Skip to main content

தேவர் குருபூஜையில் நடந்த சுவாரசியம்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

The interesting thing that happened in Devar Guru Puja!

 

முன்னாள் அமைச்சர் விரட்டியடிப்பு, இ.பி.எஸ். ஃப்ளக்ஸுக்கு சாணியடிப்பு உள்ளிட்ட ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர்த்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது பிறந்தநாள் விழாவும் 60-வது நினைவு குருபூஜை விழாவும் அக்டோபர் 30-ஆம் தேதி கொண்டாட தயாரான வேளையில், முன்னதாகவே பசும்பொன் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை துவக்கியது காந்தி மீனாள் நடராசன் தலைமையிலான நிர்வாகம். இதற்கு முன்னதாக 2014 பிப்ரவரியில் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்கக் கவசத்தை யார் பெற்று பசும்பொன்னில் சாற்றுவது? என்கிற குழப்பமிருக்க, இ.பி.எஸ். தரப்பும் ஓ.பி.எஸ். தரப்பும் ‘நாங்கள்தான் உரிமைதாரர்கள். எங்களிடம்தான் வழங்கவேண்டும்’ எனப் போட்டி போட்டு நீதிமன்றத்திற்கு சென்றனர்.

 

லாக்கரில் இருக்கும் தங்கக் கவசத்திற்காக அ.தி.மு.க. பொருளாளருடன் இணைந்து கையெழுத்திடும் கோவில் நிர்வாகி காந்தி மீனாள் நடராசனிடம் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென பசும்பொன்னிற்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலான இ.பி.எஸ். அணியினர். இவ்வேளையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இருதரப்பிலும் தங்கக்கவசத்தை ஒப்படைக்காமல் 2017-ல் நடந்ததுபோல் வருவாய்த்துறையே தங்கக்கவசத்தை பசும்பொன்னில் சாற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

 

கும்பாபிஷேக தினத்தன்று அனைத்துக் கட்சி தரப்பிலிருந்தும் பலரும் கலந்துகொண்ட நிலையில் ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து அவருடைய மகன் பிரதீப் கலந்துகொள்ள இ.பி.எஸ். தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து முத்துராமலிங்க தேவர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்த வேளையில், ‘இ.பி.எஸ். வாழ்க!’ என்கிற கோஷம் விண்ணைப் பிளக்க. "நீ அமைச்சராக இருந்திருக்கலாம். அதுக்காக இப்படி கத்துனா ஆகாது! வந்தியா... சாமிய கும்பிட்டியான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதவிட்டு அவன் வாழ்க இவன் வாழ்கன்னு சொன்னா இருக்கமாட்ட'' என அங்கிருந்த மக்களால் ஆவேசமாக விரட்டியடிக்கப்பட்டார் ஆர்.பி.உதயகுமார்.

 

The interesting thing that happened in Devar Guru Puja!

 

இதேவேளையில், அபிராமம் பேருந்து நிலைய முச்சந்தியில் இ.பி.எஸ். தரப்பு ஆட்களால் வைக்கப்பட்டிருந்த நீண்ட ஃப்ளக்ஸில் இ.பி.எஸ். முகத்தில் சாணி வீசப்பட்டது. இதனால் அந்த ஃப்ளக்ஸ் அப்புறப்படுத்தப்பட்டு அதுபோல் புதிய ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களில் ஓ.பி.எஸ். தரப்போ, "நாம்தான் இந்த சமூக மக்களின் பிரதிநிதி. நாம்தான் உண்மையான அ.தி.மு.க.' என்பதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அதற்காக ஓ.பி.எஸ்.ஸின் வருகையைக் கொண்டாட வேண்டும். ஒன்றியத்திற்கு 15 வாகனங்களாவது வரவேண்டுமென முதுகுளத்தூரில் எம்.பி. தர்மர் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியது தனிக்கதை.

 

பசும்பொன்னில் யார் கோலோச்சுவது? என்கின்ற ரீதியில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பு மண்டையைப் பிய்க்க, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸோ, ஒட்டு மொத்த சமூக மக்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்ள பசும்பொன்னில் அவர் வழக்கமாக அன்னதானம் வழங்கும் இடத்தில், புதிதாக விமான நிலைய மாடலை உருவாக்கி, அதற்கு உ.முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் எனப் பெயரிட்டு தனியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

 

இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களே இல்லை என, மாவட்டத்தின் அமைச்சரான ராஜகண்ணப்பனும் மா.செ. காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கமும், பசும்பொன்னிலிருந்து க.விலக்கு, பார்த்திபனூர் வரை ஆளுக்குப் பத்து சுவரைப் பிடித்துக்கொண்டு வரவேற்பு எழுதினர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அமைச்சர் ராஜகண்ணப்பன் எழுதும் சுவரில் மா.செ. பெயரும், மா.செ. எழுதும் சுவரில் அமைச்சர் பெயரும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டு தங்களது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தினர். இது தலைமைக்கு தெரியவர, இரண்டு பேரும் இணைந்தே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். “இன்று பொதுவாழ்க்கையிலும், அரசியலிலும் பலர் ஜொலித்துக் கொண்டிருப்பதற்கு முழு மற்றும் முதல் காரணம் தேவர் திருமகனாவார்” என்றார் அமைச்சர் துரைமுருகன்.

 

அதற்கடுத்து இ.பி.எஸ். தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்டோர் அமைதியாக வந்து அஞ்சலி செலுத்த, பின் அங்கு வந்த ஓ.பி.எஸ்., முத்துராமலிங்க தேவருக்கு வெள்ளிக்கவசம் வழங்கி, அதனை முக்கிய நாட்களில் அணிவிக்குமாறு வேண்டிக் கொண்டு உருத்திராட்ச மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ச்சியாக, வைகோ, பா.ஜ.க. அண்ணாமலை, அ.ம.மு.க. தினகரன், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, சசிகலா என அஞ்சலி செலுத்திய வண்ணமிருந்தனர்.

 

படங்கள்: விவேக்

 

 

Next Story

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அன்பில் மகேஷ் மரியாதை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Anbil Mahesh respects the statue of Muthuramalinga Thevar

 

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு‌.மதிவாணன் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜ், செங்குட்டுவன்,  மூக்கன்,  லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், ராஜ் முகமது, மணிவேல்,  சிவாகுமார் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

 

Next Story

“எங்கள் கட்சி ஒரு குடும்பம் போல் இருக்கிறது” -  சசிகலா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Sasikala says Our party is like a family

 

பசும்பொன் முத்தராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்தராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சென்னையில் இருந்து வி.கே. சசிகலா நேற்று (29-10-23) மதுரை வந்தார். 

 

இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பசும்பொன்னுக்கு வராத எடப்பாடி பழனிசாமி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மட்டுமே வருகை தந்துள்ளார். இது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்த தவறும் இல்லை. தேர்தல் நேரத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

 

யார் பிரதமராவது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டியது. எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆகவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அவர்களது ஆசையை கூறுவது எந்த தவறும் இல்லை. எங்கள் கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தை போல் தான். அதனால், ஓ.பி.எஸ் விருந்தாளி இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பாக நான் தொடர்ந்த சிவில் வழக்கில் இதுவரை தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. இந்த விபரத்தை தான் அவர்கள் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர்” என்று கூறினார்.