Skip to main content

கருப்புத் திருவிழாவாய் காலா பட விழா! வேறு காரணம் இருக்கிறதா?

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது சென்னை YMCA மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த விழா அரங்கும் மேடையும் முழுவதும் கருப்பு நிறம் மிகுந்து காணப்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு மேடையில் சிவப்பு விளக்குகள் மின்னுகின்றன. ரஜினிகாந்த், பா.ரஞ்சித் உள்ளிட்ட பெரும்பாலான படக்குழுவினர் கருப்பு உடையில் வருகை தந்துள்ளனர். தயாரிப்பாளர் தனுஷ் வெள்ளை சட்டை அணிந்துள்ளார். 


 

kaalaa

 

kaalaa

 

kaalaa

 

kaalaa

 

 

'செம வெயிட்டு' பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. அதில் கருப்பு நிறம் குறித்து பெருமையான வரிகள் இருந்தன. முன்பு வெளிவந்த காலா டீசரிலும் 'கருப்பு உழைப்பின் வண்ணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 'கருப்பர் நகரின் தலைவருடா' போன்ற வரிகளும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. அதன் வழியில் இப்பொழுது பாடல் வெளியீட்டு விழாவில் கருப்பு நிறம் பிரதானமான இருக்கிறது. 

 

இது, 'காலா' படத்தின் கதையினால் 'தீம்'மாக வடிவமைக்கப்பட்டதா அல்லது இதற்கு வேறு காரணமும் இருக்கிறதா என்று பேசப்படுகிறது. ரஜினி, தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்தே அவர் பாஜகவின் கைப்பாவை என்றும், காவி நிறத்தோடு தொடர்பு படுத்தியும் வந்தனர். அவர் ஆன்மீக அரசியல் பற்றி பேசிய போது அது அதிகரித்தது. இந்த பிம்பத்தைப் போக்க ரஜினி இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விழாவுக்கு ரஜினி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

இவன்லாம் ஹீரோவான்னு சிரிச்சேன்

Next Story

ரஜினி ரசிகர்கள் மோதல் வேன்கள் கண்ணாடி உடைப்பு!!

Published on 07/06/2018 | Edited on 08/06/2018

ரஜினியின் காலா படம் ரிலீஸ் என்றது முதல் தினம் தினம் பரபரப்புதான்.

நேற்று தமிழகத்தில் காலா படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுக்கோட்டை ஆர்.கே.பி திரையரங்கில் காலா படம் திரையிடப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து இரு வேன்களில் ரசிகர்கள் காலா பார்க்க வந்துள்ளனர். அப்போது திரையரங்கிற்குள் மற்றொரு குழு ரசிகர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் ரசிகர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர்.


 

kaalaa

 

இந்த நிலையில் படம் முடிந்து கந்தர்வகோட்டை ரசிகர்கள் தாங்கள் வந்த வேன்களில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது புதுக்கோட்டை நகரைக் கடந்து மச்சுவாடி பகுதியில் தயாராக நின்ற ஒரு கும்பல் ரஜினி ரசிகர்கள் வந்த வேன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு வேன் கண்ணாடிகளும் உடைந்து சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.