Skip to main content

தென்னை மரத்தை வேப்ப மரமாக மாற்ற முடியாது... அமித்ஷாவே வந்தாலும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியாது - இமையம் தடாலடி!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

dfg

 

சென்னை ஐஐடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் அறிவுறுத்தல் கடிதத்தை சென்னை ஐஐடி இயக்குநருக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், இதுவரை நடைபெற்றிருந்த ஒரு முறையை திடீரென மாற்றுவது, கேட்டால் இது மத்திய அரசின் நிறுவனம் என பதில் அளிக்கிறார்கள் என்று சில சமூக ஆர்வலர்கள் ஐஐடி-க்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இந்நிலையில் சென்னை ஐஐடியின் நடவடிக்கை தொடர்பாக எழுத்தாளர் இமையம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

 

"சென்னை ஐஐடியில் இந்த மாதிரியான நிகழ்வுகள் இது முதல் முறையல்ல, பல முறை இது மாதிரியான வேறு வேறு தவறுகளை அந்நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. அதை நடத்துவது ஒன்றிய அரசாக இருக்கலாம், இல்லை தமிழக அரசாக இருக்கலாம் என்பது முக்கியமில்லை, அது செயல்படுவது மக்கள் வரிப்பணத்தில். எனவே பாரம்பரியமாகச் செய்யப்பட்டு வரும் ஒரு முறையை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தான்தோன்றித்தனமாக மாற்றுவது என்பது ஏற்புடையது அல்ல, இது வன்மையான கண்டனத்துக்குரியது. 

 

மேலும் சென்னை ஐஐடியில் பெரியார் படிப்பகம், அம்பேத்கர் படிப்பகம் முதலியவற்றை எல்லாம் இவர்கள் ஒழித்துக்கட்டி நாங்கள் சொல்லுவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை அவர்கள் தொடர்ந்து பின்பற்ற, அதைப்பற்றி அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள அவர்களால் ஆன அனைத்து தடைகளையும் ஏற்படுத்தி பார்க்கிறார்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவர் வந்தாலும், பிரதமர் வந்தாலும் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்பது காலம் தொட்டு நடைபெற்று வருகின்ற ஒரு நிகழ்வு.

 

அதை மாற்றுவது என்பது பண்பாட்டை குழிதோண்டி புதைப்பதைப் போன்றது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் மொழி சார்ந்த கொள்கைகளில் இருவருமே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். இந்தியைத் திணிப்பது அல்லது பிற மொழியைத் திணிப்பது என்பது நிர்வாக ரீதியான குழப்பங்களை அது ஏற்படுத்தும். ஆனால் அது எதைப்பற்றியும் இந்த மாதிரியான நிறுவனங்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஒன்றிய அரசின் அலுவலகங்களில் எல்லாம் இந்தியை முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் இத்தகைய செயல்பாட்டில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இது அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியை நேசிக்கும் மக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 

 

இரு மொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட நம்மை, மற்றொரு மொழியைப் படி என்றோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. நானாக விரும்பி படிப்பது என்பது வேறு, கட்டாயப்படுத்தி படிக்க வைப்பது என்பது வேறு. 100 அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் இந்தியை அமல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவன் எதற்கு வேலைக்கு வர வேண்டும். தற்போதைய தமிழக அரசு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

 

எனவே மாணவர்கள் தமிழை நோக்கிய தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர். தென்னமரத்தை வேப்ப மரமாக மாற்ற முடியாதது எவ்வளவு உண்மையோ, அது போல தமிழ்நாட்டில் இந்தியை எப்போதும் திணிக்க முடியாது. தமிழக மக்களும், மாணவர்களும் மற்ற இடங்களைப் போல் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை, அனைவரும் விவரம் தெரிந்தவர்கள். எனவே எத்தனை ஆண்டுகள் இவர்கள் இந்தியைத் திணிக்க முயற்சி செய்தாலும் தோல்விதான் அவர்களுக்கு மிஞ்சும் என்பது மட்டும் உண்மை. 


 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.