Skip to main content

ஜெயலலிதா... செயல்படுத்திய திட்டங்களும் மக்கள் விரோத சட்டங்களும்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

செயல்படுத்திய திட்டங்கள்! 



1991-1996 உசிலம்பட்டி, தர்மபுரி பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடூரம் சர்வசாதாரணமாக நடந்தது. இதைத் தடுப்பதற்காகவும் பெண் குழந்தைகளைக் காப்பதற்காகவும் தொட்டில் குழந்தைத் திட்டம்.
காவல்துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அனைத்து மகளிர் காவல்நிலையங்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் உலகத்தரத்தில் நவீனமாக்கப்பட்டது. 
தெற்காசிய விளையாட்டுப் போட்டியை சென்னையிலும்  உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சையிலும் நடத்தினார் ஜெயலலிதா. 

 

j

 


2001-2006: பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கோவில்களில் அன்னதானம், கட்டாய மழை நீர் சேகரிப்புத்திட்டம், புதிய வீராணம் திட்டம். 
2011-2016: மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், சமுதாய வளைகாப்புத்திட்டம், பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் பெட்டகத்திட்டம். 

 


மக்கள் விரோத சட்டங்கள்! 
 


தடா சட்டத்தின் கீழ் தி.மு.க.வின் முன்னணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன், வைகோவின் தம்பி வை.ரவிச்சந்திரன் ஆகியோர் 1992, ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர். 10 மாத சிறைவாசத்துக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 


2001-2006 ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுத்தார். மக்கள் நலப்பணி யாளர்கள், சாலைப் பணியாளர்களை வேலையிலி ருந்து டிஸ்மிஸ் செய்தார். கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை, மதமாற்றத் தடைச்சட்டம்.


பொடா சட்டத்தின் கீழ் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு கொடுஞ் சிறைவாசம் அனுபவித்தார். இந்திய அளவில் பொடா சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகை யாளர் நக்கீரன் ஆசிரியர்தான். நக்கீரன் நிருபர் கள் சிவசுப்பிரமணியன், சுப்பு, மகரன் ஆகியோ ரும் கைது செய்யப்பட்டனர். 
பொடா சட்டப்பிரிவின் கீழ் வைகோ, சுப.வீரபாண்டியன், பழ.நெடுமாறன், ஷாகுல் ஹமீது, தாயப்பன், கணேசமூர்த்தி உள் ளிட்டோரும் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறைப்பட்டனர்.

 

 

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.