Skip to main content

"நம்ம உடம்பு பத்தி கேட்டா சயின்ஸ் உங்களுக்கு புரியாது அதான் ஆபரேஷன்னு சொல்லிட்டோமேன்னு அசால்டா.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #18

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

கல்யாணமாகி முழுசா ஒருவருஷம் கூட ஆகலை ஆனா அதுக்குள்ளே டைவர்ஸ்க்கு அப்ளை செய்ய வந்திருக்காங்க என்று என் தோழி கையிலிருந்த பானத்தைக் காட்டிலும் மனம் சுட்டது. என்ன பிரச்சனை என்று யோசித்தபடியே நான் அவர்களைப் பார்த்தேன். நல்ல ஜோடிப் பொருத்தம். ஆனால் மனப்பொருத்தம் இல்லாமல் போய்விட்டதே, இளமையின் தொடக்கத்தில் வாழ்க்கையை அனுபவிக்காமல் இப்படி கோர்ட் படியேறி நிற்கிறார்களே என்று மனது வருத்தமாக இருந்தது. அவன் முகத்தில் இருந்த இறுக்கம் குற்றவுணர்ச்சியா அல்லது இந்த கவுன்சிலிங் எல்லாம் என் மனதை மாற்றாது என்ற எண்ணமா?! என அனுமானிக்க முடியவில்லை. அந்த யுவதியோ கணவனின் கண நேரப் பிரிவைக் கூட தாங்க முடியாதவளைப் போல் தவித்தாள். அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் நொடிக்கொருமுறை எதையோ கணவனுக்கு உணர்த்திட கண்களில் தழும்பி கன்னங்களில் வழிந்தது

 

sdfx



யார் இவங்க....?!

போன வருஷம்தான் கல்யாணமாச்சி இப்போ டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்காங்க, பையன் சைடு எனக்கு சொந்தம். ஒருவருடம் ஆகாததால் குடும்ப நல கோர்ட்டில் கவுன்சிலிங் அனுப்பியிருக்காங்க நேத்துதான் எனக்கு விஷயமே தெரியும். இத்தனை சில்லியான காரணங்கள் கூட டைவர்ஸ்க்கு இருக்குமான்னு! அப்படியென்ன சில்லியான காரணம் ஏதாவது காதல் பிரச்சனையா? அது கூட பரவாயில்லையே? இந்த டைவர்ஸ்க்கு காரணம் எதையும் சரியாக கணிக்க முடியாத அலட்சியம் , பயம் ஒரு சின்ன விஷயம் அது இத்தனை பெரிசா பூதாகரமா மாறிடுன்னு நான் மட்டுமில்லை யாருமே எதிர்பார்க்கலை. என்னாச்சு தெளிவாக சொல்லுங்க அப்படியென்ன அலட்சியம்?! யாருடையது. எல்லாம் நம்ம மருத்துவர்களின் அலட்சியம் தான். முன்னெல்லாம் ஒரு நோயாளியை டீரிட் பண்ணனும்மின்னா வசதியானவங்கன்னா வீட்டுக்கே வருவாங்க, இல்லேன்னா மருத்துவமனையின் வராண்டாவில் மணிக்கணிக்கில் காத்திருந்து, கலர் கலரா மாத்திரைகளை பைக்குள் அடைத்து வைத்திருப்பார்கள்.

