Skip to main content

சோதனை என்ற பெயரில் நடிகர் விஜயை வீட்டுச்சிறையில் வைத்தார்கள் - இடும்பாவனம் கார்த்திக் பேச்சு!

Published on 11/02/2020 | Edited on 12/02/2020

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

நடிகர் விஜய், பைனாஸ்சியர் அன்புச்செழியன், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்றது. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய காரிலேயே சென்னை அழைத்து வந்தனர். இந்த சம்பவம் தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உங்களுடைய கருத்து? 

வருவானவரிச் சோதனைகளை பற்றி நாம எதுவும் பேசுவதற்கில்லை. ஆனால் வருமான வரிச்சோதனையில் பின்னால் இருக்கும் அரசியலை நாம் பேச வேண்டியுள்ளது. வருமான வரித்துறை தன்னிச்சையான அமைப்பு என்று சொல்லப்படுகின்றது. அப்படி தன்னிச்சையான அமைப்பாக இருந்தால் அதன் சோதனை யாருக்கும் சார்பில்லாமல் இருக்க வேண்டும். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தினீர்கள் என்றால் அவர் தன் மீது தவறில்லை என்றால் அதை அவர் நிரூபிப்பார். ஆனால் இந்த சோதனையின் பேரில் அவரை தற்போது நடத்தியவிதம் கண்டிக்கத்தக்கது. அவரை ஏதோ குற்றவாளிகளை நடத்துவதை போல் நடத்தினார்கள். அவர் என்னவோ கொலை, கொள்ளை செய்தது போல அவரை தேவையில்லாமல் இம்சித்தார்கள். அவரிடம் வருமானவரிச் சோதனை செய்ய வேண்டுமானால் அவரின் வீட்டிற்கு சென்றிருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அவருடைய படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது. பணம், நகைகளை அவர் படப்பிடிப்பு தளத்திற்கா எடுத்து சென்றுள்ளார். அவரை பெரிய குற்றவாளிகளை போல சித்தரித்து வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார்கள். இவரை வீட்டு சிறையில் வைத்ததை போன்ற நிகழ்வை அவர்கள் உண்டாக்கினார்கள். இன்றைக்கு எங்கு சோதனை நடைபெற்றாலும் சோதனைக்கு உள்ளாகுபவரின் இயல்பு வாழக்கை முடங்காதவாறு சோதனை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

jkl



ஆனால் அவர் சொல்லியபடி விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றதா என்றால் இல்லை. வீட்டில் சிறைவைத்தது போல அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது. வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகள் இன்று மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்து வருவதாக முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே தெரிவித்துள்ளார். வருமானவரித்துறை நேர்மையாக செய்படுவதாக சொல்லும் இன்றை மத்திய அரசு, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் ஒரு ஆண்டில் 16000 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்களே, அங்கே ஏன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. அங்கே வருமானவரித்துறை அதிகாரிகள் ஒப்புக்காகவாது சோதனை நடத்தியிருக்கலாம் அல்லாவா? ஏன் சோதனை நடத்தவில்லை. பாஜகவை ஆதரிப்பவர்கள் யார் மீதாவது வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளாதா? சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தார்கள். ஆனால் தற்போது அந்த வழக்கின் கதி என்ன. அந்த வழக்கையே கைவிட்டுவிட்டார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். என்ன நடந்தது, எதுவும் நடக்கவில்லை. வருமானவரித்துறை என்பதை பழிவாங்குவதற்கும், தன்னை பிடிக்காதவர்களை மிரட்டுவதற்கும் மட்டுமே மத்திய அரசு பயன்படுத்துவதாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த வரிமானவரித் சோதனை என்பதே எங்களை எதிர்த்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்பதை  சொல்லாமல் சொல்வதற்குத்தான் இந்த சோதனை என்ற பூச்சாண்டியை தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது காட்டுகிறார்கள்.

 

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'கடலில் கலந்த எண்ணெய்யை மீனவர்களை விட்டு அள்ள வைப்பதா' - சீமான் கண்டனம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
'Don't keep the fishermen clean  the oil mixed in the sea'-seaman condemned

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணூரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் கலந்திருக்கும் எண்ணெய் கழிவுகள் பல இடங்களில் மீனவர்களை வைத்து அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர்களை வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், 'சிபிசிஎல் நிறுவனத்தின் தவறால் வெளியேறி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை மீனவ மக்களை வைத்து அள்ளுவது கண்டனத்திற்குரியது. அவ்வாறு செய்யக்கூடாது. உரிய பாதுகாப்பு கருவிகளுடன், முறையான பயிற்சி பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.