Skip to main content

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

உடலுக்குள் இயங்கும் இரத்த ஓட்டமும் சுவாசமும் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதில் ஒன்று பழுதடைந்தால் மரணம் நிச்சயம். அப்படியொரு நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதை மூடிமறைக்கத்தான் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்து "பாகிஸ்தானுடன் போர்' என்கிற பூச்சாண்டியை காண் பித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். சுதந்திரதின விழாவில் பேசிய மோடி, முப்படைகளுக்கும் ஒரே தலைவர் என்று அறிவித்திருப்பது கூட பொருளாதார வீழ்ச்சிக்கு எதிரான கொந்தளிப்பை அடக்குவதற்குரிய ராணுவ ஆட்சிக்கான ஆரம்ப முயற்சி என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

 

bjp



"மனித நாகரிகம் தொடங்கிய முதல் நூற்றாண்டு முதல் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆக்கிரமிக்கும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகின் செல்வ செழிப்பான நாடுகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. உலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 25 சதவிகித பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. அன்று 25 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு பொருட்களின் உற்பத்தி... பிரிட்டிஷ்காரன் இந்தியாவை விட்டுப் போன 1947-ஆம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வெறும் 4.2 சதவிகிதமாக ஆகியிருந்தது. அதன்பிறகு சோவியத் யூனியனின் உதவியுடன் பாது காக்கப்பட்ட பொருளாதாரமாகத்தான் இந்தியா வளர்ந்தது. 1991வரை அப்படியே இருந்தது. 1991ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக் கடியை சந்தித்தது. அதை சமாளிக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நிதியமைச்சராக மன்மோகன்சிங்கை கொண்டு வந்தார்.

இந்தியா தன்னிடம் இருந்த தங்க இருப்பை கப்பலில் ஏற்றி அனுப்பி உலக வங்கிக் கடனை சமாளித்தது. அதற்குப் பிறகு தாராளமயமாக்கல் என்ற பெயரில், சோவியத் யூனியன் மாடல் கைவிடப்பட்டு அமெரிக்க மாடலை பொருளாதாரத்தில் கொண்டு வந்தார் மன்மோகன்சிங். அந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நரேந்திர மோடியின் ஆட்சியில் தான் சந்திக்கிறது'' என்கிறார் பிரபல பொருளா தார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

 

bjp



"இன்றைய இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்கு உலக அளவில் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் வர்த்தக போரும் ஒரு காரணம். உலக அளவில் உற்பத்தி அளவு 2018-ல் 3 சதவிகிதமாக இருந்தது. அது 2 சதவிகிதமாக குறைந்து விட்டது. அதன் எதிரொலிதான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1991-ல் ஏற்பட்டது போலவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை எட்டாக் கனியானது. ஆனால் அதை சமாளிக்க இந்தியாவால் முடிந்தது. இன்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது'' என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். இந்தியா என்பது இன்றளவிலும் கிராமப் புறத்தை சேர்ந்த பொருளியல் அமைப்பு ஆகும். பருவ மழை பொய்த்தது, கிராமப்புறங்களை பெருமளவு பாதித்திருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை குறைந்தபட்ச விலை தந்து வாங்குவதில் மத்திய அரசு தோல்வியடைந்திருக்கிறது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சிதிலமடைந்திருக்கிறது. கிராமங்கள்தான் வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்திக்கான பொருட்களை தருகின்றன. அத்துடன் இந்தப் பொருட் களை வாங்கும் சந்தையாகவே இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒருநாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது என்றால் அந்த நாட்டின் வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும். இது பொருளியல் வல்லுநர்களின் வாய்ப்பாடு. அதன்படி பார்த்தால் 1991-க்குப் பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

ஒரு இடத்தில் நடக்கும் உற்பத்தி இன்னொரு இடத்திற்கு அனுப்பப்பட்டு அதை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் அனுபவிப்பார்கள். அந்த உற்பத்தி பகிர்வு -நுகர்வு என்கிற பொருளாதார சங்கிலி இந்தியாவில் அறுந்துவிட்டது. இது இந்தியாவை மிக மிக மோசமான நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டது. "எப்படி இது நடந்தது' என விளக்குகிறார் ஒரு உற்பத்தியாளர்.

