Skip to main content

ஜக்கி காட்டும் பில்ட் அப்...பத்தாயிரம் கோடி வசூல் ப்ளான்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

தலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ம் தேதி புறப்பட்ட ஜக்கி வாசுதேவ், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட டுகாட்டி பைக்கில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வந்து இறங்கினார். ஜக்கியின் இந்த யாத் திரைக்கு "காவேரியின் கூக்குரல்' என பெயரிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்காக நடிகர் கமல்ஹாசன், தி.மு.க.வின் கே.என்.நேரு, ஜி.கே.வாசன், சி.பி.எம்.மின் கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி என அனைவருடன் போட்டோ எடுத்ததோடு பொதுமக்களிடம் "ஒரு மரம் நட்டு பராமரிக்க 42 ரூபாய் தாருங்கள்' என கோரிக்கையும் வைத்திருக்கிறார் ஜக்கி. இப்படி 12 வருடங்களில் பத்தாயிரத்து நூறு கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளார். "காவேரியின் கூக்குரல் மூலம் பத்தாயிரம் கோடி; "இது என்ன விஷயம்' என கேட்டோம்.

 

jakki



இந்தத் திட்டத்திற்கான நிதி வசூலை மேற்பார்வையிட ஒரு போர்டை அமைத்துள்ளார் ஜக்கி. அந்த போர்டில் Worldwide Fund For India (WWF) இந்திய இயற்கை மேம்பாட் டிற்கான உலக வங்கி உதவி பெறும் நிறுவனத்தின் இந்திய தலைவர் ரவிசிங், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜித் பசாயத், மத்திய அரசின் நீர்வளத்துறையின் முன்னாள் செயலாளர் சசிசேகர், டாடா நிறுவனத்தின் முன்னாள் துணை சேர்மன் முத்துராமன், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரண்குமார் ஆகியோர் இருக்கிறார்கள். இது முன்பு சங்கர மடம் இருந்த நிலையை நினைவுபடுத்துகிறது. இப்படித்தான் சங்கர மடத்தில் மத்திய- மாநில அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்கள் நிறைந்திருப்பார்கள். அதன் மூலமாக தென்னிந்திய அரசியலில் பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை பெற முடியும்.
 

admk



இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குள் இயங்கும் எந்த அமைப்பும் சங்கர மடத்துக்கு வெளியே நின்றதில்லை. அரசியல்வாதிகள் அதிகார வர்க்கம், பெருமுதலாளிகள், நீதித்துறை எல்லாம் இணைந்து காணப்படும் சங்கர மடத் தைப் போன்றே ஜக்கியின் ஈஷா யோகா மைய மும் உருவெடுத்திருக்கிறது. அதன் அதிகார சக்தியை காட்டவே ஜக்கி காவேரியின் கூக்குரல் என்கிற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்'' என்கிறார் கோவையின் பிரபலமான வழக்கறிஞர் முருகவேல். ஆன்மிக அரசியலும் வியாபாரமும் இணைந்ததுதான் காவேரியின் கூக்குரல்.

 

bjp



ஜக்கியின் விசுவாசிகளை கேட்டால், "மரம் நடுவது ஒன்றும் ஜக்கியின் புதிய விஷயம் அல்ல. மரம் நடுவதற்கென்றே (Project Green Hands ) "பச்சைக் கரங்கள்' என்கிற என்.ஜி.ஓ. அமைப்பை 2004-ம் ஆண்டு தொடங்கி கடந்த பதினைந்து வருடங்களாக நடத்தி வருகிறார். இதற்கு இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளார். உலகமயமாதல் கோட்பாடு வந்த பிறகு அரசு மரம் நடுதல் போன்ற சேவைத் தொழில்களை செய்யக்கூடாது. அதை என்.ஜி.ஓ. அமைப்புகள்தான் செய்ய வேண்டும் என்கிற சித்தாந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி பச்சைக் கரங்கள் அமைப்புக்கு தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரான, நடிகர் நெப்போலியனின் நெருங்கிய சொந்தக்காரரான, ஜக்கியின் நிழல் என வர்ணிக்கப்பட்ட ஏகா என்கிற தாயுமானவனும் மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த பாலகிருஷ்ணனும் இருந்தார்கள். இந்த இருவரும் ஜக்கி ஆசிரமத்தை விட்டே ஓடிப் போய்விட்டார்கள். காரணம், பச்சைக்கரங்கள் அமைப்பில் நடந்த முறைகேடுகள்தான். அந்த அமைப்பின் சார்பாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டதாக ஜக்கி அறிவித்தார். அதில் ஒன்று கூட தற்பொழுது உயிருடன் இல்லை'' என்கிறார்கள்.
 

