Skip to main content

எனக்குத் தேவை ரிசல்ட்! -அமித்ஷா அதிரடி ஆர்டர்

Published on 16/04/2021 | Edited on 16/04/2021
ddd

 

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு திரும்பியிருந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் நிலவரம் குறித்த அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டேயிருந்தார். அமித்ஷாவிடம் தமிழகம் குறித்து அவர் விவாதித்தபோது,’’கிடைக்கிற தகவல்கள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருந்தாலும், தமிழகத்தில் தாமரையை மலர வைத்தாக வேண்டும்’ என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.

 

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ஏற்கனவே பல வியூகங்களை வகுத்து கொடுத்திருந்த அமித்ஷா, பிரதமர் மோடியின் அழுத்தங்களுக்குப் பிறகு,’’"என்னவேனாலும் பண்ணிக்கோங்க; ரிசல்ட் பாசிட்டிவ்வாக இருக்கணும்' என்கிற உத்தரவை மட்டும் தமிழக டீமிற்கு பாஸ் செய்திருந்தார். குறிப்பாக, "தேர்தல் ஆணையம், மத்திய உளவுத்துறை, காவல்துறை ஆகிய 3 அதிகார அமைப்புகளிடமிருந்தும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே அந்த உத்தரவின் மறைமுகப் பொருள்' என்கிறது பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் வட்டாரம்.

 

ddd

துகுறித்து மேலும் விசாரித்தபோது, "தமிழகம் பெரியார் மண்; சுயமரியாதை பூமி. இங்கு, பா.ஜ.க.வின் தந்திரங்கள் செல்லாது என்கிற தி.மு.க. உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் அழுத்தமான பதிவுகளை உடைக்கவேண்டும்' என்பதே மோடி -அமித்ஷா -ஜே.பி.நட்டா ஆகிய மூவர் அணியின் கனவு. அதற்கேற்ப, கடந்த 2 மாதங்களாக பல்வேறு மறைமுக திட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. குறிப்பாக, பல தொகுதி களில் ஆர்.எஸ்.எஸ். குழு களமிறக்கப்பட்டது.

 

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு பிடித்து தங்கும் அவர்கள், பெட்டிக்கடை கள், டீக்கடைகள், சலூன் கடைகள் உள்பட சாமானியர்கள் கூடும் இடங்களில் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினருக்கு மேலானவர்கள் கூடும் நவநாகரிக இடங்கள்வரை ஊடுருவி அரசியல் பேசினர். நடுத்தர வர்க்கத்தினரிடம் மூளைச்சலவையும் செய்தார்கள். இதன்பலன் என்னவென்பதை அறிந்து டெல்லிக்கு தகவல் தந்தபடி இருந்தது மத்திய உளவுத்துறை.

அதன் ரிசல்ட்டுகள் பாசிட்டிவாக இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் குறிப்பிட்ட 10 தொகுதிகளில் வெற்றியை உறுதிசெய்ய என்னென்ன வேண்டும் என பொறுப்பாளர்களிடம் விவாதித்திருக்கிறார் அமித்ஷா. அப்போது, ஐந்து அம்சங்கள் கொண்ட ப்ளான்கள் போடப்பட்டு அமித்ஷாவிடம் கொடுக்கப்பட்டது. அதாவது, மிகப்பெரிய கட்டிடம் கட்டும்போதோ அல்லது நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளின்போதோ போடப் பட்டும் ப்ராஜெக்ட் எஸ்டிமேட் மாதிரி ப்ளான்கள் போட்டப் பட்டிருந்தன. அதிலுள்ள ஒவ்வொரு விசயமும் எதற்கானது? என விசாரிக்கும்படி நட்டாவிடம் சொல்லியிருந்தார். அதனை முழுமையாக விசாரித்து ரிப்போர்ட் தந்திருந்தார் நட்டா.

 

அதன்படி, அவைகளுக்கு அனுமதியளித்த அமித்ஷா, அதற்கான உதவிகளைச் செய்யுமாறு உளவுத்துறையிடமும் அறிவுறுத்தியிருந்தார். அந்தவகையில், இந்த தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பணிகள் அனைத்திலும் பா.ஜ.க. ஸ்கோர்பண்ணியிருந்தது. ஆனால், இவைகள் எதுவுமே திராவிட கட்சிகளுக்குத் தெரியக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது டெல்லி.

 

இந்தநிலையில்... கடந்த 2-ந் தேதி இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை மதுரையில் துவக்கிய பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேர்தல் நிலவரம் குறித்து கேட்க, "கருத்துக் கணிப்புகள்தான் பயமுறுத்துகின்றன' எனச் சொல்லி சோகமாகியிருக்கிறார் எடப்பாடி. அப்போது அவருக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி, "கருத்துக் கணிப்புகளால் தி.மு.க. உற்சாகத்தில் இருக்கட்டும். கணிப்புகள் மீது கவனம் வைக்காமல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மட்டும் பேசுங்கள்' என அட்வைஸ் செய்திருக்கிறார். அப்போது, "அதனைத்தான் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்' எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி

 

 

இந்தச்சூழலில், தமிழக பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய மோடியிடம், மார்ச் 30 மற்றும் 31-ந் தேதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட் காட்டப்பட்டது. அதில், தாமரை ஒரு இடத்திலும் மலரவில்லை. அதனைத் தொடர்ந்துதான் அமித்ஷாவிடம், பிரதமர் மோடி ரிப்போர்ட்டின் சாரம்சத்தை சுட்டிக்காட்டிவிட்டு, "எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 தாமரைகளையும் மலர வைத்தாக வேண்டும்' எனச் சொல்ல... அதன் பிறகே, "என்ன வேணாலும் பண்ணிக்கோங்க; எனக்கு ரிசல்ட் முக்கியம்' என தமிழகத்திற்கு தகவல் பாஸ் பண்ணினார் அமித்ஷா''‘என்று தெரிவித்தனர் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் குழு.