இந்த கலர் காச்சலுக்கு, இது சளிக்கு, இது வயிற்று வலிக்குன்னு மாத்திரைப் பட்டைகைள் கலரை மட்டுமே வைத்து பார்த்திருந்த காலமுண்டு. இப்போ ஒரு சாதாரண வியாதிக்கு கூட மாத்திரைப் பட்டையின் பின்புறம் உள்ள மூலக்கூறுகளை கூகுளில் ஆராய்ந்து பார்த்து அதை சாப்பிடுவதால் வேற ஏதாவது வியாதி வருமான்னு படிக்கிற வரைக்கும் மக்கள் உஷாராயிட்டாங்க. ஆனா இப்போ நோய்கள் எவ்வளோ பெருகிடுச்சோ அத்தனை பெருகிடுச்சி மருத்துவமனைகளும் மருத்துவர்களும். தெருவுக்கு நாலு டாக்டர் அவங்க டிஸ்பன்ஸரி முன்னாடி நோயாளிகள் குவியனுன்னு டிஸ்கவுண்ட் மருந்துகள் மட்டுமில்லை டிஸ்கவுண்டில் மருத்துவர்களும் கூட கிடைக்கிறாங்க. ஆடித்தள்ளுபடி மாதிரி இந்த மாதம் முழுக்க உடல் பரிசோதனை இலவசம் மஞ்சகாமாலை ஊசி நாலு பேரு போட்டா ஒருத்தருக்கு இலவசன்னு எத்தனையோ விளம்பரங்கள். என்ன வியாதின்னு வாட்ஸ் அப்பிலே கேட்டு டீரிட்மெண்ட் பண்ற அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருச்சி. ஆனா அதனால் நன்மைகள் வளருதான்னுதான் தெரியலை. சிலர் தங்களோட அனுமானங்களை வைத்து மேலும் நோயாளிகளை பயமுறுத்தி தேவையில்லாத சிக்கலில் மாட்டிவிட்டுடறாங்க. கடவுளுக்கு அடுத்த படியா மருத்துவர்களைத்தான் கும்பிடறோம். இவனோட விஷயமும் அப்படித்தான்.

 

jl



இந்த பையனுக்கு சேல்ஸ் மேனேஜர் வேலை அடிக்கடி வெளியூர் போகணும். கல்யாணத்திற்கு முன்னாடியே அவனுக்கு கிட்னியில் ஸ்டோன்ஸ் இருந்திருக்கு, கல்யாணம் ஆனபிறகு திடீர்னு ஒரு நாள் அவனோட வயிற்றுப் பகுதியில் வலி அதிகமாகி யூரின் அடிக்கடி போக ஆரம்பித்து இருக்கு அவன் மருத்துவரை சந்தித்திருக்கிறான். அந்த யூரியாலஜி டாக்டர் அல்ட்ரா சவுண்ட், கல்ச்சர் ரிப்போர்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதிலே கல் இருக்கிறது தெரியலை, உடனே உங்களுக்கு சிறுநீர் தொற்று உருவாகியிருக்குன்னு சொல்லியிருக்கார். இதை இப்படியே விட்டா அடுத்து யூரின் போகும் போது இரத்தம் வரவும் வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருக்கிறார். திடீர்னு இப்படி வர காரணம் என்னவாயிருக்கும் என்று இந்த பையனும் கேட்டு இருக்கான் அதுக்கு அவர் சொன்ன காரணம் கணவனும் மனைவியும் பிரியவே காரணமாயிடுச்சி! நீங்கள் அப்பப்போ வெளியூர் போறீங்க அங்கே தவறான அணுகுமுறையினால கூட இந்த நோய்தொற்று வந்திருக்கலாம். அல்லது உங்கள் மனைவியுடன் நீங்கள் சேரும் போது அவர்களுக்கு உறுப்பு ரீதியாக ஏதாவது நோய்தொற்று இருக்கலாம் அடிக்கடி உங்க மனைவிக்கு வெள்ளைப்படுதல், உறுப்பில் இருந்து துர்நாற்றம் அந்த மாதிரி ஏதாவது இருந்திருக்கும் அவங்களோட நீங்க சேரும் போது இந்த மாதிரி கோளாறுகள் வரும்ன்னு சொல்லியிருக்கிறார்.

இந்த மக்கும் அதை நம்பி அவகூட சேராமயே இருந்திருக்கு. கொஞ்சநாளுக்கு பிறகு வலியும் சீறுநீர் கல்லும் வெளியானதும் வலி குறைஞ்சி போச்சு. ஆனா இவனோட சந்தேகம் மட்டும் நிக்கலை, அவளா நெருங்கி வரும்போதெல்லாம் இவளாலதான் அந்த கடுமையான வலி நமக்கு ஏற்பட்டதுன்னு ஒரு எண்ணம் உருவாகி சகஜமான திருமண வாழ்க்கையைப் பாதிச்சது. யார் மேல குற்றன்னு தெரியாமலே சின்ன சின்ன வாக்குவாதங்கள் பெரிசா முற்றிப் போய் இரண்டு வீட்டாருக்கும் விஷயம் தெரிந்து பிரச்சனை பெரிசாயிடுச்சி, தன்னோட இயல்பான வாழ்க்கை முறையில் கணவன் ஈடுபடலைன்னு சொன்னதும் அவனை தரக்குறைவா பெண் வீட்டார் பேச, உங்க பொண்ணுக்கு ஏதோ வியாதி இருக்கு அதனாலதான் என் பையன் உடல் நலம் கெட்டுப் போயிருந்தது. இரண்டு வீட்டுக்காரங்களும் ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தைப் பூசிகிட்டாங்க. கடைசியிலே காலங்காலமா வாழவேண்டிய இரண்டுபேர் இப்போ கோர்ட் வாசலில்!

