை காவல்துறையினர் பொய்வழக்குப் போட்டு சித்திரவதை செய்து வருகின்றனர். எனவே, காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டம் தீட்டியுள்ளனர். முதலில் காவல்நிலையங்களே இவர்களின் இலக்காக இருந்துள்ளது. ஆனால், குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாலேயே செக் போஸ்டைக் குறிவைத்துள்ளனர்.


களியக்காவிளை பகுதியில் உள்ள மெயின் செக் போஸ்ட் பகுதிக்கு சென்றபோது, நான்கு காவலர்கள் பணியில் இருந்ததால், அங்கிருந்து சந்தைவழி செக்போஸ்ட்டிற்கு சென்று தனியாக டியூட்டியில் இருந்த வில்சனை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்'' என்றனர்.

இவர்களது திட்டம் குறித்து அப்துல் சமீம் மற்றும் தௌபீக்கிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், "சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போல, இந்தியாவில் ஐ.எஸ். இந்தியா என்ற அமைப்பைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கினோம். அதற்கு கடலூர் காஜா மைதீனை தலைவராக்கி, குடியரசு தினத்தன்று மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்குள் மாட்டிக்கொண்டோம். நபிகள் நாயகம் சொன்ன முழுமையான, தூய்மையான இஸ்லாமியனை ஆட்சியாளனாகக் கொண்ட, இஸ்லாமிய நாடாக இந்தியாவை மாற்றவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்'' என்று தெரிவித்துள்ளனர். இந்த புது தீவிரவாதத்தின் நெடிய பாதையை நம்முடன் பகிர்ந்துகொண்டனர் மத்திய புலனாய்வுத் துறையினர்.


1995-ன் அதிகாலை நேரத்தில் நெல்லையின் மேலப்பாளையத்தில் டெய்லர் சங்கர், பூக்கடை கண்ணன், அந்தப் பகுதியின் பிரபலமான டாக்டர் செல்வகுமார் ஆகிய மூன்று பேர்களும் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். மூவரும் கரசேவைக்காக (அயோத்தியில் ராமர் கோவில் கட்ட) செங்கற்கள் அனுப்பினார்கள். அதற்காகவே மதம் சார்ந்த வகையில் மூவர் படுகொலை என்ற பயங்கரம் வெளிப்பட்டது. முக்கிய குற்றவாளியான மேலப்பாளையத்தின் கிச்சான் புகாரியும் அவனது ஆதரவாளர்களும் பிடிபட்டபோதுதான், அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவில் செயல்படும் அல் உம்மா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பு மேலப்பாளையத்தில் செயல்படுவது பற்றிய தகவலும் வெளியே வந்து மத்திய உளவு அமைப்புகளை அதிர வைத்தது.

பின்பு 2014 முதல் 2015 வரை, இந்துத்வா அமைப்புகளின் முக்கியப் புள்ளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதையடுத்து இந்தியாவில் அல் உம்மா இயக்கம் தடைசெய்யப்பட்டது. ஆனால் 30 வருடங்களாக பாகிஸ்தானில் உள்ள அபுபக்கர் சித்திக் இன்றுவரை சிக்கவில்லை.

பெங்களூர் பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலப்பாளையம் கிச்சான் புகாரி, பன்னா இஸ்மாயில், பறவை பாதுஷா, போலீஸ் பக்ருதீன் ஆகியோர் பிடிபட்டு பெங்களூர் சிறையில் வைக்கப்பட்டார்கள்.

பல மாநிலங்களிலும் தொடர்ந்த குண்டுவெடிப்புகளில் கேரளாவின் மலப்புரத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின் போது தீவிரவாதிகள் தவறவிட்ட இந்திய வரைபடம், பென் டிரைவ் மற்றும் அந்த இயக்கத்தின் டைரி உள்ளிட்ட கோழிக் கோடு புலனாய்வு ஐ.சி. தெஹ்ரா மற்றும் ஏ.டி.ஜி.பி. அஜீத்குமார் ஆகியோரிடம் சிக்கியதில் பயங்கரங்கள் வெளிப்பட்டன. வரைபடத்தில் த ஃபேஸ் மூவ்மெண்ட், என குறிப்பிட்ட அந்த அமைப்பின் பெயரும், பென்டிரைவ் மற்றும் டைரியில் ஜெய்ஸ் இ-முகம்மது என மற்றொரு அமைப்பு என்று இரண்டு தீவிரவாத அமைப்புகளும் தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவை என அந்த அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தொடர்ச்சியான விசாரணையில்... கொல்லம் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களின் மூலம், பயங்கரவாத அமைப்பான தஃபேஸ் மூவ்மெண்ட் மற்றும் ஜெய்ஸ் இ-முகம்மது இரண்டு அமைப்புகள் பற்றி வெளியுலகம் அறிந்தாலும், இவை தடைசெய்யப்பட்ட அல் உம்மாவின் மறு பெயரிலான எண்ட்ரிகள். கர்நாடகாவின் பட்கல் பகுதியின் சகோதரர்களான யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் தலைமையில் நடப்பவை. இவர்களில் யாசின் பட்கல் என்.ஐ.ஏ.வினால் கைது செய்யப்பட்டான். ரியாஸ் பட்கல் தலைமறைவானான்.

