Skip to main content

“என்ன கோடி கோடியா சேர்த்துட்டீங்களா...என்று கேட்டார் ஜெயலலிதா...” - சுவாரஸ்யம் பகிரும் ஜாகுவார் தங்கம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Jaguar Thangam Spoke about Jayalalitha

 

சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கிப் பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாகுவார் தங்கம், முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது நட்பை நமக்களித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது; 

 

1981 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார். அப்போது எம்.ஜி.ஆர் என்னை அழைத்து ஜெயலலிதாவின் கூடவே இருந்து பார்த்துக்க சொன்னார். அவரின் ஆரம்ப கால அரசியலில் ஒரு வருட காலம் அவருடன் இருந்தேன். ஜெயலலிதா கட்சியில் சேரும்போது, நான் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் முன் வரிசையிலேயே அமரும் அளவிற்கு அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் போது, போலீஸ் எல்லாம் நிறைய அவருடன் இருக்கமாட்டார்கள். அதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் காருக்கு முன்பாக சென்று சிலம்பம் சுற்ற  காருக்கு வழி ஏற்படுத்தி தருவேன். நீங்க சோர்வடையவே மாட்டீங்களா என்று கேட்டார். இப்படியே இருவரும் சகோதர சகோதரியாக பழகினோம்.

 

ஒருமுறை அவரது டிவி நிகழ்ச்சி தொடர்பாக வேலை செய்யும் போது, நிர்வாகத்தினர் என் சம்பளம் தொடர்பாக பேசினார்கள். நான் சம்பளம் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். மூன்று நான்கு நாட்கள் கழித்து ஜெயலலிதா என்னை அழைத்தார். அவரைச் சந்தித்தபோது, “என்ன கோடி கோடியா சேர்த்துட்டீங்களா” என்று கேட்டார். நான் சம்பளத்திற்கு எல்லாம் வேலை செய்யவில்லை. அன்புக்காகத்தான் வேலை செய்கிறேன் என்றேன். ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னார். வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஒரு ரூபாய் மட்டும் தாருங்கள் என்றேன். உங்கள் அன்பு மட்டும் போதும் என்றேன். உடனே அவர் தனது உதவியாளரைப் பார்த்து கண் அசைத்தார். அவர் ஒரு பெட்டியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதிலிருந்து ஒரு யானை பொம்மையை எடுத்து ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். அதனை எப்போதும் பத்திரமாக வைத்துக்கச் சொன்னார். 

 

Jaguar Thangam Spoke about Jayalalitha

 

கொரோனா காலத்தில் நான் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, எம்.ஜி.ஆர், ஜப்பான் நரம்பியல் டாக்டருக்கு இதேபோல் தங்க யானை பொம்மையைப் பரிசாகத் தரும் படம் இருந்தது. அப்போது ஜெயலலிதா கொடுத்த அந்த யானை பற்றிய ஞாபகம் வந்து அது தங்கமாக இருக்குமோ என உடனே அருகிலிருந்த ஒரு அடகு கடையில் கொடுத்து பரிசோதித்தபோது அது உண்மையான தங்கம் என்றும் அதன் கண்கள் வைரம் என்பதும் தெரிந்தது. அதனுடைய தற்போதைய மதிப்பு ஒன்னரை கோடி. அப்போதைய மதிப்பு நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை இருக்கும். ஜெயலலிதாவிடம் கொடுக்கும் மனம் இருந்தது.  

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.