 

lk



அடக்கடவுளே இப்போ நீ என்ன சொல்லியனுப்பினே?!

அந்தப் பொண்ணு கிளியரா இருக்கா நடந்த எல்லாம் அவளுக்கு எடுத்து சொல்லியாச்சு அவனோட மனசஞ்சலத்தை புரிஞ்சிகிட்டு சில டெஸ்ட்க்கு ஒப்புகிட்டா அந்த ரிப்போர்ட்டும், அவனையும் மீண்டும் பரிசோதித்து அந்த ரிப்போர்ட்டும் எடுத்துகிட்டு ஒரு சீனியர் யூரியாலஜகிக்கிட்டே போனோம். அவனின் வலிக்கு காரணம் என்னவாயிருக்குன்னு கண்டுபிடிச்சி சொல்லிட்டார். வலியைக் குறைக்க போட்ட நரம்பு ஊசியினால் ஏற்படும் அபாயத்தையும் அவனுக்கு விளக்கினார். அவனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டரைப் பற்றி விசாரித்தபோது அவர் இப்போதுதான் படிப்பை முடித்து விட்டு பிராக்டிஸ் பண்ணுவது தெரிந்தது.எல்லா வியாதிக்கும் மருந்துமாத்திரைகளைத் தேடிப் போகாதீங்க இந்த சிறுநீர் கல்லடைப்புக்கு வாழைத்தண்டு சாறு சிறந்த மருந்து ஐந்து ரூபாயில் சரியாக வேண்டிய விஷயத்திற்காக உங்க வாழ்க்கையையே இழக்கத் தயாராயிட்டீங்க உங்க மனைவிக்கு எடுத்த டெஸ்ட்டில் அவங்களுக்கு எந்த நோய்தொற்றும் இல்லை, வெள்ளைப்படுதல் என்பது எல்லாருக்கும் அளவுக்கு அதிகமான உடல் சூடு, அல்லது ஹெவியான மாத்திரைகள், மற்றும் ரத்தபோக்கு தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்படுவது சகஜம் என்று புரியவைத்தார்.

இப்போ அவனுக்கு குற்ற உணர்ச்சி அதிகமாயிட்டது. மருத்துவர் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் நடந்திட்ட இந்த தப்பினால் தன் மனைவியை சந்தேகப்பட்டதும் அவளைத் தள்ளிவைக்க நினைத்ததையும் நினைச்சி குற்றவுணர்ச்சி. அந்த பொண்ணு பிரச்சனையைப் புரிஞ்சிகிட்டதால இரண்டு பக்கமும் பேசி டைவர்ஸ்ஸை கேன்சல் பண்ணற முயற்சியில் இருக்கா. நல்லவேளை இந்த மருத்துவர் மட்டும் சரியான முறையில் கையாளகாம இருந்திருந்தால் ஒரு மணமுறிவு ஏற்பட்டு இருந்திருக்கும். உண்மைதான். மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாகத்தான் பார்க்கிறோம் ஆனா சில நேரங்களில் அவங்க ரொம்பவும் அதிகப்படியான தவறுகள் செய்திடறாங்க. வலின்னு போனாலே ஏன் அவஸ்தைப் படணும் உடனே ஆபரேஷன் செய்திடலான்னு சொல்லி மனதை மாற்றிடறாங்க. என் மனைவிக்கு வலிக்காம புள்ளை பெத்துக்கணும் அதுக்கு ஏதாவது ஊசியிருந்தா போடுங்க என்ன செலவானாலும் பரவாயில்லைன்னு கணவன்கள் சொல்றதும், குாந்தை வயிற்றில் உருவானது கன்பார்ம் ஆனதும் நல்ல நேரத்திலே நல்ல நாள்ல குழந்தையை பிறக்க வைக்கிறோன்னு குறைபிரசவத்தில் ஆபரேஷனுக்கு பேஷண்டை மனம் மாற்றச் செய்யறதும்தான் இங்கே அநேகம் நடக்குது. நம்மோட பயத்தை பணமாக்கிடறாங்க.

