Skip to main content

இந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகத்தை நாசமாக்கி வரும் கரோனா தொற்று இந்தியாவில் தென்படத் தொடங்கிய நிலையிலேயே, 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கியது. அதேபோல், பங்குச் சந்தையும் கடுமையான சரிவைச் சந்தித்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால், அரசுக்குக் கிடைக்கும் வருவாயிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், 21 நாள் முடக்கத்தை ஏழை-எளிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியுடன், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம், பத்து அம்சத் திட்டத்தை மத்திய அரசுக்கு ஆலோசனையாக வழங்கி இருந்தார். அதில், கிஷான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தவேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும்.

 

bjp



ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கவேண்டும். அனைத்து வார்டுகளிலும் பிரத்யேக பதிவு அலுவலகங்கள் திறந்து, உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். எல்லா வகையான வரிகளையும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான காலத்தை ஜூன் 30ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கியிருந்தன.

ஏற்கனவே, எந்த வங்கிக்கிளையின் ஏ.டி. எம்.மில் பணம் எடுத்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் மார்ச் 31ந்தேதியில் இருந்து ஜூன் 30ந்தேதியாக மாற்றம் என நிதியமைச்சர் நிர்மலா கீதாராமன் அறிவித்திருந்த நிலையில், ப.சிதம்பரத்தின் இந்த ஆலோசனைப் பட்டியல் சாமான்ய மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தியது.

மார்ச் 26ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கரோனா தொற்று ஏற்பட்டு நாடே முடங்கியிருக்கும் நிலையில், ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1லட்சத்து 70 ஆயிரம் கோடியை நிதியாக ஒதுக்குவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம். மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய். மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தில் இருந்து, ரூ. 2 ஆயிரம் உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும் எனத் தொடங்கி பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பெண்கள், முதியோர், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் சார்ந்த குறைந்தபட்ச உதவியாக இது அமைந்தது. பி.எஃப் திட்டத்திலும் ஒரு சில உதவிகளை செய்ய முன்வந்துள்ளது மத்திய அரசு.


நாடு முழுவதும் ஊரடங்கு என்பதால் உணவு அடிப்படைத் தேவையாக உள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். கரோனா தொற்று சமயத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருந்தன.

 

 

rbi governor



அதேசமயம், இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை, வங்கிக் கடன் தவணை உள்ளிட்டவற்றைப் பற்றி நிர்மலா கீதாராமன் தனது அறிவிப்பில் வாய்திறக்கவில்லை. மாதாந்திர வருமானம் ஈட்டுவோருக்கு இதனால் சிக்கல் இல்லையென்றாலும், அன்றாட வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள் இன்னலுக்கு ஆவார்கள் என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும், வங்கிகள் வட்டி வசூலிக்கத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவை, தன்னாட்சி அமைப்பான ஆர்.பி.ஐ. உறுதி செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 0.7 சதவீதம் குறைத்து அறிவித்திருப்பதன் மூலம் கடன்களுக்கான வட்டி ரத்தாகாமல் குறைய மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல், வங்கித் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவை பலரும் வரவேற்கின்றனர்.


இந்நிலையில், மோடி அரசின் முதற்கட்ட செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் பாராட்டியுள்ளபோது, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான மத்திய அரசின் திட்டத்தை கவனத்துடன் வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் அறிவிப்புகளில் சில நான் அறிவித்த 10 அம்சத் திட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், வரி செலுத்துவதற்கான கெடு, ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இதுவொரு அடக்கமான திட்டம். நிச்சயம் இது போதவே போதாது என்பதை அரசு கூடிய விரைவில் உணரும் என்று அவர் நிதியமைச்சரின் அறிவிப்பை விமர்சித்துள்ளார்.

இன்னொருபுறம், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மதிப்பீட்டளவில் ரூ.1.7 லட்சம் கோடி என்று இருந்தாலும், மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்யாமல் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக பல லட்சம் மக்களுக்கு பலன்தராமல் போகக்கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


-ச.ப.மதிவாணன்

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.