ஜன. 10 அன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லி போலீஸ், அதிகாலை நேரம், நேபாளத்திற்குத் தப்பிச்செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் பகுதியின் காஜா மைதீன், குமரி மாவட்டம் கோட்டார் பகுதியின் அப்துல் சமத் மற்றும் சையத் அலி நவாஸ் உள்ளிட்ட மூன்று பேரை வளைத்து விசாரித்திருக் கிறது. இவர்கள் மூவரும் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்ததுடன், "இங்கே அல் ஹந்த் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்காக ஆதரவாளர்களைச் சேர்க்கின்றோம்' என்று வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர்.

இவர்களுடன் காலிஸ்தான் அமைப்பினர், மியான்மர் ரோஹிங்யாக்கள், வங்கதேச தீவிரவாதிகள் வரை கூட்டாக இருந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக க்யூ பிரிவு போலீசார் முகம்மது ஹனிப்கான், இம்ரான்கான், முகம்மது செய்யது அலி உள்ளிட்ட மூன்று பேரை பெங்களூரில் வளைத்திருக்கின்றனர். அம்பத்தூர் சுரேஷ்குமார் படுகொலையில் இவர்களுக்குத் தொடர்பு என்பதுதான் வழக்கு. இவர்களில் முகம்மது செய்யது அலி குமரி மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவன். அதேசமயம், மேற்குவங்கமான கல்கத்தாவில் நான்கு பேர்களை தமிழக க்யூ பிரிவு கைது செய்திருக்கிறது. இந்த நான்கு பேரில், இரண்டு பேர்கள் தப்பித்து கேரளாவிற்குள் நுழைந்ததைத் தெரியப்படுத்த, கேரள போலீஸ் அலர்ட் ஆனதோடு அவர்கள் பற்றிய தகவல் கொடுத்தால் சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் இது குறித்து உஷார்படுத்தப்படவில்லை என கேரளத் தரப்பிலிருந்தே தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள், கல்கத்தா பீகார் ஜங்ஷன் பார்டர் வழியாக நேபாளத்தின் காத்மண்ட்டுக்குத் தப்பிச் செல்லலாம். அல்லது இரண்டரை மணிநேர பயணமாக முர்ஷிதாபாத் எல்லை வந்து பின் அங்கிருந்து சிட்டகாங்க் துறைமுகம் வந்தடைந்தால் சுலபமாகக் க்ராஸ் செய்து வங்கதேசம் சென்றடையலாம் என தெரிய வந்துள்ளது. பெங்களூரில் பிடிபட்ட சிலரும் புதிய அமைப்பு பற்றி போலீசிடம் சொல்லியிருக்கின்றனர்.

இந்தச் சமயத்தில்தான், கல்கத்தாவில் தங்களைப் போலீஸ் வளைத்துவிட்டது. தங்கள் அமைப்பு பற்றித் தெரிய வைக்கவும், வஞ்சம் தீர்க்கவும், குறி வைத்து இந்தக் களியாக்காவிளை சம்பவத்தை அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற பேச்சு கேரளாவில் ஓடுகிறது.

இதுபோன்ற தீவிரவாத அமைப்பினர் உள்ளூர் நபர் களின் உதவியின்றி நிச்சயம் செயல்படமுடியாது. ஸ்லீப்பிங் செல் என்று சொல்லப்படும் அந்த வகை நபர்கள், தகவலையும் உதவிகளையும் செய்துவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பி லிருந்து தகவல்களைக் கசியவிட, களியக்கா விளையின் செய்யது அலி, நெல்லை பேட்டையின் அல்கபீர் போன்ற ஸ்லீப்பிங் செல்கள் தலைமறைவாகிவிட வி.கே.புரத்தின் ஸ்லீப்பிங் செல்லான ஆட்டோ டிரைவர் அக்பர் அலி மட்டுமே தனிப்படை வசம் சிக்கியுள்ளார்.

களியக்காவிளை செக்போஸ்ட்டில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளியாகும் தகவல்கள் அதிர வைக்கின்றன. நாடு முழுவதும் தங்களின் குடியுரிமைக்காக முஸ்லிம் மக்களுடன் கரம் கோர்த்து இந்துக்கள் போராடிவரும் நிலையில், இத்தகைய தீவிரவாத செயல்கள் பா.ஜ.க. அரசின் மதவாத பிரிவினைத் திட்டத்திற்கே சாதகமாக அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

-பரமசிவன், மணிகண்டன்
 

 

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.