 

hjk



அவள் சொன்னதுக்கு ஆம் என்று தலையசைத்துவிட்டு நகர்ந்தேன். ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து பயத்தோடு அமர்ந்திருக்கும் நோயாளியின் முன்னால் புரியாத பாஷையில் பேசிவிட்டு ஒண்ணுமில்லை, ஒரு அபார்ஷன் பண்ணிடலாம் என்று கூலாக சொன்ன மருத்துவர் நினைவுக்கு வந்தது. பணம் தருகிறோம் ரிப்போர்ட் பார்த்து தெளிவா சொல்லக் கூட கஷ்டப்படறாங்க. நம்ம உடம்பு பத்தி கேட்டா சயின்ஸ் உங்களுக்கு புரியாது அதான் ஆபரேஷன்னு சொல்லிட்டோமேன்னு அசால்டா சொல்லிட்டு கடக்கும் மருத்துவர்கள் கண்முன் வந்து போனார்கள்.


 

 

Next Story

மூளையில் ரத்தக்கசிவு; மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ் - கவலையில் ஈஷா யோகா மையம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Jaggi Vasudev undergoes surgery at Apollo Hospital due to bleeding in corner

கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. காடுகளை அழித்து ஈஷா மையம் கட்டப்பட்டதாகவும், இளம் பெண்களை மூளைச் சலவை செய்து ஊதியமே இல்லாமல் பணியில் சேர்த்திருப்பதாகவும், ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக வந்த குடும்பப் பெண் சுபஸ்ரீ என்பவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் சர்ச்சைகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம். இந்த அளவுக்கு அதிகார வர்க்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்து வருகிறார் ஜக்கி.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஆனந்த் நரசிம்மன் ட்விட்டரில் ஜக்கியின்  உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். ஈஷா ஜக்கி வாசுதேவ், கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைவலி காரணமாக ஜக்கியின் டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் ஜக்கியின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஈஷா மையத்தின் சார்பில் கூறுகையில், சாமியார் வாசுதேவ் கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தீவிரமாக இருந்தபோதிலும், அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். மேலும், கடந்த மார்ச் 8 அன்று இரவு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு வந்தபோது, தலைவலி மிகவும் கடுமையாகியுள்ளது. இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணரான டாக்டர் வினித் சூரியின் ஆலோசனையின் பேரில், ஜக்கி வாசுதேவுக்கு அதே நாளில் மாலை 4:30 மணிக்கு அவசர MRI பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம், சாமியார் மூளையில் பெரிய ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 3-4 வாரங்களில் நீடித்த இரத்தக்கசிவு இருந்ததும் பரிசோதனையில்  தெரியவந்தது.

இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மார்ச் 17 அன்று, ஜக்கி வாசுதேவின் நரம்பியல் நிலையும், இடது காலின் பலவீனமும் சேர்ந்து உடலை மோசமாக பாதித்தது. மீண்டும் மீண்டும் வாந்தியுடன் தலைவலி ஏற்பட, உடல்நிலை மோசமடைந்தது. இறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை போக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜக்கி வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இதையடுத்து, சாமியார் ஜக்கியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மற்றும் அவரது மூளை மற்றும் உடல் இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளன என ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜக்கி சிவராத்திரி விழா அன்று நடனமாடியதால் வயது மூப்பின் காரணமாக வந்த விளைவுதான் இது என்கின்றனர் அவரது சீடர்கள் சிலர்.

இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், மருத்துவர்கள் என்னுடைய தலைப் பகுதியை ஆபரேஷன் செய்தார்கள். ஆனாலும், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் தையல் போட்டுவிட்டனர் என்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. இதனால், நடிகர் எஸ்.வி. சேகர் உட்பட பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.