 

bjp



விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதார விலை அவன் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கிடைக்காமல் போனதால் கிராம பொருளாதாரம் சீர்குலைந்தது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவ தற்கு முன்பு உள்ள 2008 முதல் 2012 வரையான காலகட்டம், இந்திய பொருளாதாரத்தின் வசந்த காலமாக இருந்தது. கிராமப்புறத்தில் வேலைக்கான சம்பளம் ஒவ்வொரு வருடமும் உயர்ந்தது. ஒரு வருடம் 100 ரூபாய் சம்பாதித்தவன் அடுத்த வருடம் 106 ரூபாய் சம்பாதிப்பான். நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு நிலைமை தலைகீழானது. வருடத்திற்கு 6 ரூபாய் அதிகம் பெற்ற கிராமத்தானின் வருமானம் வெறும் 87 காசு களாக சுருங்கியது. விவசாயம் சாராத தொழில் களை செய்த கிராமத்தினர் அவர்கள் பெற்ற நூறு ரூபாய் சம்பளத்திற்கு அடுத்த வருடம் வெறும் 25 பைசாதான் அதிகம் பெற்றனர். நகர்ப்புற தொழி லாளர்கள். அவர்கள் பெற்ற 100 ரூபாய் சம்பளத்தில் 2 பைசாவை இழந்தார்கள். இது மக்களின் வாங்கும் சக்தியை பெருமளவில் பாதித்தது. இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான். அது மக்கள் மனதில் ஆறாத வடுவை உருவாக்கியது.


2018-19-ல் புதிய கார்களை வாங்கியவர்கள் 36 லட்சம் பேர். அதே நேரத்தில் பழைய கார்களை வாங்கியவர்கள் 40 லட்சம் பேர். புதிய காரின் விலைக் குப் பழைய காரே போதும் என கார் வாங்கும் வசதி பெற்ற பணக்காரர்களே நினைக்கும் அளவிற்கு நரேந்திர மோடி கொண்டு வந்து விட்டார். வாங் கும் சக்தி குறைவினால் மட்டும் 2018ஆம் ஆண்டு 14 சதவிகிதமாக இருந்த அனைத்துப் பொருட்களின் விற்பனை 2019-ஆம் ஆண்டு 11 சதவிகிதமாக குறைந்து விட்டது என்கிறது "நீல்சன்' என்கிற சந்தையை ஆய்வு செய்யும் நிறுவனம்'' என்கிறார். அத்துடன் ""மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. மசோதா ஒட்டுமொத்த உற்பத்தியை பாதித்துவிட்டது. உதாரணத்திற்கு மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு எமனாகும் புகையிலைப் பொருட்களுக்கு விதிப்பது போல 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை மோடி அரசு கார்களுக்கு விதித்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரியை தாண்டி 22 சதவிகிதம் செஸ் வரி வேறு விதிக்கப் படுகிறது. மகிந்திரா கம்பெனியின் உரிமையாளர், "கார்கள் மீது விதிக்கப்படும் 22 mmசதவிகிதம் செஸ் வரியை 17 சதவிகிதமாக்குங்கள். சிறிய கார்களுக்கு செஸ் வரி போடாதீர்கள். இதனால் அரசுக்கு பெரிய வருமான இழப்பு வராது' என கோரிக்கை வைத்தார். அதற்கான பேச்சுவார்த்தையை கடந்த வாரம் வரை தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கூட கார் உற்பத்தியாளர்கள் பேசி பார்த்தார்கள். பலன் கிடைக்கவில்லை. நரேந்திர மோடி இதே அணுகுமுறையை கடைப்பிடித்தால் "2022-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உற்பத்தி தொழிற்சாலைகளின் உலக தலைநகரமாக மாற்றுவேன்' என்கிற அவர் உறுதிமொழி, கார் உற்பத்தி தொழிற்சாலைகளின் பங்களிப்பில்லாமல் நடக்காது. எனவே அரசு வரி விஷயத்தில் இறங்கி வரவேண்டும்'' என்கிறார் கார் உதிரி பாக உற்பத்தி சங்க தலைவர் அசோக் கபூர்.


