Skip to main content

கடும் நெருக்கடி நிலையில் இந்தியா... அதிருப்தியில் இருக்கும் மோடி... மத்திய உள்துறை எடுத்த அதிரடி முடிவு!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


கரோனா பரவலில் மூன்றாம் நிலைக்கு இந்தியா நகர்ந்து விட்டதாக அபாய சங்கினை ஊதுகிறது உலக சுகாதார நிறுவனம். மத்திய சுகாதாரத் துறையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் பிரதமர் அலுவலகத்துக்கு எச்சரிக்கை செய்தபடியே இருக்கின்றன.

இந்த இரு துறைகளின் வல்லுநர்களிடமும் உயரதிகாரிகளிடமும் விவாதித்த பிரதமர் மோடி, கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மூன்றாம் நிலை பரவுதலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது, தேசிய ஊரடங்கை குறைந்தபட்சம் இன்னும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை.
 

 

 

admk



கண்காணிக்கப்படுபவர்களில் 100 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் குறைந்தபட்சம் 23 பேருக்குத் தொற்று உறுதி என்னும் ரிசல்ட் வருகிறது. அதனையடுத்து அந்த நபர்கள் எங்கெல்லாம் சென்று வந்துள்ளார்கள் என ஆராயும்போது அவர்களுடன் தொடர்புள்ளவர்களையும், அந்த நபர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும், அவர்கள் பயணித்த இடங்களில் அவர்களுக்குத் தொடர்பில்லாதவர்கள் யார் யார் இருந்தார்கள் என்பதையும் கண்டறிவது மிகக் கடினமாக இருக்கிறது. வெளிநாட்டுப் பயணர்களுடன் நேரடி தொடர்பில்லாதவர்களுக்கும் தொற்று உள்ளது என விவரித்துள்ளனர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினர். மேலும், தனிமைப் படுத்திக்கொள்வதைத் தவிர வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், உயிரிழப்புகள் அதிகரித்தப் பிறகே இந்த கரோனா அமைதியாகும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில், சமூக நெருக்கடி நிலையில் தேசம் சிக்கியிருப்பதால் கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியதிருக்கிறது என்பதைத் தெரிவித்தார்‘ என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

ஏப்ரல் 11-ந்தேதி மாநில முதல்வர்களுடன் மீண்டும் விவாதித்துவிட்டு தனது முடிவுகளை அறிவிக்கவிருக்கிறார் மோடி. இதற்கிடையே, பொருளாதார நெருக்கடியும் அதிகரித்துள்ள நிலையில் அரசுகளுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உருவாகிவிடமால் இருக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை.

 

bjp



மத்திய அரசிடமிருந்து தினந்தோறும் வரும் உத்தரவுகளுக்கேற்ப அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஒவ்வொரு பணிகளையும் கவனிக்கத் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்களுடன் 9-ந்தேதி விரிவாக விவாதித்தார் எடப்பாடி. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்பட 12 குழுவிலுள்ள உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கரோனா தொற்று பற்றிய முழு விவரங்களையும் விவரித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

 

http://onelink.to/nknapp

 

admk



அப்போது, வெண்டிலேட்டர், உடல் பாதுகாப்பு ஆடைகள், காய்ச்சல் மருந்துகள், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், ஐ.வி. திரவங்கள், பி.சி.ஆர்.கிட்ஸ் உள்ளிட்டவைகளில் தட்டுப்பாடு இருப்பதாகத் தனக்கு வரும் புகார்களை எடப்பாடி தெரிவித்தபோது, மருந்துகளும் பாதுகாப்புக் கவசங்களும் போதுமான அளவில் இருப்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் விவரித்த பீலாராஜேஷ், வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் விவரித்தார்.

குறிப்பாக, மாநில அரசின் சார்பில் 2,500 வெண்டிலேட்டர்கள் பர்சேஸ் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதையும், மத்திய அரசும் தங்களிடம் இருக்கும் வெண்டிலேட்டர்களில் 20,000 கொடுத்து உதவ முன்வந்திருப்பதையும் இவை ஓரிரு நாளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும் என்பதையும் தெரிவித்திருக்கிறார். தவிர, 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துள்ளதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் பீலா ராஜேஷ்.

இந்தச் சூழலில், அத்யாவசியப் பொருட்களின் உற்பத்தியைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள், உற்பத்தி நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக் குறை இருப்பதை நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அப்போது, பாதுகாப்பு கவசங்களுடன் குறைவான ஆட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார் எடப்பாடி. மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து எடப்பாடி கேள்வி எழுப்ப, அரிசி கார்டுதாரர்களில் 96 சதவீதம் அரசு அறிவித்த 1000 ரூபாய் நிதி உதவியும் இலவசப் பொருட்களும் கொடுக்கப்பட்டுவிட்டன. வீடுகளுக்கே சென்று பணம் கொடுக்கப்பட்டதை மக்கள் வரவேற்கின்றனர். தமிழக கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களிலும் 80 சதவீதம் பேருக்கு நிவாரண பொருட்கள் தரப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் 2 நாட்களில் கொடுக்கப்பட்டு விடும் எனப் பல்வேறு புள்ளிவிபரங்களுடன் விவரித்த உணவுத்துறை அதிகாரிகள், ரேசன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ஒருமுறை நிதி உதவியும் நிவாரண உதவியும் செய்வது அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதே போல, சட்டம் ஒழுங்கு, தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பு, மத்திய அரசுடன் ஆலோசனை, தகவல் தொழில் நுட்பத் துறை மூலம் மக்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார் எடப்பாடி. அனைத்துக் குழுக்களும் ஒரே குரலில், ’மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெறுங்கள்; நிதியில்லாமல் சமாளிப்பது கடினம் என உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

வைரஸ் கட்டுப்படுத்துவதன் தன்மை குறித்து விசாரித்த எடப்பாடியிடம், மூன்றாம் நிலைக்கு தமிழகமும் தள்ளப்பட்டிருக்கிறது. முழுமையாக அவை ஆக்கிரமிக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.