jakki



ஜக்கி காவேரியின் கூக்குரல் என்ற அமைப்பை ஏன் ஆரம்பித்தார் என அவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தெளிவாகவே விளக்கினார். "ஜக்கியிடம் ஏராளமான தொண்டர்கள் இருக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை ஒரு இயக்கம் தொடங்குவார். அதில் ஒன்றுதான் காவேரியின் கூக்குரல். உயர்ந்த லட்சியங்களோடு ஆரம்பிக்கும் அமைப்பிற்கு பிரபலங்கள் ஆதரவு தருவார்கள். இலவச விளம்பரமும் கிடைக்கும். கமல்ஹாசனுக்கு சாமியார் என்றால் பிடிக்காது. இளையராஜாவின் உதவியாளர் சௌந்தர் என்பவர் ஜக்கியிடம் இணைந்து மொட்டையடித்து சாமியாரானார். அதனால் ஜக்கி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என பேட்டியளித்தார். பினராய் விஜயன் கம்யூனிஸ்ட். இவர்கள் மூவரையும் காவேரியின் கூக்குரல் என்கிற இயக்கத்தின் மூலம் ஜக்கி நெருங்கிவிட்டார்.


"நரேந்திரமோடியிடம் நேரில் பேசுவேன். அமித்ஷா வீட்டில் தங்குவேன்' என ஜக்கி காட்டும் பில்ட் அப்-பால் தமிழக பா.ஜ.க.வையும் அ.தி.மு.க. வையும் வீழ்த்தி விட்டார் ஜக்கி. அதுபோல கோவை மாவட்ட தி.மு.க.வினரின் கதறலையும் மீறி முந்தைய ஆட்சியில், ஜக்கி வனத்தை ஆக்கிரமித்துள்ளார். அதை நான் ஜெயித்தால் மீட்பேன் என்ற சி.பி.எம்.மின் கோவை எம்.பி. நடராஜனின் வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டு தி.மு.க.வின் கே.என்.நேருவுடனும் சி.பி.எம்.மின் பினராயி விஜயனுடனும் சேர்ந்து "அனைத்து கட்சியின் ஆதரவும் எனக்குள்ளது' என விளம்பரம் தேடி விட்டார் ஜக்கி. இதுதான் ஜக்கியின் ஸ்டைல்'' என்கிறார்கள்.

2017-ம் ஆண்டு மத்திய CAG அறிக்கைப் படி, யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து பள்ளியையும் ஆசிரமத்தையும் கட்டியுள்ள ஜக்கி அடுத்தகட்டமாக காவிரி கூக்குரல் மூலம் கிடைக் கும் பணத்தை வைத்து ஒரு ஆயுர்வேத கல்லூரி கட்டுகிறார். அதற்கு தமிழக அரசு வனத்துறை நிலத்தை தரத் தயாராக உள்ளது. அதை பழங்குடி மக்கள் காட்டில் வீடு கட்டினாலே எதிர்க்கும் WWF அமைப்பு ஆதரிக்கப் போகிறது. காவேரியின் கூக்குரல் என்கிற ஒரே கல்லில் கொத்துக் கொத்தாக மாங்காய் அடிக்கிறார் ஜக்கி'' என்கிறார்கள் கோவை நகர மக்கள்.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.