இதற்கிடையே, "ஸ்டாலின்தான் வர்றாரு' என்கிற ஸ்டிக்கர், ப்ளக்ஸ் பேனர்கள் அனைத்தும் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள ஈவன் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய்க்கு தி.மு.க. கொடுத்துள்ள விளம்பர ஆர்டர்கள் பற்றிய புகார்கள் அமித்ஷாவிற்குப் போயிருக்கிறது.

தவிர, தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் பல தொழிலதிபர்களிடமும் தி.மு.க. தரப்பில் தேர்தல் நிதி பெற்றிருப்பதாகவும், அதனை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் கையாளுகிறார் என்பதையும் சம்மந்தப்பட்ட தொழிலதிபர்களே பிரதமர் மோடிக்கு தகவல் பாஸ் செய்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான், கடைசி 4 நாட்களில் களத்தில் பணத்தை இறைக்க தி.மு.க. திட்டமிடுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவது நல்லது எனவும் தமிழக பா.ஜ.க. தரப்பிலிருந்தும் டெல்லிக்கு தகவல்கள் போனது. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய சில இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியது வருமானவரித்துறை. இந்த ரெய்டுக்கான உத்தரவை மோடியும் அமித்ஷாவும் கொடுத்துவிட்டுத்தான் இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்ய தமிழகத்திற்கே வந்தனர். மே 2-ந் தேதி சில அதிர்ச்சிகள் காத்திருக்கிறது'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

தி.மு.க.வை வீழ்த்த என்னதான் பா.ஜ.க. திட்டமிட்டாலும் அதன் முகத்தில் கரி பூசப்படும் என்பதைத்தான் ரெய்டில் எதுவும் சிக்காத சூழல் காட்டுகிறது. இது, தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் தி.மு.க.வின் இரண்டாம்நிலை தலைவர்கள்.
 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; நயினார் நாகேந்திரன் உறவினர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. அதே வேளையில், அந்த பணத்திற்கும் நயினார் நாகேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அந்த பணத்தை கொண்டு சென்றவர்கள் பாஜகவினர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், நயினார் நாகேந்திரன், 'எனக்கும் அதற்கு சம்பந்தமில்லை' என கூறி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் போலீசார், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதிலும், எஃப் ஐ ஆர்-ல் சொல்லப்பட்ட பல முக்கிய தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் பாலாமணி என்பவர் தேர்தல் பறக்கும் படையில் உள்ளார். அவரது டீம்மில் காவலர்கள் பிரபாகரன், குணசீலன், வீடியோ கிராபர் மோகன்ராஜ், டிரைவர் டில்லிபாபு ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று செந்தில் பாலாமணி தேர்தல் பறக்கும் படை டீம் தாம்பரம் செக்போஸ்ட் அருகே பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், செந்தில் பாலாமணியை போனில் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் ஏ கோச் படுக்கை எண்கள் 26,27,28 ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பணம் கொண்டுச் செல்வதாக தகவல் அளித்துள்ளார். தகவலின் படி, செந்தில் டீம்  தாம்பரம் ரயில் நிலையத்துக்கு சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்துள்ளனர்.

தகவலின் படி ரயிலில் பயணம் செய்த சதீஷ், பெருமாள், நவீன் என்ற மூவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அதிக அளவு பணம் இருந்தது தெரிய வந்தது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால்  தேர்தல் பறக்கும் படை கையும் களவுமாக அவர்களை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர். அதில், 3,98,91,500  ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து சிக்கிய சதீஷ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை, திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, தன்னிடம் கொடுத்து அனுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெருமாள் என்பவரிடம் விசாரணை செய்ததில் திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் ரயிலில் வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்தப் பணம் அனைத்தையும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுத்ததாக சதீஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து பிஜேபியில் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ-வின் அடையாள அட்டையும் தேர்தல் பறக்கும் படையின கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, சிக்கியவர் கொடுத்த தகவலின் படி திருநெல்வேலி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு 22ஆம் தேதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு.. இன்றைய தினம் அவசர வழக்காக விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

இத்தகைய சூழலில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குறித்து வெளியான வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நயினார் நாகேந்திரனின் உறவினர் என சொல்லப்படும் முருகன் என்பவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது தான் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நயினார் நாகேந்திரனின் பிஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால்  சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு  பெருமாள் என்பவரை அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் குறிப்பிட்டுள்ள பெருமாள் என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான மூன்று பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக கூறியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.