கார்கள் மட்டுமல்ல இந்தியாவில் இப்பொ ழுது ஏழைகளின் வாகனமாக இருக்கக்கூடிய இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி 17 சதவிகிதம் குறைந்துவிட்டது. 100 மோட்டார் சைக்கிள்கள் தயாரித்த நிறுவனங்கள் தற்பொழுது 88 மோட்டார் சைக்கிள்கள்தான் தயாரிக்கின்றன. இதற்கு ஒரு எதிர்வினை உண்டு. சுமார் எட்டரை லட்சம் கோடி முதலீட்டில் இயங்கும் ஆட்டோ மொபைல் தொழிலை நம்பி 3.2 கோடி பேர் வேலை செய்கிறார்கள். இந்தியா வின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதம் வரும் இந்தத் துறையில், கார் உற்பத்தி மட்டும் இரண்டு லட்சம் குறைந்திருக்கிறது. உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படாத கார்களின் மதிப்பு மட்டும் 35,000 கோடி. விற்கப்படாத இரு சக்கர வாகனங்களின் மதிப்பு 17,000 கோடி. விற் பனை 20 சதவிகிதம் குறைந்துவிட்டது என கூக் குரல் இடுகின்றன ஆட்டோ மொபைல் கம்பெனிகள்.

கார் உள்ளிட்ட மோட்டார் வாகன உற் பத்தி துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில், இத்துறையின் வேலை இழப்போரின் எண் ணிக்கை 10 லட்சமாக இருக்கும் என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள் ளது. இதனை உறுதி செய்வது போல பிரபல நிறுவனமான டி.வி.எஸ். லூகாஸ் தற்போதைய வியாபார மந்த நிலையை காரணம் காட்டி, வேலை நாட்களைக் குறைத்து சுற்றறிக்கை வெளியிட்டுள் ளது. பெரிய நிறுவனங்கள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை... முதலாளி- தொழிலாளி இரு வர்க்கத்தையும் கடுமையாக பாதிக்கும்.

நரேந்திர மோடியால் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் இன்னொரு துறை ரியல் எஸ்டேட் துறை. 2018ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் வங்கிகளை தாண்டி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பண உதவி செய்து வந்த ஒக & எந என்கிற கம்பெனி யும் கேவான் ஹவுசிங் பைனான்ஸ் என்கிற கம்பெனி யும் திவாலாகின. அத்துடன் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு தப்பி ஓடினார்கள். ஒக & எந கேவான் கம்பெனிகள் திவாலானதால் 60,000 கோடி ரூபாய் பணம் மார்க்கெட்டில் புழங்குவது நின்று போனது. வங்கிகள் லோன் வழங்குவதை 50 சதவிகிதம் நிறுத்திக் கொண்டன. ரியல் எஸ்டேட் கட்டுமான துறைகள் ஸ்தம்பித்து போய் நிற்கின்றன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர், தனது துறை சார்ந்த தொழில் முதலீடுகளில் ஏற் பட்ட கடன் நெருக்கடியில் சென்னை மயிலாப்பூர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள் வது தொழில்களின் நிலைக்கு மரண சாட்சியானது.

இது போன்ற பொருளாதார நெருக்கடிகளை 91ஆம் ஆண்டு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் எதிர் கொண்டார்கள் நரசிம்மராவும் மன்மோகன்சிங்கும். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத் தேவை, உறுதியான நிர்வாக சீர்திருத்தங்கள். அதை எளிய மக்களின் தலையில் சுமத்தாமல், சாதுர்யமாக செய்வதற்குரிய உறுதியான பார்வை, நரேந்திர மோடிக்கு இல்லை. அவரது பார்வை ஒரே தேசம் என்ற கூட்டாட்சிக்கு எதிரான ராணுவ பாணி ஆட்சியை கட்டமைப்பதில் உள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.