Skip to main content

இங்க பாரு, உன் ஃப்ரண்ட் என்னை எப்படி டிஸ்டர்ப் பண்ணுறான்னு... நண்பனின் காதலிக்கு தொந்தரவு கொடுத்த காசி... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

suji


"ஒவ்வொரு ஆணுக்குள்ளும் காசி இருப்பான். நான் செய்தது எப்படியோ வெளியில் வந்துவிட்டது. என்னிடம் பழகிய பெண்கள், என்னை ஏனோ மன்மதனாகப் பார்த்தார்கள். மற்றவர்கள் நினைப்பது போல பெண்களின் உடம்பு மீது எனக்கு விருப்பம் இல்லை. என் உடம்பு மீது மட்டுமே நான் ஆர்வமாக இருந்தேன். என்னிடம் ஆசைதீரப் பழகிய பெண்கள், என்னை மிரட்டுவதற்காகவே, எனக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துவிட்டார்கள்.’'
 


ஆறு நாட்கள் காவல் விசாரணையில் ‘கெத்தாக’ இப்படிப் புளுகியிருக்கிறான் காசி. வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாறிய நிலையில், இதே ரீதியில் அவனால் அளந்துவிட முடியுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

‘உலகத்தின் பார்வையில் எப்படியிருந்தாலும், தங்களுக்குப் பிள்ளை அல்லவா!’ என்னும் தவிப்பில் இருக்கிறார்கள், காசியின் பெற்றோர். அவனுடைய அப்பா தங்கப்பாண்டியன், காசி கஸ்டடியில் இருந்தபோது, அந்த அனைத்து மகளிர் காவல்நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். விசாரணையின்போது காசி கேட்ட வீட்டுச் சாப்பாட்டைக் கையில் வைத்திருந்த அவர், உறவினர்களிடம் “அவனுக்கு சுஜின்னு பேரு வச்சோம். அது கொஞ்சம்கூட கம்பீரம் இல்லாம மொட்டையா இருந்துச்சு. அப்புறம்தான், தாத்தா ‘காசி நாடார்’ பெயரைச் சேர்த்துக் கிட்டான். இப்ப, அவனோட பேரு கெட்டுப்போயி பிரபல மாயிருச்சு. டெய்லி சாப்பிடறதுக்கு முன்னால மூணு நாட்டுக்கோழி முட்டைய பச்சையா குடிப்பான். அரெஸ்ட் ஆனதுக்குப் பிறகு ரொம்பவும் சுருங்கிப் போயிட்டான். ஃபேசியல் பண்ணாம வெளிய கிளம்ப மாட்டான். இப்ப அவன் மூஞ்சி வாடிப்போயிருச்சு'' என்று புலம்பியிருக்கிறார். “இங்கே மட்டுமில்ல, பறந்துபோயி மலேசியாவுலயும் கூத்தடிச்சிருக்கான் என்று, ஒரு தகவலைக் கசிய விட்டார்கள், காவல்துறை வட்டாரத்தில்.
 

suji


நாகர்கோவிலில் நடந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘ஆர்க்கெஸ்ட்ரா’ ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சு எழுந்தபோது, காசியின் தோஸ்த்’ ஒருவர் அங்கிருந்தார். உடனே அவர், தனது ஜூனியரான காசியிடம் "ஒரு நல்ல ஆர்க்கெஸ்ட்ரா ரெடி பண்ணமுடியுமா?' என்று கேட்டு அவசரப்படுத்தியிருக்கிறார். காசி, தனது நண்பனின் ஆர்க்கெஸ்ட்ராவை ஏற்பாடு செய்தான். அந்த இசை மேடையில் நண்பனின் காதலி சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாடியபோது, அவரது அழகில் காசி சொக்கிப்போனான். சுஜாவின் ஃபேஸ்புக் மெசஞ்சரில் "நீ ரொம்ப நல்லா பாடுற...'’என்று ஐஸ் வைத்துவிட்டு, முறுக்கேறிய தனது உடலழகை வெளிப்படுத்தும் போட்டோக்களை அனுப்பி வைக்கிறான்.

அந்த நேரத்தில் அவள், ஆர்க்கெஸ்ட்ரா காதலனுக்கு விசுவாசம் காட்டும் விதத்தில், "இங்கே பாரு.. உன் ஃப்ரண்ட், என்னை எப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணுறான்னு.. ஒழுங்கா இருன்னு சொல்லி வை...''’என்று கண்ணைக் கசக்கியிருக்கிறாள். அவனும் காசியிடம் "அவளை நான் உயிருக்குயிரா காதலிக்கிறேன். வேணாம்டா ப்ளீஸ்...''’என்று கெஞ்ச, காசியும் பெரிய மனதோடு விட்டுவிட்டான்.

