Skip to main content

மா.செ.வின் வீடியோ வைரல்! முகச்சுளிப்பில் அ.தி.மு.க.வினர்! 

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Kanyakumari admk District secretary's video viral

 

குமரி அ.தி.மு.க. மேற்கு மா.செ.வாக ஜான் தங்கம் இருக்கிறார். கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சமீபத்தில் இவர் தன்னுடைய வீட்டு படுக்கையறையில் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக, முகம் சுளிக்க வைத்துள்ளது. இவரோடு வீடியோவில் இருக்கும் நபர், கட்சியின் கிளை நிர்வாகி என்று கூறப்படுவதால், அப்பகுதி அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து கடையாலுமூடு பகுதி அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஆரம்பத்தில் ஜனதா, ஜனதா தளம், த.மா.கா. எனச் சுற்றியபின் கடைசியில் அ.தி.மு.க.வில் இணைந்தவர் ஜான் தங்கம். தளவாய் சுந்தரத்தின் தயவில் ஜெயலலிதா காலத்தில் மா.செ. ஆனார். அதன்பிறகு 2014-ல் கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். ஜெ. மறைவுக்கு பிறகு எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக இருந்துவரும் ஜான் தங்கம், 2021-ல் பத்மநாபபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனார். குமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் உட்பட பலர் அணி மாறிச் சென்ற போதும் இவர் எடப்பாடியோடுதான் இருந்தார். அந்த விசுவாசத்துக்காக தொடர்ந்து மா.செ.வாக எடப்பாடி வைத்திருக்கிறார்.

 

இந்நிலையில் வெளியான ஜான் தங்கத்தின் ஆபாச வீடியோ குறித்து பேசுறதுக்கே எங்களுக்கு 'நா' கூசுது. ஒரு கட்சிகாரன்கிட்டயா இப்படி தப்பா நடக்கணும்? கட்சியில் கிளை நிர்வாகியாக இருக்கும் அவர், ஜான் தங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர். அரசியலில் பெரிய இடத்திலிருப்பவர்கள் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. ஆனால் ஜான் தங்கத்தின் இந்த சர்ச்சையைப் பார்க்கையில், கட்சியில் ஆண்களுக்கே பாதுகாப்பில்லை என்பதையே காட்டுகிறது. இப்படி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய இவர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

இந்நிலையில், அந்த வீடியோ 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்றும், ஜான் தங்கத்தின் பதவியைக் குறிவைத்த எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ஒருவரும், ஒ.செ. ஒருவரும் காழ்ப்புணர்ச்சியில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். சென்னையில் அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்தபோது எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகியை தளவாய் சுந்தரமும், ஜான் தங்கமும் எடப்பாடியை சந்திக்கவிடாமல் மோசமாகப் பேசியதால் ஆத்திரத்தில் அவ்வீடியோவை சமூக வலைத்தளத்தில் விட்டதோடு, தலைமைக்கும் அனுப்பிட்டாங்களாம்.

 

ஜான் தங்கம் தரப்பினரோ, “அவருக்கு கால் இடுக்கு பகுதியில் புண் காயம் இருப்பதால் அதில் வழக்கமாக மருந்து போடும் போது, மருந்து போடும் நபரை யாரோ தூண்டிவிட்டு வீடியோ எடுத்து தவறுதலாக சித்தரித்து விட்டனர். அதை கட்சித் தலைமைக்கும் கூறிவிட்டோம்” என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.