இது நடந்த சில நாட்களில், ஆர்க்கெஸ்ட்ரா நண்பனின் இன்ஸ்டாகிராமுக்கு லிங்க் ஒன்றை அனுப்பினான் காசி. அதனை அவன் ஓபன் செய்தபோது, காசியுடன் பழகிய இளம்பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களும், அவளது போன் நம்பரும் இருந்திருக்கிறது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் நிலை குலைந்து போய், தனக்கென்று ஒரு காதலி (சுஜா) இருப்பதை மறந்தவனாக, அந்தப் பெண்ணின் நம்பரில் மாறி மாறி தொடர்பு கொண்டிருக்கிறான், ஆர்க்கெஸ்ட்ரா நண்பன். இங்கேதான் விதி விளையாடியிருக்கிறது. காசி மீது புகார் அளித்திருந்த அந்தப் பெண்ணின் செல்போன் அழைப்பு விபரங்களை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, ஆர்க்கெஸ்ட்ரா நபரின் போன் நம்பர் சிக்கியிருக்கிறது. அவனைத் தூக்கி வந்து விசாரித்தபோது, காதலி சுஜா காசியின் கைக்கு மாறி, தன்னுடைய காதல் முறிந்த சோகத்தைப் பிழிந்திருக்கிறான்.
 

 

suji


இந்தியாவில் இருந்தவரையிலும் காதலுக்கு மரியாதை செலுத்தி வந்திருக்கிறாள், சுஜா. மலேசியா கிளப் ஒன்றில் பாடகி ஆனவுடன், போக்கு மாறியது. காசியின் பேச்சு இனித்தது. அதனால், வெறும் பேச்சோடு நின்றுவிடக்கூடாது என்று முடிவு செய்தனர். அந்த நோக்கத்துடன் காசி மலேசியா பறந்தான். அங்கு நடந்த சந்திப்பில் அவனோடு மூன்று பெண்கள் இருந்திருக்கின்றனர். தனது டிராஜடி கதையையும், காசி குறித்து சுஜா பேசிய ஆடியோவையும், விசாரணை அதிகாரி கேட்கும்படி செய்துவிட்டு அழுதிருக்கிறான், ஆர்க்கெஸ்ட்ரா நண்பன். "அப்படின்னா.. நீ காசி மாதிரியும் இல்ல.. காசியோட கூட்டாளியும் இல்ல...'’’ என்று சிரித்துவிட்டு, அவனை வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

காசி வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணை விபரங்களெல்லாம், சி.பி.சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், எல்லாம் மேலிடத்தின் தலையீடு’ என்று காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர், ‘காசி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டால், தேர்தலின்போது அந்தக் கட்சியுடனான அரசியல் கூட்டணியே நம்மைக் கவிழ்த்துவிடும்.’ என்ற தகவல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கவனத்துக்குப் போயிருக்கிறது. அதன்பிறகே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு காசி வழக்கு மாறியது.

சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.-யாக இருந்த ஜாபர் சேட்டையும் மாற்றியது. அந்த நாற்காலியில், பிரதீப் வி பிலிப்பை புதிய டி.ஜி.பி.யாக அமர வைத்தது. சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. மாற்றத்துக்கான காரணத்தை குமரி மாவட்டத்தில் அலசி ஆராய்கிறார்கள். எப்படித் தெரியுமா? ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர், பிரதீப் வி பிலிப். இம்மாவட்ட முக்கிய பிரமுகர்களுடன் இப்போதும் தொடர்பில் இருப்பவர். எஸ்.பி.யாக இருந்தபோது, பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்ட தால், நெருக்கமான வி.ஐ.பி. நண்பர்கள் வட்டம் இவருக்கு உண்டு. காசியின் கூட்டாளிகளும், பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரும், வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

இவர்கள், ‘காசி வழக்கில், இரு தரப்பினருக்கும், எந்த ஒரு சேதாரமும் வந்துவிடக்கூடாது, காசி யாரையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது...'' எனச் சென்னையில் முகாமிட்டு மூக்கைச் சிந்தியிருக்கிறார்கள். நடுக்கத்தில் உள்ள இந்த வி.ஐ.பி.க்களுக்கு, ஆபத்பாந்தவனாகத் தெரிகிறார், பிரதீப் வி பிலிப். ஆனால், காவல்துறை உயர்மட்டத்திலோ, பிரதீப் வி பிலிப் ஹானஸ்ட் ஆபீசர் என்றும் யாரும் அவர் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். பெண்களின் உடல் மீது தனக்கு ஆர்வம் இல்லை என்று அழுத்தமாக காசி அளித்துள்ள வாக்குமூலம், ’அவனா நீ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், நித்யானந்தாவுக்கு நடத்தியதுபோல், ஆண்மை பரிசோதனை செய்தால் என்ன?’ என்று, அடுத்தகட்ட விசாரணையின்போது தீவிரத்தைக் கூட்டும் மனநிலையை, சி.பி.சி.ஐ.டி. பிரிவினருக்கு ஏற்படுத்தியிருக்கிறதாம்.
 

http://onelink.to/nknapp


நாகர்கோவில் சிறையில், ஆடு திருடிய மூன்று பேரோடு தான் அடைக்கப்பட்டுள்ள செல்லில், கம்பி எண்ணுகிறான் காசி. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின்போது, அவன் வாயிலிருந்து என்னென்ன உண்மைகள் வெளிவரப் போகிறதோ? பொள்ளாச்சி பாலியல் வழக்கினைப் போல், எவையெவை மறைக்கப்படப் போகிறதோ?

-மணிகண்டன்



 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.